"உலகத்தின் தூக்கம் கலையாதோ
உள்ளத்தின் ஏக்கம் தொலையாதோ
உழைப்பவர் வாழ்க்கை மலராதோ
ஒரு நாள் பொழுதும் புலராதோ"
ணா ணா இன்னா ணா பாட்டு இது
பஹ்ரின் வந்ததே என்ஜோய் பண்ணத்தான் நல்லா சந்திர பாபு பாட்டு பாடுனா
கல்யாணம்........கல்யாணம்..........
வேணும் வாழ்வில் கல்யாணம்......
உல்லாசமாகவே உலகத்தில் வாழவே
மாப்பிள்ளையாகி ஆனந்தமாக மணமாலை சூடிடும்
கல்யாணம்......ஆஹ்..ஆஹாஹ்..ஆஹ்
கல்யாணம் ஆஹ்..ஆஹாஹ்..ஆஹ் கல்யாணம்
மங்காத இன்பமே மனைவியினாலே
மாமியார் வீடே சொர்க்கத்தை போலே
ஆணுக்கு பெண்ணும் பெண்ணுக்கு ஆணும்
வேணும் கட்டாயம் வாழ்விலே கல்யாணம்
வேணும் கட்டாயம் வாழ்விலே கல்யாணம் வைபவம்..
மாப்பிள்ளையாகி ஆனந்தமாக மணமாலை சூடிடும்
கல்யாணம்......ஆஹ்..ஆஹாஹ்..ஆஹ்
கல்யாணம் ஆஹ்..ஆஹாஹ்..ஆஹ் கல்யாணம்
காதலுக்கு ஜாதி இல்லே பேதமில்லே ஏதுமில்லே
கருப்பில்லே செகப்பில்லே கட்டு தாலி கழுத்திலே
கல்யாணம்......ஆஹ்..ஆஹாஹ்..ஆஹ்
கல்யாணம் ஆஹ்..ஆஹாஹ்..ஆஹ் கல்யாணம்
ஆண்டவன் எனக்கே அருள் புரிந்தானே
ஆகும் என் மனமே அன்றைய தினமே…
சரோஜா, கிரிஜா, ஜலஜா, வனஜா.
மாலினி, லோசனி, மஞ்சுளா, பாஷிணி.
யாரோ ஒரு பெண்மணி அவளே உன் கண்மணி
பட்டண பெண்ணோ பட்டிக்காடோ
கட்டின ராஜ ஹனி மூன் போடா
வீட்டின் விளக்கு வாய்த்தாள் உனக்கு
விதி கூட்டி வைத்த....
கல்யாணம்......ஆஹ்..ஆஹாஹ்..ஆஹ்
கல்யாணம் ஆஹ்..ஆஹாஹ்..ஆஹ் கல்யாணம்..(உல்லாசமாகவே)
ணா இன்னா கிண்டல் பன்றியா , எல்லாம் இன்னியோட முடிய போகுது பாத்துக்க
இன்னாடா முடிய போகுது
நீ பாரு ...
ஆமா வந்தலிருந்து பாத்துன்னு இருக்கேன் ஒரு நாலு பீரு வாங்கி வச்சிக்கினு ரூம்லே படுத்துனு இருக்க இதுக்கு நீ ஜுபைலே படுதுனு தூங்கி இருக்கலாமில்லையா எதுக்கு வண்டி எடுத்துகுனு ரெண்டுமணிநேரம் செக் போஸ்ட் கடலைத்தாண்டி இங்க வரணுமா....
ரெஸ்ட் எடுக்க தான்
அடிக்கிற வையிலுக்கு அங்கே ரூம்ல படுத்து தூங்கியிருக்கலாம் ....இங்க வந்து தான் அத பண்ணனுமா
அடிக்கிற வையிலுக்கு அங்கே ரூம்ல படுத்து தூங்கியிருக்கலாம் ....இங்க வந்து தான் அத பண்ணனுமா
நமக்கு கிடைக்கிறதோ வருசத்துல மொத்தமா ரம்ஜானுக்கு அஞ்சு நாலு லீவ் , பக்ரீத் அஞ்சுநாள் லீவ் அதல ரம்ஜான் லீவ்ல வேல வச்சிட்டானுக , இந்த பக்ரீத் லீவாச்சும் கெடச்சுதே ..., அங்க இருந்தா நொய் நொய் ன்னு எவன்னா வேலைக்கு பொறந்த பய கால் பண்ணிட்டே இருப்பான் அதான் இங்க வந்துட்டேன் , உங்க அண்ணிக்கு ஒரு மெசேஜ் போட்டுட்டு போன ஆப் பண்ணீடேன்... தேனமும் பக்கக்குற மூஞ்சிகள பக்கா கூடாது ..தெனமும் போற எடத்துக்கு போக கூடாது தெனமும் பண்ற வேலைகள பண்ணக்கூடாது அப்படியே அப்படியே இருக்கணும் .... இந்த ரெண்டு நாவல எந்த டிஸ்டர்ப் இல்லாம படிச்சு முடிக்கணும் ...
சலிப்பு சலிப்பு .... அது முத்தி விரத்தியா ஆயிட கூடாது
நம்ம ஊருக்கு போனா கூட நா ஒரு beg எடுத்துக்கிட்டு கிளம்பிடுவேன் ஒருவாரம் ஊர் பேர் தெரியாமல் சுத்துவேன்
அதுக்கு தான் என்ன கூட , வரவேண்டான்னு சொன்னியா
அதான் வந்துட்ட இல்ல
இன்னக்கி ரெண்டு கெடா வாங்க ஆளுங்க போயிருக்கு, நல்லா பிரியாணி சாப்பிட்டு ஒரு படத்த பார்த்துட்டு ரெண்டு மோசி குடிச்சிட்டு போர்த்திட்டு படுக்களாண்முன்னு நினைச்சேன் ஆனா ரொம்ப நாளா நெனச்ச ஒரு வேலைய முடிக்கவேண்டி இருக்கு அதான் வந்தேன்
என்ன வேல, பப்புக்கு போகணுமா ஈவ்னிங் போலாம்
ஆமா வந்தலிருந்து ரூமுக்குள்ளயே இருக்க, வெளியே நா மட்டும் போயிட்டு போயிட்டு வந்திட்டு இருக்கேன் போர் அடிக்கிது
டே சுரேஷு காலைல நீ தூக்கிட்டிருந்தப்ப ஒரு பியர் அடிச்சிட்டு ஓட்டல் மாடிக்கு போனேன் ....
மாடியில ஓபன் ஸுமிங் புல் , ஒரு வெள்ளைக்காரி , கொஞ்சம் நடுவயது தசைகளையும் முகத்தையும் இறுக்கமா மாத்தி வச்சிருந்தா ..., மல்லாக்க படுத்திருந்தா நா சிரிக்கலான்னு வாய் எடுத்தா க்ரீம் எடுத்து அவ கால்ல தேய்க்க ஆரமிச்சிட்டா ...
டே சுரேஷு காலைல நீ தூக்கிட்டிருந்தப்ப ஒரு பியர் அடிச்சிட்டு ஓட்டல் மாடிக்கு போனேன் ....
மாடியில ஓபன் ஸுமிங் புல் , ஒரு வெள்ளைக்காரி , கொஞ்சம் நடுவயது தசைகளையும் முகத்தையும் இறுக்கமா மாத்தி வச்சிருந்தா ..., மல்லாக்க படுத்திருந்தா நா சிரிக்கலான்னு வாய் எடுத்தா க்ரீம் எடுத்து அவ கால்ல தேய்க்க ஆரமிச்சிட்டா ...
அடிப்போடின்னு குபீர்ன்னு தண்ணியில குதிச்சு மூழ்கி எழுந்தா திபீர்ன்னு ஒரு சூடாணி தண்ணிலைருந்து எந்திரிச்சான் . பயந்து போய்ட்டேன் . சிரிச்சிக்கிட்டே நைஸ் ன்னான். அவன் பள்ளு வெள்ளைய ஈரு சேவப்ப இருந்தது. அவன் கருப்பு தோல் எண்ண பூசுன மினுமினுப்பு . தண்ணி ஒட்டவே இல்ல . ஒவ்வொரு முற மூழ்கி எழும்போதும் ஒரு நைஸ் . ஒரு அடிம இன்னொரு அடிமையப்பத்து சிரிக்கிறாப்புல ஒரு அன்பான சிரிப்பு அதுல ஒரு ஏகாந்தம் .....நா வாய் நெறியை தண்ணிய எடுத்து பிய்யிச்சி அடிச்சேன் அவனும் அதே மாதிரி பண்ணன் ...இப்ப என்ன கெட்டுப்போச்சி
நாலுவாட்டி குதிச்சி எந்திரிச்சி கரையில சாஞ்சிகிட்டு வானத்த பார்த்துகிட்டு நீனேன் ஒடம்புல எடை இல்ல மனசுளையும் தான் .தாளுக்கு தாளுக்குனு தண்ணியோட தழும்பால் சத்தம் போட்டு பாடணும் போல தோணுச்சு...
ஆனா இன்னும் கொஞ்சம் அந்தப்பக்கம் பிலிப்பெயினி குடும்பம் , ஒரு வயசு பையன் , பிகினி உடையில் ஒரு பொண்ணு ரப்பர் பொம்மைங்க மாதிரி உடம்பு , தண்ணில மெதந்துட்டே இருந்தாங்க ஒரு வர்த்த பேசிக்கல எங்களையும் கண்டுக்கல அவங்களோட இருப்ப மட்டும் உணர்ந்தாங்க போல அல்லது ஒருத்தரோட ஒருத்தர் இருப்பு ...
அவங்கள பார்த்ததுக்கு பிறகு நா சத்தம் போடல
அப்படியே தண்ணிக்குள்ள மூழ்கி அந்த மங்கலான சத்தங்களை கேட்டுகிட்டே இருந்தேன் காலத்தை கொஞ்சநேரம் நகாரம கால்ல அழுத்தி புடிச்சிருந்தேன்.
மறுபடியும் வெளியே வந்தேன்
இப்ப அந்த வெள்ளைக்காரிய பார்த்தேன், அவ என்ன பார்த்து சிரிச்சா நானும் சிரிச்சேன்...
பக்கத்துல சூடானி நைஸ் ன்னு சிரிச்சான்
கப கபன்னு பசி பிறகு கிழ இறங்கிவந்தேன்
பெல் அடிக்கிது இல்ல
யாரு
இரு ணா நா பார்த்துட்டு வரேன்
யாரு
நம்ம சேட்டா
என்னவாம்
இல்ல அவனுக்கு தெரிஞ்ச ஹோட்டல் இருக்காம் ஏதாவது வேணுமான்னு கேட்டான்
இங்கதான் ஆனந்தபவன் , பொன்னுசாமி எல்லாம் இருக்கே போன் பண்ணா கொண்டுவந்து கொடுக்க போறான் ..
சரினா அதவுடு என்ன பேப்பர் குடுத்துட்டியாமா , அந்த புது மேனேஜர் பையனா
அவனுக்காகவா ஊருக்கு போற
அவனுக்காகவெல்லாம் இல்ல போதும்ன்னு தோணுச்சு அதான்
அந்த மேனேஜர் பொசிஷஷனுக்கு நீ வந்திருக்கணும் ஆனா நீ இன்னும் சீனியர் எஞ்சினீராகவே இருக்க
அதெல்லாம் ஒண்ணுமில்லடா கொஞ்சநாளுக்கு முன்னாடி வரைக்கும் அந்த எண்ணம் இருந்தது மேனஜர் ஆகணுன்னு
எனக்கும் நாப்பத்தஞ்சி வயசாயிடுச்சு இனி என்னத்த புதுசா கத்துக்க
எனக்கு பணமும் அதிகாரமும் தேவபட்டுச்சி
எனக்கும் நாப்பத்தஞ்சி வயசாயிடுச்சு இனி என்னத்த புதுசா கத்துக்க
எனக்கு பணமும் அதிகாரமும் தேவபட்டுச்சி
அதுவும் இல்லாம என்னோட அனுபவம் அது குடுத்த ஆணவம்
நம்ம கன்ஸ்ட்ரக்ஷன் பீல்ட் ஒரு மாதிரியான பில்டுடா
இப்ப நம்ம ஹெட் ஆபீஸ்க்கு போய் இருக்கியா , ஆபீஸ் செட்டப் பத்துவருஷமா அப்படியே இருக்கு டேபிள் சேர் கேண்டின் வேல செய்ற ஆளுங்க , அவங்க செய்ற வேல எதுவும் மாறாது அதனால அவங்களுக்கு மனசு உடம்பு ஒருமாதிரி செட் ஆகிடும் .
ஆனா நம்ம சைட் அப்படி இல்ல தெனமும் மாறிக்கிட்டே இருக்கும் , கட்டிடம் கட்ட கட்ட இடம் மறிக்கிட்டே இருக்கும் . இன்னக்கி வச்ச பொருள் நாளைக்கு அங்க இருக்காது , erection பண்ணவேண்டிய புது புது பொருட்கள் வந்து இறங்கிட்டே இருக்கும் , வேல செய்ற ஆளுங்க மறிக்கிட்டேயே இருப்பாங்க ,
தொடர்ந்து எல்லாம் மாறிகிட்டே இருக்கிறதனால நமக்கும் ஆழத்துல அலைபஞ்சிகிட்டே இருக்கும். மனசு நிலைகொள்ளாது.
அதில்லாம புது புது பிரச்சனைகள் வந்துகிட்டே இருக்கும் , தெனமும் புது புது பிரச்னைகள் அதனால புது புது முடிவுகள எடுத்துகிட்டே இருக்கனும்....
அதில்லாம புது புது பிரச்சனைகள் வந்துகிட்டே இருக்கும் , தெனமும் புது புது பிரச்னைகள் அதனால புது புது முடிவுகள எடுத்துகிட்டே இருக்கனும்....
நம்ம எடுக்கிற முடிவோட விளைவு பல நேரங்கள்ல நமக்கு தெரியாது ஆனாலும் முடிவெடுக்கணும் , அந்த முடிவுக்கு நம்ம பொறுப்பேத்துக்கணும் .....,
அதுக்கு
அதுக்கு நமக்கு அனுபவம் வேணும் ...
ஒவ்வொரு வேலையும் ஆழமா கவனிச்சு செய்யணும் , ஆளுங்களோட கவனிச்சு பழகணும் ...
அனுபவம் நம்ம உள்ளுணர்வ நல்லா கூர்மையாக்கும்
உள்ளுணர்வு கூர்மையா இருந்தா தொடுக்கிற சொல்லும் எடுக்கிற முடிவும் பெரும்பாலும் சரியா இருக்கும்
அப்ப ஏன்னா உங்கள மேனேஜர் ஆக்கள
படிப்பு பாக்குறாங்க மேனேஜர் ஆகா என்ஜினீயர் படிச்சிருக்கணுமா
யார்சொன்னது
நம்ம கிளைன்ட் சொல்றான்
அதுக்காக அந்த பொடிப்பையான மேனேஜரா போட்டு , அவன் ஆடுற ஆட்டமும் படுற பட்டும்
நீங்க டிப்ளோமாவ
ஆமா
சரி நாம என்ன பண்ணமுடியும் .....
அதுக்காக ஊருக்கு போறியா
அதுக்காக இல்ல ஒரு சம்பவம் அது உனக்கு சொன்ன புரியாது
புரிரா மாதிரி சொல்லு
போனவாரம் நம்ம சூப்பர்வைஸேர் குமரேசன் ..... ஒரு நாலு பிட்டர் பசங்கள கூட்டிட்டு வண்டில கெளம்புனாரு ..... ஒரு நாலுமணி இருக்கும் நா வேலை எல்லாம் முடிச்சிட்டு பார்க்கிங்கில் தம் அடிச்சிட்டு இருந்தேன். குமரேசன் சும்மா கிண்டலுக்கு என்ன சார் டவர் tightness பக்க போறோம் வரிங்களா இன்னு கேட்டாரு. நா substation விட்டு வேற எங்கைக்கும் போறது இல்ல .... அதுவும் transmission லைன் பக்கம் நமக்கு எந்த வேலையும் இல்ல
அன்னக்கி இன்ன நெனச்சேன்னு தெரியல சரி வாணா போலன்னு அவங்களோட கிளம்பிட்டேன் . ஊரைவிட்டு வெளீயே போனவுடனே பாலை ஆரமிச்சிடுச்சு .....மணலு மணலு எங்க பார்த்தாலும் மணலு , வண்டி என்னவோ 120 Km வேகத்தல போகுது ஆனா ரெண்டுபாக்கமும் ஒரே மாதிரி இருக்கிறதால நாங்க போகமே ஒரே இடத்துல நிக்கிறமாதிரியும் இருக்கு ...., இன்னும் கொஞ்சம் வேகமா போய்யன்னு டிரைவர் கிட்ட சொல்லிகிட்டே இருந்தேன் .
ஒருவழியா டவர் லைனுக்கு போனோம் . வண்டில இருந்து இறங்கி எல்லாம் safety built எடுத்து மாட்டிக்கிடானுங்க. பிட்டர் ஒருத்தன் சார் என்ன மேல வரிங்களா இன்னன்
இந்தியாவுல இருக்கும்போது ஒரு நாலஞ்சுவாட்டி டவர் மேல ஏறி இருக்கேன் . அதுவும் பத்து வருசத்துக்கு முன்ன. இங்க சவூதில ஒருவாட்டி கூட ஏறுனது இல்ல . 380kV லைனு ஒரு 40 மீட்டர் height இருக்கும் .
எனக்கு என்னமோ தோணி சரி நானும் வரேன்னு சொன்னேன். குமரேசன் சார் வான நீ கீழையே இரு இன்னாரு ...
நா அதுக்குள்ள safety built எடுத்து மாட்ட தொடங்கினேன்.
சார் நீங்க சொன்ன கேக்க மாட்டீங்க , பார்த்து பொறுமையா ஏறுங்கன்னு சொல்லிட்டு குமரேசன் ஏற ஆரமிச்சாரு
நா பாத்துக்கிறேன் ..., அப்படின்னு சொல்லிட்டுநானும் ஏற ஆரமிச்சேன் . எனக்கு முன்னாடி பின்னாடி பிட்டர் பசங்க .. , ஏறினாக
மேலேறி நா ஒரு ஓரமா Gandary மேல வேடிக்க பாக்க ஆரமிச்சேன்
அவங்க எல்லா போல்ட் titness பார்த்துட்டு இருந்தாங்க ,
நவம்பர் மாசம் மிதமான குளிர் .., இந்த டைம் ல சவூதிக்கு புதுசா வரவன் , என்னாடா இது இந்த ஊர் இவ்வளவு ராமியமா இருக்குன்னு நினைப்பான் ...
வானத்துல சூரியன் இல்ல , ஆனா அதனோட நிழல் மாதிரி தழல் சிவப்பு வானத்துல படிஞ்சு இருந்தது.
கண்ணுக்கு எட்டிய தூரம் வெளி வெட்ட வெளி
சில இடங்கள்ல மணல் மண்ணா மாறி மண் மலையா மாறிட்டு இருந்தது , அல்லது மலை மண்ணா , மணல மாறிட்டு இருந்ததா தெரியல ,
கொஞ்சமா மணல் கொட்டிவச்சிருந்தா , மனசு குதூகலம் ஆகிடும் , மணலை கை அல்லறத்துக்கு முன்னாடி மனசு அள்ளிடும் அதுவும் குழந்தைகளுக்கு சொல்லவே வேண்டாம் , குழந்தைகளுக்கு மணல் போல விளையாட்டு பொருள் வேற இல்ல , கைநெறியா அள்ளி அள்ளி தலையில உடம்புல எல்லாம் போட்டுக்கும் ..
ஆனா கண்ணுக்கு எட்டர தூரம் மணல் இருந்தா , மனசுக்கு என்ன பண்றதுன்னு தெரியாது அள்ள தோணாது அலைபாயும் , பெரும் புல்வெளிகளை பார்த்தா மனசு அமைதி அடையும்னு சொல்லுவாங்க , பாலைய பார்த்தா ஏன் இப்படி மனசு வெறுமையா அலையதுன்னு தெரியல ஒருவேளை இந்த பாலை நம்ம வாழறதுக்கு ஒண்ணுமே குடுக்காதுங்குற பயமோ என்னவோ
டவருக்கு பக்கத்துல ஒரு ஒட்டக கூட்டம் மணல் கலர்லே இருக்கிற கஞ்சா சிறும்புள்ள மேச்சிட்டு இருந்ததுக , நா மேலிருந்து பாதப்ப அருவம ஏதோ மேஞ்சமாதிரி இருந்தது
ஒரு நாள் சைட்டுக்கு போற வழில ஒரு செத்த ஒட்டகத்த கொண்டுவந்து போட்டிருந்தாங்க , இங்கதான் ஆடு ஒட்டகம் எது செத்தாலும் புதைக்க மாட்டங்களே...
மொதநாள் கொஞ்சம் நாத்தடிக்க ஆரமிச்சது அடுத்தடுத்து கடுமையான வையில் தொடர்ந்து மண்ணு காத்து வேற
மணல் காத்து அந்த ஒட்டகத்தை கொஞ்ச கொஞ்சமா அரிக்க அறமிச்சது மணல் அடிச்சிஅடிச்சி அந்த ஒட்டகம் சில்லு சில்லா பொல பொலன்னு உத்திர அரமிச்சிட்டது வேகமா கடந்துபோற ஒவ்வொரு மணல் துகளும் ஒட்டக சதையை அரிச்சி அடிச்சி கொண்டுபோயிடுச்சி , கொஞ்ச நாள்ல ஒட்டகம் மணலோட மணாளா காணாமப்போயிடுச்சி
இந்த பாலைல வேல செஞ்சு செஞ்சு மனசுல இருந்த ஈரமெல்லாம் இந்த மணல் அடிச்சிட்டு போய்டுச்சு , என் மனசுல எந்த உணர்ச்சியும் இல்ல , வறண்டு நானே பொத்தல் பொத்தலா இருக்கிற மாதிரி ஒரு பீலு
என்மேலையே எனக்கு ஒரு இரக்கம் வந்து துக்கம் தொண்டையை அடைச்சது
வாய்விட்டு அழணுபோல இருந்தது....கண்ணையெல்லாம் இருட்டி போச்சு
அள்ளி வீசுன மணல் போல மனசு சிலு சில்லுன்னு செதறி போச்சு . உடம்போட முக்காவாசி எட மனசுதான் போல , அது செதறி போன பிறகு ஒடம்பு லேசா ஆகி பறக்குது , விடுதலை எல்லாத்துல இருந்தும் விடுதலை
இதெல்லாம் ரெண்டு மூணு செக்ண்ட்ல நடந்து முடிஞ்சிபோச்சு , கிணத்துல மேல இருந்து குதிச்சி மூழ்கி மேல எழுந்து மூச்சு வாங்கற மாதிரி
இருக்கிறோம்முன்னு ஞாபகம் தெளிஞ்சி பாத்த அந்தரத்துல தொங்கிட்டு இருக்கிறேன் .
safety built டோட கயிறு உடம்பெல்லாம் இறுக்கி புடிக்கிது , மேல டவர் சேனல்ல மாட்டிருந்த safety built டோட ஊக் சத்தம் கர் கர் ன்னு காத கடைஞ்சது
பயம் அலைபோல வந்து அமுக்க உடம்பெல்லாம் நடுங்கி மூச்சுவாங்க ஆரமிச்சிடுச்சி
குமரேசன் அந்த பக்கம்தமிருந்து அலற ஆரமிச்சாறு , மத்த ஆளுங்க கிட்ட ஒரு சலனமும் இல்ல
சார் என்ன சார் என்ன , நல்ல தானே உக்கார்த்திருந்திங்க ஏன் திடீர்ன்னு விழுந்திட்டிங்க , நல்ல வேல saftey built போட்டிருந்திங்க கடவுளே
தூக்குங்கடா தூக்குங்க
என்ன மேல தூக்கி ஸ்டப்ல உக்கார வச்சி தண்ணி குடுத்தாங்க ,
சார் என்ன கண்ணெல்லாம் கலங்கி போய்டுச்சு , சார் என்னா கடவுள் தெரிஞ்சரா இல்லடா மேடம் தெரிஞ்சிருப்பாங்க ...
ஏய் எல்லாம் தள்ளி போங்கடா இதை எவனும் எங்கயும் வெளில சொல்லக்கூடாது , முக்கியமா sefety deportment க்கு மேட்டர் போக கூடாது . எல்லாருக்கும் பிரச்னை ஆகிடும் என்று குமரேசன் கத்த ஆரமிச்சிட்டார்
சார் நீங்களும் வெளில சொல்லாதீங்க , பிரச்னையாகிடும் வருஷத்துக்கு ஒன்னு ரெண்டு கேஸு தவறி கீழ விழுந்து மேல போய் செருந்துங்க ..உங்கள டவர் மேல ஏத்துனது என்னோட தப்பு ..
ஏய் எல்லாம் எறங்கு அப்படியே மெதுவா எறங்குங்க சார் நீங்களும் மெதுவா எறங்குங்க சார்
நான் மெதுவா இறங்கிக்கிட்டே யோசிச்சேன் செத்தவன் எல்லாம் தவறி விழுந்துதான் செத்தானா என்று என் கைகள் இன்னும் நடுங்க துவங்கியது
அதுக்கு
அதுக்கு நமக்கு அனுபவம் வேணும் ...
ஒவ்வொரு வேலையும் ஆழமா கவனிச்சு செய்யணும் , ஆளுங்களோட கவனிச்சு பழகணும் ...
அனுபவம் நம்ம உள்ளுணர்வ நல்லா கூர்மையாக்கும்
உள்ளுணர்வு கூர்மையா இருந்தா தொடுக்கிற சொல்லும் எடுக்கிற முடிவும் பெரும்பாலும் சரியா இருக்கும்
அப்ப ஏன்னா உங்கள மேனேஜர் ஆக்கள
படிப்பு பாக்குறாங்க மேனேஜர் ஆகா என்ஜினீயர் படிச்சிருக்கணுமா
யார்சொன்னது
நம்ம கிளைன்ட் சொல்றான்
அதுக்காக அந்த பொடிப்பையான மேனேஜரா போட்டு , அவன் ஆடுற ஆட்டமும் படுற பட்டும்
நீங்க டிப்ளோமாவ
ஆமா
சரி நாம என்ன பண்ணமுடியும் .....
அதுக்காக ஊருக்கு போறியா
அதுக்காக இல்ல ஒரு சம்பவம் அது உனக்கு சொன்ன புரியாது
புரிரா மாதிரி சொல்லு
போனவாரம் நம்ம சூப்பர்வைஸேர் குமரேசன் ..... ஒரு நாலு பிட்டர் பசங்கள கூட்டிட்டு வண்டில கெளம்புனாரு ..... ஒரு நாலுமணி இருக்கும் நா வேலை எல்லாம் முடிச்சிட்டு பார்க்கிங்கில் தம் அடிச்சிட்டு இருந்தேன். குமரேசன் சும்மா கிண்டலுக்கு என்ன சார் டவர் tightness பக்க போறோம் வரிங்களா இன்னு கேட்டாரு. நா substation விட்டு வேற எங்கைக்கும் போறது இல்ல .... அதுவும் transmission லைன் பக்கம் நமக்கு எந்த வேலையும் இல்ல
அன்னக்கி இன்ன நெனச்சேன்னு தெரியல சரி வாணா போலன்னு அவங்களோட கிளம்பிட்டேன் . ஊரைவிட்டு வெளீயே போனவுடனே பாலை ஆரமிச்சிடுச்சு .....மணலு மணலு எங்க பார்த்தாலும் மணலு , வண்டி என்னவோ 120 Km வேகத்தல போகுது ஆனா ரெண்டுபாக்கமும் ஒரே மாதிரி இருக்கிறதால நாங்க போகமே ஒரே இடத்துல நிக்கிறமாதிரியும் இருக்கு ...., இன்னும் கொஞ்சம் வேகமா போய்யன்னு டிரைவர் கிட்ட சொல்லிகிட்டே இருந்தேன் .
ஒருவழியா டவர் லைனுக்கு போனோம் . வண்டில இருந்து இறங்கி எல்லாம் safety built எடுத்து மாட்டிக்கிடானுங்க. பிட்டர் ஒருத்தன் சார் என்ன மேல வரிங்களா இன்னன்
இந்தியாவுல இருக்கும்போது ஒரு நாலஞ்சுவாட்டி டவர் மேல ஏறி இருக்கேன் . அதுவும் பத்து வருசத்துக்கு முன்ன. இங்க சவூதில ஒருவாட்டி கூட ஏறுனது இல்ல . 380kV லைனு ஒரு 40 மீட்டர் height இருக்கும் .
எனக்கு என்னமோ தோணி சரி நானும் வரேன்னு சொன்னேன். குமரேசன் சார் வான நீ கீழையே இரு இன்னாரு ...
நா அதுக்குள்ள safety built எடுத்து மாட்ட தொடங்கினேன்.
சார் நீங்க சொன்ன கேக்க மாட்டீங்க , பார்த்து பொறுமையா ஏறுங்கன்னு சொல்லிட்டு குமரேசன் ஏற ஆரமிச்சாரு
நா பாத்துக்கிறேன் ..., அப்படின்னு சொல்லிட்டுநானும் ஏற ஆரமிச்சேன் . எனக்கு முன்னாடி பின்னாடி பிட்டர் பசங்க .. , ஏறினாக
மேலேறி நா ஒரு ஓரமா Gandary மேல வேடிக்க பாக்க ஆரமிச்சேன்
அவங்க எல்லா போல்ட் titness பார்த்துட்டு இருந்தாங்க ,
நவம்பர் மாசம் மிதமான குளிர் .., இந்த டைம் ல சவூதிக்கு புதுசா வரவன் , என்னாடா இது இந்த ஊர் இவ்வளவு ராமியமா இருக்குன்னு நினைப்பான் ...
வானத்துல சூரியன் இல்ல , ஆனா அதனோட நிழல் மாதிரி தழல் சிவப்பு வானத்துல படிஞ்சு இருந்தது.
கண்ணுக்கு எட்டிய தூரம் வெளி வெட்ட வெளி
சில இடங்கள்ல மணல் மண்ணா மாறி மண் மலையா மாறிட்டு இருந்தது , அல்லது மலை மண்ணா , மணல மாறிட்டு இருந்ததா தெரியல ,
கொஞ்சமா மணல் கொட்டிவச்சிருந்தா , மனசு குதூகலம் ஆகிடும் , மணலை கை அல்லறத்துக்கு முன்னாடி மனசு அள்ளிடும் அதுவும் குழந்தைகளுக்கு சொல்லவே வேண்டாம் , குழந்தைகளுக்கு மணல் போல விளையாட்டு பொருள் வேற இல்ல , கைநெறியா அள்ளி அள்ளி தலையில உடம்புல எல்லாம் போட்டுக்கும் ..
ஆனா கண்ணுக்கு எட்டர தூரம் மணல் இருந்தா , மனசுக்கு என்ன பண்றதுன்னு தெரியாது அள்ள தோணாது அலைபாயும் , பெரும் புல்வெளிகளை பார்த்தா மனசு அமைதி அடையும்னு சொல்லுவாங்க , பாலைய பார்த்தா ஏன் இப்படி மனசு வெறுமையா அலையதுன்னு தெரியல ஒருவேளை இந்த பாலை நம்ம வாழறதுக்கு ஒண்ணுமே குடுக்காதுங்குற பயமோ என்னவோ
டவருக்கு பக்கத்துல ஒரு ஒட்டக கூட்டம் மணல் கலர்லே இருக்கிற கஞ்சா சிறும்புள்ள மேச்சிட்டு இருந்ததுக , நா மேலிருந்து பாதப்ப அருவம ஏதோ மேஞ்சமாதிரி இருந்தது
ஒரு நாள் சைட்டுக்கு போற வழில ஒரு செத்த ஒட்டகத்த கொண்டுவந்து போட்டிருந்தாங்க , இங்கதான் ஆடு ஒட்டகம் எது செத்தாலும் புதைக்க மாட்டங்களே...
மொதநாள் கொஞ்சம் நாத்தடிக்க ஆரமிச்சது அடுத்தடுத்து கடுமையான வையில் தொடர்ந்து மண்ணு காத்து வேற
மணல் காத்து அந்த ஒட்டகத்தை கொஞ்ச கொஞ்சமா அரிக்க அறமிச்சது மணல் அடிச்சிஅடிச்சி அந்த ஒட்டகம் சில்லு சில்லா பொல பொலன்னு உத்திர அரமிச்சிட்டது வேகமா கடந்துபோற ஒவ்வொரு மணல் துகளும் ஒட்டக சதையை அரிச்சி அடிச்சி கொண்டுபோயிடுச்சி , கொஞ்ச நாள்ல ஒட்டகம் மணலோட மணாளா காணாமப்போயிடுச்சி
இந்த பாலைல வேல செஞ்சு செஞ்சு மனசுல இருந்த ஈரமெல்லாம் இந்த மணல் அடிச்சிட்டு போய்டுச்சு , என் மனசுல எந்த உணர்ச்சியும் இல்ல , வறண்டு நானே பொத்தல் பொத்தலா இருக்கிற மாதிரி ஒரு பீலு
என்மேலையே எனக்கு ஒரு இரக்கம் வந்து துக்கம் தொண்டையை அடைச்சது
வாய்விட்டு அழணுபோல இருந்தது....கண்ணையெல்லாம் இருட்டி போச்சு
அள்ளி வீசுன மணல் போல மனசு சிலு சில்லுன்னு செதறி போச்சு . உடம்போட முக்காவாசி எட மனசுதான் போல , அது செதறி போன பிறகு ஒடம்பு லேசா ஆகி பறக்குது , விடுதலை எல்லாத்துல இருந்தும் விடுதலை
இதெல்லாம் ரெண்டு மூணு செக்ண்ட்ல நடந்து முடிஞ்சிபோச்சு , கிணத்துல மேல இருந்து குதிச்சி மூழ்கி மேல எழுந்து மூச்சு வாங்கற மாதிரி
இருக்கிறோம்முன்னு ஞாபகம் தெளிஞ்சி பாத்த அந்தரத்துல தொங்கிட்டு இருக்கிறேன் .
safety built டோட கயிறு உடம்பெல்லாம் இறுக்கி புடிக்கிது , மேல டவர் சேனல்ல மாட்டிருந்த safety built டோட ஊக் சத்தம் கர் கர் ன்னு காத கடைஞ்சது
பயம் அலைபோல வந்து அமுக்க உடம்பெல்லாம் நடுங்கி மூச்சுவாங்க ஆரமிச்சிடுச்சி
குமரேசன் அந்த பக்கம்தமிருந்து அலற ஆரமிச்சாறு , மத்த ஆளுங்க கிட்ட ஒரு சலனமும் இல்ல
சார் என்ன சார் என்ன , நல்ல தானே உக்கார்த்திருந்திங்க ஏன் திடீர்ன்னு விழுந்திட்டிங்க , நல்ல வேல saftey built போட்டிருந்திங்க கடவுளே
தூக்குங்கடா தூக்குங்க
என்ன மேல தூக்கி ஸ்டப்ல உக்கார வச்சி தண்ணி குடுத்தாங்க ,
சார் என்ன கண்ணெல்லாம் கலங்கி போய்டுச்சு , சார் என்னா கடவுள் தெரிஞ்சரா இல்லடா மேடம் தெரிஞ்சிருப்பாங்க ...
ஏய் எல்லாம் தள்ளி போங்கடா இதை எவனும் எங்கயும் வெளில சொல்லக்கூடாது , முக்கியமா sefety deportment க்கு மேட்டர் போக கூடாது . எல்லாருக்கும் பிரச்னை ஆகிடும் என்று குமரேசன் கத்த ஆரமிச்சிட்டார்
சார் நீங்களும் வெளில சொல்லாதீங்க , பிரச்னையாகிடும் வருஷத்துக்கு ஒன்னு ரெண்டு கேஸு தவறி கீழ விழுந்து மேல போய் செருந்துங்க ..உங்கள டவர் மேல ஏத்துனது என்னோட தப்பு ..
ஏய் எல்லாம் எறங்கு அப்படியே மெதுவா எறங்குங்க சார் நீங்களும் மெதுவா எறங்குங்க சார்
நான் மெதுவா இறங்கிக்கிட்டே யோசிச்சேன் செத்தவன் எல்லாம் தவறி விழுந்துதான் செத்தானா என்று என் கைகள் இன்னும் நடுங்க துவங்கியது
ஆனா இப்ப எல்லாத்தையும் வீட்டுட்டு ஊருக்கு போகன்ன்னு தோணுது காலைல மொதல்ல எவனாவது போன் பன்னிடுவான் நைட் பத்தரைக்கு எவனாவது போன் பண்ணி என்ன தூங்கிட்டிகளா ண்ணுவான் சில நாள்ல முந்நூறு போன் கால் வரை அட்டென்ட் பண்ணியிருக்கேன் ...., திருப்பி திருப்பி ஆணவம் அதிகாரம் ..., நாள் முழுக்க ..., மற்றவர்களும் நானும் மாத்தி மாத்தி முவைக்கிறது அதைத்தான் ...வேற இல்ல ...
எனக்கு மனசு இப்பவெல்லாம் வேற மாதிரி மாறிப்போச்சு ..., நம்ம மேல அன்பா இருப்பவங்க இல்ல எல்லார்மேளையும் அன்பா இருக்கிற ஆளுங்கள பாக்கணும் பேசணும் போல இருக்கு , நாள் முழுவதும் அன்புக்கு நான் அன்ப முன்வைக்கிற வைக்கிற சூழல்ல வாழனும் ..
நீ இன்ன சொல்லவரான்னு கொஞ்சமா புரிந்து ஆனா ஏதோ கனவுகாண்றன்னு மட்டும் தெரியுது ...
ஆனா யாருன்னா ஊருக்கு போறா சும்மா போறேன்னு சொல்லறீங்க ..
ஆனா போகமாற்றங்க ..
கொஞ்ச நாள் ஒருத்தன் ஒரு வேலைய பழகிட்டானா அத விட்டுவிட்டு போகமாட்டான் . அது அவனுக்கு ஒரு அடையாளத்தை கொடுத்துடும் அல்லது ஒரு அடையாளத்தை அவனே உணர்ந்துடுவான். நெறய முறை நான் பாப்பேன் . சிலர் கஷ்ட்டமான வேலைய செய்வாங்க , அவங்க அத வாங்க விட்டுவிட்டு வேற வேலைக்கு போன என்னனு தோணும்
நமக்கும் அப்படி தான் , இங்கேயிருந்து நெறய பேர் ஊருக்கு கிளப்பி போய்டுவாங்க . அங்க போயிட்டு ஒரு மூணு மாசம் இருப்பாங்க பின்ன நா யாருன்னு ஒரு கேள்வி வந்துடும் ,வேற வேலைக்கி போய் அத கத்துக்கிட்டு அதல ஓட்டறதுக்கு பதிலா மறுபடியும் இங்கயே வந்துடலாம்னு நினைப்பாங்க ... மறுபடியும் இங்க வர முயற்சிபண்ணுவாங்க , காசு இருந்தாலும் அடையாளம் இல்லாம வாழறது ரொம்ப கஷ்டம்
ஆனா நா முடிவு பண்ணிட்டேன்...
இஸஹ் அல்லா ஊருக்கு போய்டணும்
நீ ஏன்னா போனும் போனான்னு சொல்ற , ஊர்ல அண்ணி சென்ட்ரல் கோவெர்மென்ட் வேல பசங்க படிக்கிறாங்க , இன்னும் கொஞ்சநாள் வேல செய்ஞ்சிட்டு செட்டில்மென்ட் வாங்கிட்டு போகலாமுல்ல
போன சைட் ஊருக்கு வெளில டெசர்ட்ல நீ வந்திருக்க இல்ல
ஆமா ஹபியூலா
ஏனா இப்பதான் சொன்ன ஊருக்கு போனா இருக்க முடியாதுன்னு
ஆமாண்டா , எனக்கும் அதே யோசனையாத்தான் இருந்தது .
டேய் கலிங்கு பெல்லடிக்கிது பார்
யாரு பாரு
யாரு அது நம்ம சேட்டா , என்னவாம் கைல என்னாது , அது சாப்பாடு ஹோட்டல் விசிட்டிங் கார்டனா
இங்க தான் எல்லா ஹோட்டலும் இருக்கே சரவணா பவன் , ஆனந்த பவன் அஞ்சப்பர் போன் பன்னா ரூமுக்கே எடுத்துட்டு வரப்போறான் , ஏதா அந்த கார்டா குடு
நா இது வேறான ,
என்னடா வேற
இது ஒரு பிலிப் குட்டியோடது already புக் பண்ணி இருக்கு இன்னும் பத்து நிஷத்துல வந்துடும்
சுரேஷு தப்பு பண்ணலாம் அதுக்கு ஏதாவது பரிகாரம் இருக்கும் மன்னிப்பு இருக்கும் ஆனா பாவம் பண்ணாத ஜென்மத்துக்கும் அனுபாவிக்கணும்
நா சும்மா பேசாதனா உனுக்கு தெரியாது ,
நீ வேணான்னு சொல்லியும் ஊங்கூடா வந்ததே இதுக்குதான்
தம்பி நானும் உனுக்கு நெறைய முறை சொல்லிட்டேன் பொண்டாட்டிய சயூதிக்கு கூட்டியாந்திடுன்னு நீ கேக்கல
எங்கன கூடியறது ஒரே சண்டை சண்டை , போன எடுத்தலே சண்டை நாலு வருஷம் லவ் பண்ணோம் அப்பாலம் ஐஸ் கட்டி உருகி சொட்டறமாதிரி பேசுவா பேசிக்கிட்டே இருப்பா
இப்ப போன எடுத்தாலே சண்டைதான்
தம்பி போன்ல லவ் பண்ணலாம் ஆனா குடும்பம் நடத்த முடியாது
நா சும்மா இருநா இந்த நேரத்தல பஞ்ச பேசிக்கிட்டு
டேய் நானும் பாத்துட்டேன் புதுசா கல்யாணம் அவனிலிருந்து , பசங்க காலேஜி போற பசங்க இருக்கற ஆள் வரையும் போன்ல சண்டை போட்டுக்கிட்டே இருப்பாங்க
நானும் அப்படி தான் ..
நா இப்ப எங்க வீட்டில யாருக்கும் என்மேல உண்மையான அக்கறை இல்ல , அப்படியே அக்கறை இருந்தாலும் அதுக்கு பின்னாடி அவங்களோட சர்வேவள் இருக்கு
முதல்ல எனக்கு புரியல ஆனா இப்பவெல்லாம் ரொம்ப மனசு கஷ்ட்டமா இருக்கு யார்மேலயும் நம்பிக்கை இல்ல யாரையும் புடிக்கல
தம்பி இந்த வயசுலவர ஒருமாதிரி குழப்பம் தான் ..இது இதுவரைக்கும் படிச்சா வேலைக்கு போன ஒரு கனவுலகத்துல வாழ்த்துன்னு இருந்த , இப்ப கல்யாணம் ஆகிடுச்சு உங்க வீட்டுல இருப்பவர்களுக்கு இப்ப நீ வேற ஒரு எதார்த்த உலககத்த பாக்குற படபடப்பு . ஒரு குருவி தரைல காலவச்சவுடனே அதுக்கு ஏற்படுற படபடப்பு ...கொஞ்சம் பொறுமையா இரு எல்லாம் சரியா போய்டும் ...
எங்கண்ணனுக்கு கல்யாணம் ஆகரவரிக்கும் நானும் எங்கண்ணனும் ஒன்னாதான் சுத்துவோம் சினிமாவுக்கு போவோம் சட்ட மாத்தி போட்டுப்போம் அவனுக்கு கல்யாணம் அனுப்ப எனக்கு அவ்வளவு சந்தோசம் எனக்கு ...கல்யாணத்துல ஆறேழு மோதிரம் அவனுக்கு மொழியா வந்தது , அதுல ஒண்ணே என் கையில போட்டான் அப்பதான் மொத்தமுற தங்கத்துல மோதிரம் போடுறேன் ...
ஒரு பதினைந்து நாள் கழிச்சி அவன எங்கோ போக பஸ் ஸ்டாண்டல உட சைக்கிள போயிட்டு இருந்தோம் அப்ப மெதுவா டே அந்த மோதிரத்தை கழட்டுன்னு சொன்னான் ..மொதல்ல அவன் எனக்கு என்ன சொல்றன்னு புரியல என்னன்னு கேட்டேன் அந்த மோதிரம் அவங்க பக்கம் உழுந்தது... பஸ் ஸ்டாப் வரவரிக்கும் நா எதுவும் பேசல , ஸ்டாப் வந்ததும் நா சைக்கில நிறுத்திட்டு மோதிரத்தை கழட்டி கைல குடுத்துட்டு திருப்பி பக்கமா வீட்டுக்கு வந்துட்டேன் ....
எங்களுக்குள்ள ஏதோ ஒன்னு அருந்துபோச்சு .. அப்பா அவ்வளவு கோவம் இருந்தது ஆனா அன்னக்கி அவனோட நிலம இன்னான்னு இப்ப புரிது ...
பொறுமையா இரு
அட போன்னா