"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "
திங்கள், டிசம்பர் 01, 2014
திங்கள், அக்டோபர் 20, 2014
சுவை
சுவை அறிதல் என்றால் உயிர் அறிதல் எனலாம்.
சுவை ஒரு உணர்வு அதை உணர்தல்
மனிதனின் தனித்தன்மை.
என்று ஆதி மனிதன் உணவை தீயில் சுட கற்றுக்கொண்டானோ
அன்றிலிருந்து சுவையின் மீதான அவன் விருப்பம் துவங்கிவிட்டது.
அடிப்படை சுவைகள்
இனிப்பு, துவர்ப்பு, கசப்பு,காரம், உவர்ப்பு. புளிப்பு இந்த ஆறு சுவைகளை கொண்டு இன்று
கணக்கில்லா உணவுகள் படைக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது.
சமைப்பவர்
அனைவருக்கும் சுவை கைகூடுவது இல்லை.
தனியாத ஈடுபாடு , நுண்ணுனர்வு கொண்டு
சமைப்பவர்கள் கைகளில் அது தவழ்கிறது.
சமைத்து சமைத்தே அந்த நுண்ணுரவை அவர்கள்
அடைகிறார்கள்.
என் மனைவின் வீடு வானியம்பாடியில் இருக்கிறது. ஒரு விசேஷ
நாளில் பாய் ஒருவரை பிரியானி செய்ய அழைத்திருந்தோம். முன்பே அவருக்கு தேவையான
பொருட்களின் பட்டியலையும் அவை எங்கு வாங்க வேண்டும் என்ற விவரத்தைவும்
எழுதிருந்தார். பொருட்களை அவரிடம் அளித்த போது ஒவ்வொன்றாக எடுத்து அதன் தரத்தை
பார்த்தார். ஆட்டுக்கறியில் முக்கியமான துண்டுகளை மட்டும் அவர் பொருக்கி
எடுத்துக்கொண்டார். சமையலுக்கு வைத்திருந்த தண்ணிரையும் சுவைத்து பார்த்தார்.
அடுப்பை மூட்டி அவர் கொண்டுவந்த பாத்திரத்தில் நீர் ஊற்றி சமைக்கத்துவங்கினார்.
புளியமர விறகைத்தவிர அவர் வேரு எந்த விரகையும் பயன்படுத்தவே இல்லை. யாரிடமும் அவர்
அதிகம் பேசவும் இல்லை. பொருட்களை ஒவ்வொன்றாக அவர் எடுக்கும் போதும் அதன் அளவை
அவர் கண்கள் பார்க்கவே இல்லை. அவர் மனம் அதை பார்க்கிறது என்று எண்ணிக்கொண்டேன்.
அதுவரை அவர் எதையும் எடுத்து சுவைத்து பார்க்கவே இல்லை. ஒரு கட்டத்தில்
பிரியானியின் மனம் எழுந்து வந்தது. எனக்கு உள்ளுக்குள் சந்தோஷம் பொங்கியது. அவர்
அந்த மணத்தை வைத்து புளிப்பு குறைவாக உள்ளது, தக்காளி சேர்க்க வேண்டும் இஞ்சி
பூண்டு பச்சை மனம் போகவேண்டும் என்றார். எதையும் சுவைக்கமலே எப்படி சொல்ல
முடிகிறது என்றேன். அவர் நான் காலையில் சாப்பிடவில்லை. பசி இருக்கும் போது மனத்தை
வைத்தே அனைத்தையும் கண்டுபிடுத்துவிடலாம். பசி அடங்கிவிட்டால் அது முடியாது
என்றார். எனக்கு ஆச்சிரியமாக இருந்தது. அபொழுதான் எனக்கு புரிந்தது சமைப்பது ஒரு
தியானம். சுவை ஒரு ஞனம் என்று. இருதிவரை அவர் அந்த பிரியானியை சுவைக்கவே இல்லை. அது
போல ஒரு பிரியானியை இதுவரை நான் சுவைத்ததுமில்லை.
என் மனைவியிடம் நீ
இதுவரை சாப்பிடதில் மிக சுவையான உணவு எது என்று கேட்டேன். ஒரு டீ என்றார்.
மனைவி , ஒரு காலை வேலையில் வானியம்பாடிக்கு ரயிலில் வந்துக்கொண்டு
இருந்தேன். தீடீரென இருள் சூழ்ந்து மழைவரத்துவங்கியாது. மெல்லிய குளிர்காற்று என்
மனதில் புகுந்து அழகான நினைவுகளோடு பேசிக்கொண்டு இருந்தது. நான் மழையை
பார்த்துக்கொண்டு இருந்தேன். அப்பொழுது ஒருவன் டீ டீ என்று கத்திக்கொண்டு
வந்தான்.அவன் என்னை கடந்துவிட்டான் ஆனால் என் மனம் அவன் பின்னால் சென்று அவனை
அழத்து வந்தது. அவன் ஒரு புன்னகையொடு அந்த டீயை எனக்கு கொடுத்துவிட்டு சென்றான்.
இரயில் இருக்கையில் ஜன்னல் ஓரமாக ஒடுங்கி அமர்ந்து அந்த டீயை பருகத்துவங்கினேன். கத
கதப்பான வெம்மையை என் கைகள் உணர்ந்தன. டீயின் மனத்தை நாசி உணர்ந்தது. மெல்லிய
கசப்போடு ஏலக்கை சுவையும் டீயின் சுவையும் என் நா உணர்ந்தது. மழையின் குளிரும்
அந்த டீயின் வெம்மையும் ஒன்று சேர்ந்து என்னை ஆட்கொண்ட தருனம் வாழ்வில் மறக்க
முடியாத அனுபவம் என்று கூறி முடித்தார்.
சுவை என்பது ஒரு அழகியல்.
மனதிற்கினிய சூழல் அதை மறக்கமுடியாத அனுபவமாக மாற்றுகிறது. இது போன்ற தருணங்களில் உணவில் உறையும் வெம்மையும், குளிர்ச்சியும் கூட நாம் சுவையாக உணர்வோம்.
வீட்டில்
பெண்கள் தன் அன்பை, காதலை மிக சுவையான உணவை நமக்கு பரிமாறுவதன் மூலம் பகிர்ந்து
கொள்கிறார்கள் என்பது என் எண்ணம்.
எந்த உணவாக இருந்தாளும் மூன்று
கவளங்கலுக்கு மேல் எனக்கு சுவை தெரியாது. டிவி பார்த்துக்கொண்டு தான் நான்
உணவருந்துவேன். சுவையை பற்றி சிந்தித்த கடந்த சில நாட்களாக சமைப்பது மட்டும் கலை
அல்ல, சுவைப்பதும் ஒரு கலை என்று அறிகிறேன். என்னை கொஞ்ச கொஞ்சமாக மாற்றிக்கொள்ள
முயல்கிறேன்.
அடுப்பிலெரியும் நெருப்பில் அமர்ந்திருக்கறது பேருருளி இப்பூமி. அது சமைத்துவெளித்தள்ளும் உணவை உண்ணும் உணவே உடலாகிறது . பசி என்பது உணவுக்காக உணவு கொள்ளும் வேட்கை. சுவை என்பது உணவை உணவு கண்டுகொள்ளும் உவகை. நிறைவென்பது உணவு உணவாகும் தருணம்.வளர்வதென்பது உணவு உணவில் படர்ந்தேறும் நீட்சி. இறப்பென்பது உணவிடம் உணவு தோற்கும் கணம். உணவின் சுவையே உலகமாகும் . - வென்முரசு நாவல் ( ஜெயமோகன் - மாகாபாரதம் )
அடுப்பிலெரியும் நெருப்பில் அமர்ந்திருக்கறது பேருருளி இப்பூமி. அது சமைத்துவெளித்தள்ளும் உணவை உண்ணும் உணவே உடலாகிறது . பசி என்பது உணவுக்காக உணவு கொள்ளும் வேட்கை. சுவை என்பது உணவை உணவு கண்டுகொள்ளும் உவகை. நிறைவென்பது உணவு உணவாகும் தருணம்.வளர்வதென்பது உணவு உணவில் படர்ந்தேறும் நீட்சி. இறப்பென்பது உணவிடம் உணவு தோற்கும் கணம். உணவின் சுவையே உலகமாகும் . - வென்முரசு நாவல் ( ஜெயமோகன் - மாகாபாரதம் )
சுவைப்போம் வாழ்வை சுவையாக்குவோம்.
திங்கள், அக்டோபர் 13, 2014
தமிழிசை ஓர் அறிமுகம்
ஜுபைல் சொல்வேந்தர் மன்றத்தில் "தமிழிசை " என்ற தலைப்பில் பேசினேன்.
அதன் VIDEO வடிவம்.
AUDIO வடிவம் பதிவிறக்கம்
வியாழன், அக்டோபர் 02, 2014
இசை
இசை என்ற தலைப்பில் ஜுபைல் தமிழ் சொல் வேந்தர் மன்றத்தில் பேசியது
ஒலி
காற்றின் அதிர்வு ஒலி. காற்று இல்லையேல் ஒலி இல்லை. மனிதனின் வாழ்வியலுக்கும் வளர்சிச்க்கும் ஒலி தேவை. அதனால் தான் நமக்கு காதுகள் இருக்கின்றது. வாழ்வின் இயக்கத்திற்கு ஒலியே தேவையில்லாத உயிரினங்கள் இருக்கின்றன பாம்புகளை போல, அவைகளுக்கு காதுகள் இல்லை.
ஒலி நமக்கோர் உணர்வு. அது நம்மை பாதுகாக்க உதவுகிறது. " படார்" என்று பெரும் சத்தம் எழும்போது மூலை நமக்குள் பயத்தை தோற்றுவித்து தப்பிக்க தயார் படுத்துகிறது.
ஒலி நமக்கு மொழி. தான் எண்ணங்களை ஒலியாக்கி அதை மொழி வடிவாக்கி மற்றவர்களிடம் அதை பகிரத்துவங்கியுடன் மனிதனின் மாபெரும் வளர்ச்சி துவங்கிவிட்டது.
ஒலி நமக்கு இசை. எந்த ஒலி நமக்கு இசை ? அல்லது ஒலியின் எந்த வடிவம் நமக்கு இசை ? இது ஒரு சிக்கலான கேள்வி . இதற்க்கு ஒவ்வொருவரிடமும் ஒரு பதில் இருக்கும். ஆனால் என்னிடம் இருக்கும் பதில் இதுதான்.
மனம் எண்ணங்களால் ஆனது. எண்ணங்கள் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு எண்ணங்களும் ஒரு அதிர்வை எழுப்புகிறது. அதை மன அதிர்வுகள் அல்லது மன உணர்வுகள் என்று கூரலாம். மேலும் அந்த மன அதிர்வுகளை அல்லது உணர்வுகளை பாசம், நேசம் , அன்பு , மகிழ்வு , துள்ளல் , துக்கம், எரிச்சல் பயம் என்று வகையிடலாம்.
ஒரு கருவியில் ஒரு குறிப்பிட்ட அதிர்வில் ஒரு ஒலியை ஏற்படுத்தி உங்கள் மனதில் குறிப்பிட்ட அதிர்வுகளை எழுப்பினால் மேற்சொன்ன அனைத்து உணர்வுகளையும் மனதில் எழுப்பிவிட முடியும்.
அதில் உன்னதமான மன உணர்வுகளை எழுப்பும் ஒலியை அதிர்வுகளை "இசை" எனலாம்.
ஒரு வயலின் கலைஞ்சன் ஒரு இசை கோர்வையை வாசித்து நம்மை துக்கத்தின் உச்சிக்கு கொண்டுசெல்லமுடியும்.
ஒரு பறையை இசைத்து நம்மை கலிவெரியின் உச்சத்துக்கு கொண்டுசெல்ல முடியும்.
இசையை நேசிக்கும், இசையை நாடும் மனதிற்கு இசைக்கருவிகூட தேவையே இல்லை. அவர்களுக்கு மழை துளிகள் கீழிருக்கும் நீர்வெளியில் விழுந்து எழுப்பும் ஒலிகூட இசைதான்.
A.R . ரகுமான் அவர்களின் ஒரு காணொளியை பாருங்கள்.
http://www.youtube.com/watch?v=8SzQHC0AZTc
இசை வெறும் மன உணர்வுகளை மட்டுமே எழுப்பக்கூடியதா?
இந்த கேள்விக்கு பதில் கூரும்முன் நம் தமிழ் இசை மரபை அறிந்து கொள்வது நலம்.
நம்மிடம் மூன்று இசை மரபுகள் இருக்கின்றது.
1.சடங்கு இசை
நாம் பழங்குடி மரபில் சடங்குகளின் போது தெய்வங்களின் முன் ஆடும் ஆடலுக்கு, இசைக்கும் இசை. இது ஒவ்வொரு குழுவுக்கும் ஒவ்வொரு சடங்குளுக்கும் தெய்வங்களுக்கும் மாறுபடும்.
2. நாட்டாரிசை
சடங்கு இசையின் மேம்பட்ட வடிவம் நாட்டாரிசை.
"நாட்டார் இசை மரபு " நம் பண்பாட்டின் முக்கிய அடையாளம்.
இந்த இசையின் வடிவம் ஒவ்வொரு நிலப்பகுதிக்கும் மாறுபடும்.
சமுகத்தின் பல்வேறு நிகழ்வுகளிலிருந்து தனக்கான வடிவத்தை அது பெறுகின்றது. அந்த மக்களின் வாழ்விலிருந்து அதற்க்கான பேசு பொருளை எடுத்துக்கொள்கிறது.
மீனவனின் வாழ்வு துக்கமும், தாபமும் , காத்திருப்பும் நிறைந்தது .
அவை அவன் இசையிலும் வழிந்தோடும்.
அவன் இசைக்கான தாளம் துடுப்புப்போடும் அசைவிளிருந்தும் , ராகம் கடல்காற்று வீசும் சந்தத்திலிருந்து கிடைக்கிறது.
பலர் கூட்டாக சேர்ந்து உழைக்கும் வேலான்மக்களின் இசை வடிவம் முற்றிலும் வேறானது . அந்த இசைக்கான தாளம், நாற்று நடுவதிளிருந்தும், போர் அடிப்பதிளிருந்தும், உரல் இடிபதிளிருந்தும் கிடைக்கிறது.
ஒரு தாலாட்டுப்பாடளுக்கு தொட்டில் சென்றுவரும் நேரம் அந்த இசைக்கான தாளக்கட்டு.
"தன்உமை " என்ற சிறு பறையை அறுவடைக்கு முன் வயலை சுற்றி அடித்துக்கொண்டே வருவர். அந்த சத்தத்தை கேட்டு அந்த வயலில் வாழும் பறவைகள், சிறு உயிர்கள் எல்லாம் வெளியேறும். மறுநாள் விவசாய்கள் வயலில் இறங்கி வருவடை செய்வர்.
உழைப்பின் களைப்பு நீங்கவும், உழைப்பை ஒரு கொண்டாட்டமாக மாற்றவும் இசை அவர்களுக்கு உதவியது.
மலை மற்றும் , காடுசார்ந்த மக்கள் விலங்குகளை விரட்டவும், அவைகளிலிருந்து தன்னை காத்துக்கொள்ளவும் பறை ஒலியை பயன்படுத்தினர். பின் அவர்களின் இசையில் இடைவிடாது ஒலிக்கும் காட்டின் ரீங்காரமும், பறவைகளின் காதல் மொழியும், சலசலக்கும் ஓடையின் ஒலியும் கலந்தது.
ஆனால் இன்று நாட்டாரிசை பாலாறு போல தன் ஈரம் உலர்ந்து ஈரம் ஊரும் மணலை இழந்து வழி மறந்து நிற்கிறது.
இன்று பல தண்ணார்வ நண்பர்கள் அந்த கலைகளை தாங்கிட தோள் கொடுக்கின்றனர். ஆய்வு செய்கின்றனர்.
அவர்களை வாழ்த்துவோம்.
3. செவ்வியல் இசை
நாட்டார் இசையில் நிபுணத்துவம் பெற்ற கலைஞ்சர்கள் வெவ்வேறு பகுதி மக்களின் இசை வடிவங்களை உள்வாங்கி ஒரு பொதுவான இசை வடிவை உருவாக்கி அதற்க்கான இலக்கனகளை வகுத்த போது ஒரு புதிய இசை மரபு உருவானது. அந்த இசை அந்த ஒட்டுமொத்த நிலப்பரப்பின் பொது இசை வடிவமாக அடையாளம் காணப்படுகின்றது. அது செவ்வியல் இசை என்று அழைக்கப்படுகிறது.
சங்ககாலத்தில் தழைத்தோங்கிய செவ்வியல் இசை மரபு "பன்னிசை மரபு" என்று அழைக்கப்பட்டது. அதை நிகழ்த்தியவர்கள் "பாணர்கள்" என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் நாடோடிகளாக திரிந்து ஒரு பகுதியின் நிகழ்வுகளை இனொரு பகுதிக்கு பாடல்கள் மூலம் தெரிவித்து பரிசில் பெற்றனர். அவர்கள் பயன்படுத்திய இசைக்கருவி "யாழ்". இவர்கள் சமுகத்தின் உயர்குடிகளாக மதிக்கப்பட்டனர்.
கி.பி இரண்டம் நூற்றண்டுக்கு பிறகு சமனமும், பௌத்தமும் தழைத்தோங்கிய போது இந்த இசை மரபு அழியத்துவங்கியது. பானர்கள் சமுகத்தின் கீழ் நிலைக்கு தல்லப்பட்டனர்.
அதன் பின் ஏழாம் நூற்றாண்டில் பக்தி இயக்கங்கள் உருவான போது பன்னிசை புத்துயிர் பெற்றது. சைவ நாயன்மார்களும் வைனவர்களும் பக்தியை பரப்ப பன்னிசையை ஒரு ஊடகமாக பயன் படுத்தினர். சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் நாடு முழுவதும் கோவில்களை எழுப்பி இசை வழியே பக்தியை பரப்பினர்.
12ம் நூற்றாண்டில் இஸ்லாமிய படைஎடுப்பின் மூலம் இந்த இசை மெல்ல அழியத்துவங்கியது. இந்த காலகட்டத்தில் " சாரங்கதேவர்" என்னும் இசை வல்லுனர் தென்னக இசையை முழுமையாக தொகுத்து "சங்கீத ரத்னாகரம் " என்ற நூலை இயற்றினார்.
15ம் நூற்றாண்டில் நாயக்கர் ஆட்சி எழுச்சி பெற்ற போது இந்த நூலை மையமாக வைத்து மீண்டும் பன்னிசை இசை மரபு தழைக்கத்துவங்கியது. அது நாட்டார் மரபின் அனைத்துகூறுகளையும் எடுத்துக்கொண்டு சிறப்பு பெற்றது. அதன் மிக முக்கிய முன்னோடிகள் அருனாசல கவிராயர், மாரிமுத்தா பிள்ளை, முத்துத்தாண்டவர் மூவரும் ஆவர்.
அதே காலகட்டத்தில் வட இந்திய இசை மரபும் இங்கு பரவி இருந்தது. தமிழ் பன்னிசையும் வட இந்திய இசையும் கலந்து புதியதோர் இசை மரபு உருவானது. அது " கர்-நாடக இசை மரபு" என்று அழைக்கப்பட்டது.
மொகலாயர் ஆட்சியில் அனைத்து ஆவனங்களிலும் தென்னகமானது கர்-நாடகம் என்றே குறிப்பிடப்பட்டது. இங்கு ஆட்சி செய்த மொகலாய குறு நில மன்னர்கள் கர்-நாடக நவாபுகள் என்று அழைக்கப்பட்டனர். அதே வழியில் இங்கு உருவகிய இந்த இசையையும் " கர்-நாடக இசை" என்றே அழைத்தனர்.
தெலுகு நாயக்கர் ஆட்சி காலத்தில் கோவில் பனிகளிலும் பக்தி இயக்கங்களிலும் பிராமனர்கள் முக்கிய பங்கு வகித்தனர். அவர்கள் மூலமாகவே இந்த இசை வளர்த்தெடுக்கப்பட்டது. இதன் முக்கிய முன்னோடிகள் ஆந்திரத்தில் அன்னமாச்சாரியா, கர்னாடகத்தில் புரந்தர தாசர் , தமிழகத்தில் தியாகரஜயர், சியாமா சாஷ்த்திரி, முத்து சாமி தீட்சிதர் ஆவர்.
நாயக்கர்களின் அரச சபையால் கர்-நாடக இசை வளர்த்தெடுக்கப்பட்டதால் இதன் மொழி தெலுங்காகவும், சமஷ்கிருதமாகவும் இருக்கிறது. கர்-நாடக இசை இன்று ஒட்டுமொத்த தென்னகத்தின் இசை வடிவமாக திகழ்ந்தாளும் அதன் வேர் தமிழ் பன்னிசை என்பது மகிழ்வான விசயமே.
வாழ்க்கை கொண்டாட்டமாக இருந்த போது இசை நம் வாழ்வின் ஒரு பகுதியாக இருந்தது. இன்று வாழ்க்கை ஒரு கடமையாக மாறியதன் விளைவாக இசை நமக்கு தேவையற்றதாக மாறிவருகிறது.
தமிழிசை இசை மரபு பல நூறுவருட தொன்மை கொண்டது. அது வெரும் மனழுச்சிக்காக மட்டுமே அல்ல, அது இதயத்தின் அனைத்துக்கதவுகளையும் திறக்கும், நம்மை ஆன்மாவை உணரச்செய்து தெய்வத்தின் அருகில் கொண்டு போய் நிருத்திவிடும். ஞனத்தை அளிக்கும்.
அதை பற்றிய ஒரு எளிய அறிமுகத்தை உங்களோடு பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
வாழ்க தமிழ். வாழ்க தமிழினம்.
ஒலி
காற்றின் அதிர்வு ஒலி. காற்று இல்லையேல் ஒலி இல்லை. மனிதனின் வாழ்வியலுக்கும் வளர்சிச்க்கும் ஒலி தேவை. அதனால் தான் நமக்கு காதுகள் இருக்கின்றது. வாழ்வின் இயக்கத்திற்கு ஒலியே தேவையில்லாத உயிரினங்கள் இருக்கின்றன பாம்புகளை போல, அவைகளுக்கு காதுகள் இல்லை.
ஒலி நமக்கோர் உணர்வு. அது நம்மை பாதுகாக்க உதவுகிறது. " படார்" என்று பெரும் சத்தம் எழும்போது மூலை நமக்குள் பயத்தை தோற்றுவித்து தப்பிக்க தயார் படுத்துகிறது.
ஒலி நமக்கு மொழி. தான் எண்ணங்களை ஒலியாக்கி அதை மொழி வடிவாக்கி மற்றவர்களிடம் அதை பகிரத்துவங்கியுடன் மனிதனின் மாபெரும் வளர்ச்சி துவங்கிவிட்டது.
ஒலி நமக்கு இசை. எந்த ஒலி நமக்கு இசை ? அல்லது ஒலியின் எந்த வடிவம் நமக்கு இசை ? இது ஒரு சிக்கலான கேள்வி . இதற்க்கு ஒவ்வொருவரிடமும் ஒரு பதில் இருக்கும். ஆனால் என்னிடம் இருக்கும் பதில் இதுதான்.
மனம் எண்ணங்களால் ஆனது. எண்ணங்கள் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு எண்ணங்களும் ஒரு அதிர்வை எழுப்புகிறது. அதை மன அதிர்வுகள் அல்லது மன உணர்வுகள் என்று கூரலாம். மேலும் அந்த மன அதிர்வுகளை அல்லது உணர்வுகளை பாசம், நேசம் , அன்பு , மகிழ்வு , துள்ளல் , துக்கம், எரிச்சல் பயம் என்று வகையிடலாம்.
ஒரு கருவியில் ஒரு குறிப்பிட்ட அதிர்வில் ஒரு ஒலியை ஏற்படுத்தி உங்கள் மனதில் குறிப்பிட்ட அதிர்வுகளை எழுப்பினால் மேற்சொன்ன அனைத்து உணர்வுகளையும் மனதில் எழுப்பிவிட முடியும்.
அதில் உன்னதமான மன உணர்வுகளை எழுப்பும் ஒலியை அதிர்வுகளை "இசை" எனலாம்.
ஒரு வயலின் கலைஞ்சன் ஒரு இசை கோர்வையை வாசித்து நம்மை துக்கத்தின் உச்சிக்கு கொண்டுசெல்லமுடியும்.
ஒரு பறையை இசைத்து நம்மை கலிவெரியின் உச்சத்துக்கு கொண்டுசெல்ல முடியும்.
இசையை நேசிக்கும், இசையை நாடும் மனதிற்கு இசைக்கருவிகூட தேவையே இல்லை. அவர்களுக்கு மழை துளிகள் கீழிருக்கும் நீர்வெளியில் விழுந்து எழுப்பும் ஒலிகூட இசைதான்.
A.R . ரகுமான் அவர்களின் ஒரு காணொளியை பாருங்கள்.
http://www.youtube.com/watch?v=8SzQHC0AZTc
இசை வெறும் மன உணர்வுகளை மட்டுமே எழுப்பக்கூடியதா?
இந்த கேள்விக்கு பதில் கூரும்முன் நம் தமிழ் இசை மரபை அறிந்து கொள்வது நலம்.
நம்மிடம் மூன்று இசை மரபுகள் இருக்கின்றது.
1.சடங்கு இசை
நாம் பழங்குடி மரபில் சடங்குகளின் போது தெய்வங்களின் முன் ஆடும் ஆடலுக்கு, இசைக்கும் இசை. இது ஒவ்வொரு குழுவுக்கும் ஒவ்வொரு சடங்குளுக்கும் தெய்வங்களுக்கும் மாறுபடும்.
2. நாட்டாரிசை
சடங்கு இசையின் மேம்பட்ட வடிவம் நாட்டாரிசை.
"நாட்டார் இசை மரபு " நம் பண்பாட்டின் முக்கிய அடையாளம்.
இந்த இசையின் வடிவம் ஒவ்வொரு நிலப்பகுதிக்கும் மாறுபடும்.
சமுகத்தின் பல்வேறு நிகழ்வுகளிலிருந்து தனக்கான வடிவத்தை அது பெறுகின்றது. அந்த மக்களின் வாழ்விலிருந்து அதற்க்கான பேசு பொருளை எடுத்துக்கொள்கிறது.
அவை அவன் இசையிலும் வழிந்தோடும்.
அவன் இசைக்கான தாளம் துடுப்புப்போடும் அசைவிளிருந்தும் , ராகம் கடல்காற்று வீசும் சந்தத்திலிருந்து கிடைக்கிறது.
பலர் கூட்டாக சேர்ந்து உழைக்கும் வேலான்மக்களின் இசை வடிவம் முற்றிலும் வேறானது . அந்த இசைக்கான தாளம், நாற்று நடுவதிளிருந்தும், போர் அடிப்பதிளிருந்தும், உரல் இடிபதிளிருந்தும் கிடைக்கிறது.
ஒரு தாலாட்டுப்பாடளுக்கு தொட்டில் சென்றுவரும் நேரம் அந்த இசைக்கான தாளக்கட்டு.
"தன்உமை " என்ற சிறு பறையை அறுவடைக்கு முன் வயலை சுற்றி அடித்துக்கொண்டே வருவர். அந்த சத்தத்தை கேட்டு அந்த வயலில் வாழும் பறவைகள், சிறு உயிர்கள் எல்லாம் வெளியேறும். மறுநாள் விவசாய்கள் வயலில் இறங்கி வருவடை செய்வர்.
உழைப்பின் களைப்பு நீங்கவும், உழைப்பை ஒரு கொண்டாட்டமாக மாற்றவும் இசை அவர்களுக்கு உதவியது.
மலை மற்றும் , காடுசார்ந்த மக்கள் விலங்குகளை விரட்டவும், அவைகளிலிருந்து தன்னை காத்துக்கொள்ளவும் பறை ஒலியை பயன்படுத்தினர். பின் அவர்களின் இசையில் இடைவிடாது ஒலிக்கும் காட்டின் ரீங்காரமும், பறவைகளின் காதல் மொழியும், சலசலக்கும் ஓடையின் ஒலியும் கலந்தது.
ஆனால் இன்று நாட்டாரிசை பாலாறு போல தன் ஈரம் உலர்ந்து ஈரம் ஊரும் மணலை இழந்து வழி மறந்து நிற்கிறது.
இன்று பல தண்ணார்வ நண்பர்கள் அந்த கலைகளை தாங்கிட தோள் கொடுக்கின்றனர். ஆய்வு செய்கின்றனர்.
அவர்களை வாழ்த்துவோம்.
3. செவ்வியல் இசை
நாட்டார் இசையில் நிபுணத்துவம் பெற்ற கலைஞ்சர்கள் வெவ்வேறு பகுதி மக்களின் இசை வடிவங்களை உள்வாங்கி ஒரு பொதுவான இசை வடிவை உருவாக்கி அதற்க்கான இலக்கனகளை வகுத்த போது ஒரு புதிய இசை மரபு உருவானது. அந்த இசை அந்த ஒட்டுமொத்த நிலப்பரப்பின் பொது இசை வடிவமாக அடையாளம் காணப்படுகின்றது. அது செவ்வியல் இசை என்று அழைக்கப்படுகிறது.
சங்ககாலத்தில் தழைத்தோங்கிய செவ்வியல் இசை மரபு "பன்னிசை மரபு" என்று அழைக்கப்பட்டது. அதை நிகழ்த்தியவர்கள் "பாணர்கள்" என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் நாடோடிகளாக திரிந்து ஒரு பகுதியின் நிகழ்வுகளை இனொரு பகுதிக்கு பாடல்கள் மூலம் தெரிவித்து பரிசில் பெற்றனர். அவர்கள் பயன்படுத்திய இசைக்கருவி "யாழ்". இவர்கள் சமுகத்தின் உயர்குடிகளாக மதிக்கப்பட்டனர்.
கி.பி இரண்டம் நூற்றண்டுக்கு பிறகு சமனமும், பௌத்தமும் தழைத்தோங்கிய போது இந்த இசை மரபு அழியத்துவங்கியது. பானர்கள் சமுகத்தின் கீழ் நிலைக்கு தல்லப்பட்டனர்.
அதன் பின் ஏழாம் நூற்றாண்டில் பக்தி இயக்கங்கள் உருவான போது பன்னிசை புத்துயிர் பெற்றது. சைவ நாயன்மார்களும் வைனவர்களும் பக்தியை பரப்ப பன்னிசையை ஒரு ஊடகமாக பயன் படுத்தினர். சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் நாடு முழுவதும் கோவில்களை எழுப்பி இசை வழியே பக்தியை பரப்பினர்.
12ம் நூற்றாண்டில் இஸ்லாமிய படைஎடுப்பின் மூலம் இந்த இசை மெல்ல அழியத்துவங்கியது. இந்த காலகட்டத்தில் " சாரங்கதேவர்" என்னும் இசை வல்லுனர் தென்னக இசையை முழுமையாக தொகுத்து "சங்கீத ரத்னாகரம் " என்ற நூலை இயற்றினார்.
15ம் நூற்றாண்டில் நாயக்கர் ஆட்சி எழுச்சி பெற்ற போது இந்த நூலை மையமாக வைத்து மீண்டும் பன்னிசை இசை மரபு தழைக்கத்துவங்கியது. அது நாட்டார் மரபின் அனைத்துகூறுகளையும் எடுத்துக்கொண்டு சிறப்பு பெற்றது. அதன் மிக முக்கிய முன்னோடிகள் அருனாசல கவிராயர், மாரிமுத்தா பிள்ளை, முத்துத்தாண்டவர் மூவரும் ஆவர்.
அதே காலகட்டத்தில் வட இந்திய இசை மரபும் இங்கு பரவி இருந்தது. தமிழ் பன்னிசையும் வட இந்திய இசையும் கலந்து புதியதோர் இசை மரபு உருவானது. அது " கர்-நாடக இசை மரபு" என்று அழைக்கப்பட்டது.
மொகலாயர் ஆட்சியில் அனைத்து ஆவனங்களிலும் தென்னகமானது கர்-நாடகம் என்றே குறிப்பிடப்பட்டது. இங்கு ஆட்சி செய்த மொகலாய குறு நில மன்னர்கள் கர்-நாடக நவாபுகள் என்று அழைக்கப்பட்டனர். அதே வழியில் இங்கு உருவகிய இந்த இசையையும் " கர்-நாடக இசை" என்றே அழைத்தனர்.
தெலுகு நாயக்கர் ஆட்சி காலத்தில் கோவில் பனிகளிலும் பக்தி இயக்கங்களிலும் பிராமனர்கள் முக்கிய பங்கு வகித்தனர். அவர்கள் மூலமாகவே இந்த இசை வளர்த்தெடுக்கப்பட்டது. இதன் முக்கிய முன்னோடிகள் ஆந்திரத்தில் அன்னமாச்சாரியா, கர்னாடகத்தில் புரந்தர தாசர் , தமிழகத்தில் தியாகரஜயர், சியாமா சாஷ்த்திரி, முத்து சாமி தீட்சிதர் ஆவர்.
நாயக்கர்களின் அரச சபையால் கர்-நாடக இசை வளர்த்தெடுக்கப்பட்டதால் இதன் மொழி தெலுங்காகவும், சமஷ்கிருதமாகவும் இருக்கிறது. கர்-நாடக இசை இன்று ஒட்டுமொத்த தென்னகத்தின் இசை வடிவமாக திகழ்ந்தாளும் அதன் வேர் தமிழ் பன்னிசை என்பது மகிழ்வான விசயமே.
வாழ்க்கை கொண்டாட்டமாக இருந்த போது இசை நம் வாழ்வின் ஒரு பகுதியாக இருந்தது. இன்று வாழ்க்கை ஒரு கடமையாக மாறியதன் விளைவாக இசை நமக்கு தேவையற்றதாக மாறிவருகிறது.
தமிழிசை இசை மரபு பல நூறுவருட தொன்மை கொண்டது. அது வெரும் மனழுச்சிக்காக மட்டுமே அல்ல, அது இதயத்தின் அனைத்துக்கதவுகளையும் திறக்கும், நம்மை ஆன்மாவை உணரச்செய்து தெய்வத்தின் அருகில் கொண்டு போய் நிருத்திவிடும். ஞனத்தை அளிக்கும்.
அதை பற்றிய ஒரு எளிய அறிமுகத்தை உங்களோடு பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
வாழ்க தமிழ். வாழ்க தமிழினம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
