"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

வெள்ளி, ஆகஸ்ட் 12, 2016

" கோட்டி " சிறுகதை

திரு. எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய அறம் சிறுகதை


தொகுப்பிலிருந்து " கோட்டி " சிறுகதை

வாசிப்பது - கிராமத்தான்



செவ்வாய், ஆகஸ்ட் 02, 2016

" நீலம் " 2016



அன்புள்ள நண்பர்களுக்கு,

நான் மற்றும் என் இரு தம்பிகளும் ( சிவா & சங்கர் ) இணைந்து கடந்த வருடம் " நீலம் " என்ற பெயரில் ஒரு கல்வி அறக்கட்டளை துவங்கினோம். மாதம் ஒரு சிறு தொகையை சேமித்து கிராமத்து பள்ளி குழந்தைகளுக்கு உதவுவதாக திட்டம்.

இதுவரை இரண்டு திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம்.

1. நான் படித்த அணங்காநல்லூர் ( வேலூர் மாவடடம் ) ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஒரு ஆங்கில ஆசிரியரை அமர்த்தி குழந்தைகளுக்கு ஆங்கில வகுப்புகளை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் துவங்கி இன்றுவரை நல்ல முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறன. அந்த ஆசிரியைக்கு முதலில் மாதம் 2500 ரூபாய் கொடுத்தோம் இப்போது கடந்த இரண்டு மாதங்களாக 3000 ரூபாய் தருகிறோம்.

2. அருகில் உள்ள இன்னொரு கிராம பள்ளிக்கு டிஜிடல்  வகுப்பறை அமைக்க 20000 ரூபாய் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

அந்த பிள்ளைகளின் கல்விகற்கும் திறன் நன்கு வளர்ந்துள்ளது. அவர்களின் முன்னேற்றம் பெரும் மன நிறைவையும் மகிழ்சியையும் அளிக்கிறது.

இந்த மகிழ்ச்சியை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணம் உருவாக்கி உள்ளது.

இந்த வருடமும் நான் படித்த கிராமத்து பள்ளியில் சிறுவர்களுக்கான ஒரு சிறந்த நூலகம் அமைக்க வேண்டும் என்று எண்ணியிருதோம் . அதை தலைமை ஆசிரியரிடம் தெரிவித்த போது அவர் சில புகைப்படங்களை அனுப்பி இருந்தார். அவை பள்ளியின் கழிப்பிட புகைப்படங்கள். சீரழிந்து பாழடைந்து இருந்தது. அதனால் பெண் பிள்ளைகள் எவ்வளவு கஷ்ட்டப்படுகிறார்கள் என்று விவரித்து இருந்தார்.

என் நூலக எண்ணத்தை கைவிட்டு கழிப்பறையை சீராக்களாம்   என்று நினைத்தேன். இந்த பணியை  முடிக்க நண்பர்களாகிய உங்கள் கரங்களை கோர்ப்பது முக்கியம்.

உங்கள் கனிவான பங்களிப்பை அளிக்குமாறு உரிமையுடன் கோருகிறேன். ஆளுக்கொரு நூல் கொடுத்தால் ஏழைக்கு ஒரு சட்டை உருவாக்கிவிடலாம்.

நன்றி .



ஞாயிறு, ஜூலை 24, 2016

"மத்துறு தயிர் "



திரு எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய " அறம் "  சிறுகதை தொகுப்பிலிருந்து

 "மத்துறு தயிர் "

வாசிப்பது - கிராமத்தான் 

வெள்ளி, ஜூலை 22, 2016

நீ இல்லாத நாட்களில்


நடு இரவு தாண்டியும் தூக்கம் வரவில்லை

மணமகன் அறையிலிருந்து வெளியே வந்தேன். நாட்டியம் முடித்து அணிகலன் கலைந்து அமர்ந்திருக்கும் மங்கை போல இருந்தது மண்டபம்.

என்னை கடந்து சென்ற தொல் தூரத்து அக்கா ஒருவர் என்ன தம்பி தூங்களையா என்று கேட்டு விட்டு நடந்தார்.

நான் மறுபடியும் அறைக்குள் நுழைந்தேன். லட்டு வாசனை, மூலையில் குவிந்திருக்கும் ரோஜா மாலையின் வாசனை களைத்து குவிக்கப்படட புடவைகளின் வாசனை அங்கு உறங்கிக்கொண்டு இருந்த சொந்தங்களின் வியர்வை நெடி அத்தனையும் நாசியில் ஏறி மூளையை தொட்டது.

அங்கும் இங்கும் தாவி கட்டிலை அடைந்து படுத்துக்கொண்டேன். அந்த கட்டிலில் நான்கு ஐந்து குழந்தைகள் படுத்திருந்தான. அருகிலிருந்த குழந்தை பட்டு பாவாடை சட்டை அணிந்து கண்களில் தீட்டிய மை கலந்து கொழுத்த கரிய கைகளில் மாட்டியிருந்த சிவப்பு வளையல்கள் சரிந்து கிடைக்க குட்டி அம்மன் போல் தூங்கிக்கொண்டு இருந்தது.

வாழ்வின் முக்கியமான நிகழ்வு சாதாரணமாக என்னை கடந்து போவதாக எனக்கு தோன்றியது. அந்த நினைப்பே மனதில் வெறுமையை கூட்டியது.

உன்னிடமிருந்து ஏதாவது குறுந்செய்தி வந்திருக்கிறதா என்று பார்க்க செல்பேசியை எடுத்தேன், திடீரென அழைப்பு வந்தது.

என்ன தூக்கம் வரலையா ......என்றாய்

கவலை படாத "நாளையிலிருந்து நா உன் கூட இருப்பேன்"   என்றாய் 

அப்போது அந்த வார்த்தை எனக்கு சாதாரணமாக இருந்தது

நீயும் சாதாரணமாக தான்  சொல்லியிருப்பாய்

வெகு நாட்களுக்குப்பின் அந்த வார்த்தைகள் இன்று நினைவிலிருந்து இயல்பாக எழுந்து வந்தன ..

கடந்த ஏழு வருடங்களின் முக்கியமான தருணங்களை அந்த வார்த்தைகள் தொட்டு தொட்டு சென்று கொண்டே இருக்கின்றன.

என் காத்திருப்பின் கணங்களை கனமாக்கி மனதை தவிப்பால் நிறப்புகின்றன.