ஒரு நிமிடம் அவனால் ஓரிடத்தில் சும்மா இருக்க முடியவில்லை.
அவன் கையிக்கு எட்டும் பொருட்களை எடுத்து விளையாடி விட்டு அவைகளை அப்படியே போட்டுவிட்டு போய்விடுவான், அதனாலேயே அவனுக்கும் அவன் அம்மாவிற்கும் சண்டை வலுக்கும்.
பாதுகாப்பு குறித்த எண்ணங்கள் அவன் மனதில் முளைத்திருக்கிறது. வெளியில் விளையாடும்போது பக்கத்து விட்டு நபர்களை பார்த்தாள் வீட்டுக்குள் ஓடிவந்து கதவடைக்கிறான். என்னை பாதுகாக்கும் பொருட்டு என்னையும் வீட்டுக்குள் இழுக்கிறான். யாரையும் தொட அனுமதிப்பது இல்லை.
வாரம் ஒரு முறை அருகில் இருக்கும் பூங்காவுக்கு அழைத்து செல்கிறேன். மணல் அவனுக்கு மிக சிறந்த விளையாட்டு பொருள். அவன் கற்பனைக்கு தகுந்தவாறு அது வளைந்து கொடுக்கிறது. அதை குவித்தும் பரப்பியும், கைகளில் எடுத்து வீசி எறிவதுமாக விளையாடுகிறான். அவன் மண்ணில் விளையாடுவது எனக்கு பிடித்திருக்கிறது. அழுக்கு படாத உயர்ரக பிள்ளை என்ற எண்ணம் அவனுக்குள் எழாது என நம்புகிறேன்.
பூங்காவில் புறா ஒன்று மரத்தில் அமர்ந்திருந்தது. அதை அசையாமல் நின்று பார்த்துக்கொண்டு இருந்தான். அது ஒரு மரத்திலிருந்து இன்னொரு மரத்துக்கு பறந்தது. தரைக்கு வந்து தான்னியங்களை கொத்தி தின்றது . கரும்பழுப்பு கழுத்தை திருப்பி அவனை பார்த்தது . சத்தம் எழுப்பிக்கொண்டே கொஞ்சம் நடந்தது. பின் மேழேழுந்து பறந்தது .அதன் ஒவ்வொரு அசைவையும் கவனித்துக்கொண்டு இருந்தவன் அது பறந்து சென்ற திசையை நோக்கி " அப்பா" என்று அழைத்து சுட்டி காட்டினான். அவன் ஏதோ சொல்ல வந்தான், ஆனால் சொல்ல முடியவில்லை. சொல்லி இருந்தால் அது அழகான கவிதையாக இருந்திருக்கும்.
பொம்மைகளை அவன் கையாள்வது வித்தியாசமாக இருக்கிறது. நமக்குத்தான் பொம்மைகள் BUS, வாத்து , கரடி, CAR , சைக்கிள் என தெரிகிறது ஆனால் அவனுக்கு, அனைத்தும் கற்பனைக்கு உதவும் பொருட்கள். சைக்கிளை படுக்க வைத்து அதன் சக்கரத்தை சுழற்றுவதில் மகிழ்ச்சி, பஸ்சின் பின் பகுதியை கழற்றி அதன் பாட்டரிகளை எடுத்து உருட்டி விளையாடுவது என்று அவன் கற்பனைக்கு ஏற்ப விளையாடுகிறான்.
அவன் கேட்டு எதையாவது கொடுக்க மறுத்தாலோ அல்லது கவனிக்க மறுத்தாலோ முகத்தில் துக்கம் பொங்கி வழிந்தோடும். அவன் அழும்போது அதட்டி அடக்க முயல்வது இல்லை, அதற்கு பதிலாக அவன் கவனத்தை திசை திருப்ப முயல்கிறோம்.
ஒரு நாள் அவன் கண்களை பார்க்கலாம் என அவனை தூக்கினேன். கையில் அள்ளும் நீர் வழிந்தோடுவது போல என்னிடமிருந்து அவிழ்ந்தோடினான். பின் அவன் புகைப்படம் ஒன்றை கணினியில் திறந்து அவன் கண்களை பார்த்தேன். பின் புருவம் நெற்றி என்று பார்க்க துவங்கும் பொது என் அப்பா நினைவில் வந்தார், அதன் பின்பு என் அண்ணன் மகன் நினைவில் வந்தான் , என் சகளையின் மகன் வந்தான், ஒவ்வொரு உறவுகளாக மனதில் பிம்பமாக தோன்றிக்கொண்டே இருந்தது. இறுதியில் என் பிம்பம் மனதில் தோன்றி நிலைத்தது. இனம்புரியாத பயம் என்னுள் பரவி ஆட்கொண்டது. தீடீரென கண்களை விலக்கிக்கொண்டு அமைதியாக சிறிது நேரம் அமர்ந்திருந்தேன்.
என் அப்பாவை இப்படி ஒரு நிமிடம் பார்த்தாள் சொல்லமுடியாத மன எழுர்ச்சி எழும் என்று எண்ணிக்கொண்டேன்.
சமிப நாட்களில் அவன் கவனம் என் smart போனிலும் அம்மாவின் நோட் padலும் குவிந்துள்ளது. தோடு திரையை தள்ளி பாடல்கள், வீடியோ, போட்டோ போன்றவற்றை திறக்கிறான். அதே பாணியில் சுட்டு விரலைக்கொண்டு டிவியின் திரையை தள்ளிப்பார்க்கிறான். இதையெல்லாம் ரசித்தாலும் உள்ளுக்குள் கொஞ்சம் பயமாக இருக்கிறது. இவன் காலம் தோடு திரை காலம்.
அவன் கையிக்கு எட்டும் பொருட்களை எடுத்து விளையாடி விட்டு அவைகளை அப்படியே போட்டுவிட்டு போய்விடுவான், அதனாலேயே அவனுக்கும் அவன் அம்மாவிற்கும் சண்டை வலுக்கும்.
பாதுகாப்பு குறித்த எண்ணங்கள் அவன் மனதில் முளைத்திருக்கிறது. வெளியில் விளையாடும்போது பக்கத்து விட்டு நபர்களை பார்த்தாள் வீட்டுக்குள் ஓடிவந்து கதவடைக்கிறான். என்னை பாதுகாக்கும் பொருட்டு என்னையும் வீட்டுக்குள் இழுக்கிறான். யாரையும் தொட அனுமதிப்பது இல்லை.
வாரம் ஒரு முறை அருகில் இருக்கும் பூங்காவுக்கு அழைத்து செல்கிறேன். மணல் அவனுக்கு மிக சிறந்த விளையாட்டு பொருள். அவன் கற்பனைக்கு தகுந்தவாறு அது வளைந்து கொடுக்கிறது. அதை குவித்தும் பரப்பியும், கைகளில் எடுத்து வீசி எறிவதுமாக விளையாடுகிறான். அவன் மண்ணில் விளையாடுவது எனக்கு பிடித்திருக்கிறது. அழுக்கு படாத உயர்ரக பிள்ளை என்ற எண்ணம் அவனுக்குள் எழாது என நம்புகிறேன்.
பூங்காவில் புறா ஒன்று மரத்தில் அமர்ந்திருந்தது. அதை அசையாமல் நின்று பார்த்துக்கொண்டு இருந்தான். அது ஒரு மரத்திலிருந்து இன்னொரு மரத்துக்கு பறந்தது. தரைக்கு வந்து தான்னியங்களை கொத்தி தின்றது . கரும்பழுப்பு கழுத்தை திருப்பி அவனை பார்த்தது . சத்தம் எழுப்பிக்கொண்டே கொஞ்சம் நடந்தது. பின் மேழேழுந்து பறந்தது .அதன் ஒவ்வொரு அசைவையும் கவனித்துக்கொண்டு இருந்தவன் அது பறந்து சென்ற திசையை நோக்கி " அப்பா" என்று அழைத்து சுட்டி காட்டினான். அவன் ஏதோ சொல்ல வந்தான், ஆனால் சொல்ல முடியவில்லை. சொல்லி இருந்தால் அது அழகான கவிதையாக இருந்திருக்கும்.
பொம்மைகளை அவன் கையாள்வது வித்தியாசமாக இருக்கிறது. நமக்குத்தான் பொம்மைகள் BUS, வாத்து , கரடி, CAR , சைக்கிள் என தெரிகிறது ஆனால் அவனுக்கு, அனைத்தும் கற்பனைக்கு உதவும் பொருட்கள். சைக்கிளை படுக்க வைத்து அதன் சக்கரத்தை சுழற்றுவதில் மகிழ்ச்சி, பஸ்சின் பின் பகுதியை கழற்றி அதன் பாட்டரிகளை எடுத்து உருட்டி விளையாடுவது என்று அவன் கற்பனைக்கு ஏற்ப விளையாடுகிறான்.
அவன் கேட்டு எதையாவது கொடுக்க மறுத்தாலோ அல்லது கவனிக்க மறுத்தாலோ முகத்தில் துக்கம் பொங்கி வழிந்தோடும். அவன் அழும்போது அதட்டி அடக்க முயல்வது இல்லை, அதற்கு பதிலாக அவன் கவனத்தை திசை திருப்ப முயல்கிறோம்.
ஒரு நாள் அவன் கண்களை பார்க்கலாம் என அவனை தூக்கினேன். கையில் அள்ளும் நீர் வழிந்தோடுவது போல என்னிடமிருந்து அவிழ்ந்தோடினான். பின் அவன் புகைப்படம் ஒன்றை கணினியில் திறந்து அவன் கண்களை பார்த்தேன். பின் புருவம் நெற்றி என்று பார்க்க துவங்கும் பொது என் அப்பா நினைவில் வந்தார், அதன் பின்பு என் அண்ணன் மகன் நினைவில் வந்தான் , என் சகளையின் மகன் வந்தான், ஒவ்வொரு உறவுகளாக மனதில் பிம்பமாக தோன்றிக்கொண்டே இருந்தது. இறுதியில் என் பிம்பம் மனதில் தோன்றி நிலைத்தது. இனம்புரியாத பயம் என்னுள் பரவி ஆட்கொண்டது. தீடீரென கண்களை விலக்கிக்கொண்டு அமைதியாக சிறிது நேரம் அமர்ந்திருந்தேன்.
என் அப்பாவை இப்படி ஒரு நிமிடம் பார்த்தாள் சொல்லமுடியாத மன எழுர்ச்சி எழும் என்று எண்ணிக்கொண்டேன்.
சமிப நாட்களில் அவன் கவனம் என் smart போனிலும் அம்மாவின் நோட் padலும் குவிந்துள்ளது. தோடு திரையை தள்ளி பாடல்கள், வீடியோ, போட்டோ போன்றவற்றை திறக்கிறான். அதே பாணியில் சுட்டு விரலைக்கொண்டு டிவியின் திரையை தள்ளிப்பார்க்கிறான். இதையெல்லாம் ரசித்தாலும் உள்ளுக்குள் கொஞ்சம் பயமாக இருக்கிறது. இவன் காலம் தோடு திரை காலம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக