"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

திங்கள், ஆகஸ்ட் 25, 2014

இரவு

வெளிச்சமின்மை  இருள். இருள் என்றவுடன் கருமை நினைவில் எழுகிறது. அது ரகசியம் நிறைந்ததாக மேலும் விறிகிறது. 

வெளிச்சத்தை அறியாத எத்தனையோ உயிர்கள் இந்த உலகில் இருக்கும் ஆனால் இருள் அறியாத உயிர்கள் இல்லை. இருளை உள்ளிடாக கொண்டு இரவு நிகழ்கிறது. பூவினுள் வாசம் போல.

இரவு எல்லா ஒளியையும் சூழ்ந்து இருக்கிறது. ஒளி அனையும் போது அந்த இரவு மட்டுமே எஞ்சி நிற்கிறது.

இரவு எனக்கு ஒரு போதை போல. நான் மகிழ்வாக இருக்கும் போது அது என்னை மேலும் மகிழ்விக்கிறது. துயரத்தில் உழலும் போது மேலும் துயரத்தில் ஆழ்துகிறது. 

நிலவோடு கூட நான் பேசி இருக்கிறேன் ஆனால் இரவோடு நான் பேசியதே இல்லை. ஏனெனில் என் அனைத்து ரகசியங்களையும் இரவு அறியும் . 

இரவு ஒரு பரந்து விரிந்த மௌனம். மௌனத்தை நாம் எதிர்கொள்ளும்போது மனதில் கட்டற்ற எண்ணங்கள் எழுகிறது.

எங்கள் தென்னந்தோப்பில் ஒரு கல் திட்டு இருக்கும். அதன் அருகில் இருள் வழிந்தொடுவது போல கால்வாய் நீர் ஓடிக்கொண்டு இருக்கும். இரவில் அங்கு சென்று அமர்ந்திருக்க எனக்கு பிடிக்கும். ஓடும் கால்வாய் நீரில் இரண்டு கால்களையும் நனைத்துக்கொண்டு பெரும் இருள் வெள்ளத்தில் மூழ்கி மறையும் ஒரு சிறு கூழாங்கல்லை போல இரவில் தனிமையில் அமைந்திருப்பேன். என்னை சுற்றி பூச்சிகள் , தவளைகள் ஒலி எழுப்பிக்கொண்டே இருக்கும். அவை இரவோடு பேச தெரிந்தவை இரவில் மட்டும் பேச தெரிந்தவை. இரவில் அங்கு அமர்ந்துகொண்டாள் ஏதோ ஒரு கிராமத்திலிருந்து ஒலிக்கும் பழைய திரைப்பட பாடல்கள் என்னை மெய் மறக்க செய்யும். தூரத்தில் காய்ந்த தென்னை ஓலை மரத்தை உரசிக்கொண்டே மண்ணில் விழும் சத்தம் அச்சம் கொள்ள செய்யும். எங்கேயோ விழும் உலர்ந்த தேங்காய் அல்லது பழுத்த பனம் பழத்தின் சத்தம் மறுநாள் அதை தேடி எடுக்க தூண்டும். 

இளமையில் நான் வேலை தேடி அலைந்த துக்கம்மிகு நாட்களில் யார் கண்ணிளும் படாமல் யார் சொல்லும் படாமல் ஓடி ஒளிந்து கொள்ள ஒடுங்கி மறைந்து கொள்ள  இரவை எதிர்பார்த்து இருப்பேன். ஏனெனில் இரவு என்னை எந்த கேள்வியும் கேட்பதே இல்லை.

 இரவு ஒரு மாயை. வெளிச்சம் ஒரு காட்சியை ஒரு அர்த்தத்திலும், இரவு அதே காட்சியை வேறு அர்த்தத்திலும் காட்டும். எங்கள் வீட்டு அருகில் இருக்கும் சுடுகாட்டு பனைமரத்தை இரவில் இன்றும் நான் ஏரெடுத்து பார்த்ததே இல்லை.

என் இளம் வயதில் ஒரு நன்பன் இருந்தான். அவன் கிராமத்தின் பெயர் மயில் சோலை. அந்த ஊருக்கு செல்ல சரியான பாதை இல்லை. ஒரு மண் பாதை வழியாக அந்த ஊர் முக்கிய சாலையொடு இனைக்கப்பட்டு இருந்தது. அந்த இரு சாலைகளும் இனையும் இடம் மயில்சோலை கூட் ரோடு என்று அழைக்கப்பட்டது. அது அந்த ஊருக்கான பேருந்து நிருத்தம். 

அங்கு ஒரே ஒரு பெட்டிக்கடையும் அதன் பின் பகுதியில் ஒரு குடிசை வீடும் இருந்தது. பெட்டிக்கடையில் எப்பொதும் ஒரு கிழவர் அமர்ந்திருப்பார். அந்த குடிசையின்  வெளிபகுதியில் எப்பொழுதும் ஒரு கிழவி எதாவது ஒரு வேலை செய்துகொண்டிருக்கும்.

காலையில் வேலைக்கு செல்பவர்கள், சந்தைக்கு செல்பவர்கள், வெளியூருக்கு செல்பவர்கள் அந்த கடையில் டீ அருந்திவிட்டு கிழவரிடம் எதாவது பேசிவிட்டு செல்வார்கள். அந்த கிழவருக்கு ஊர்கதைகள் அத்தனையும் அத்துபடி. மாலை நேரங்களில் நானும் நண்பனும் கடையின் முன்னிருக்கும் கல் திட்டில் அமர்ந்து டீ அருந்திவிட்டு போண்டா சுவைத்தபடி அந்த கிழவரிடம் வம்பலப்போம். இரவு கவியும் நேரத்தில் மண் சாலை வழியே ஊருக்கு நடப்போம்.

அந்த சாலை ஒரு ஏரிக்கரை வழியே செல்லும். இரவில் அந்த ஏரிக்கரையில் நடந்து செல்லும் போது இயற்கையின் இனிமையான தருனங்களை அனுபவிக்க முடியும். ஏரியில் நீரும் இரவும் நிரம்பி இருக்கும் . வானில் மிதக்கும் வென்னிலா நீரில் நீந்தும் வென்னிலாவோடு பேசிக்கொண்டு இருக்கும், நீரின் குளிர் ஸ்பரிசத்தில் போதையுற்று  அலையும் காற்று. மினுக்கு பூச்சிகள் பூத்த செடிகள். பனைமரத்தின் காய்ந்த ஓலை எழுப்பும் சர சர சத்தம். எங்களை கடந்து போகும் சைக்கிள்களின் மணி சத்தம். கண்களை மூடி அந்த தருனத்தை இப்போது நினைத்தாலும் மகிழ்வில் திளைக்கிறது மனம். ஏரிக்கரை பாதை முடிவில் ஒரு கண்மாய் துவங்கும். கண்மாய் வழியாக ஏரி நீர், சுற்றி உள்ள வயல்களுக்கு பாயும். ஒரு சிறிய சிமன்ட்டு பாலம் வழியாக அந்த கண்மாயை கடக்க வேண்டும். அந்த பாலத்தின் அருகில் ஒரு tube லைட் கம்பம் இருந்தது. அந்த லைட் எரிவது இரவை ரசிக்கும் பூச்சிகளுக்கு பிடிக்காது. அதை அணைத்துவிட அதன் மீது மோதிக்கொண்டே இருக்கும்.

அந்த இரவு நேரத்தில் பாலத்தில் அமர்ந்துகொண்டு நண்பன் அவன் காதல் கதைகளை சொல்ல துவங்கிவிடுவான். அதை நான் கவனிக்கவேண்டும் என அவன் எதிர்பார்ப்பதில்லை. இரவு அந்த நினைவுகளை அவனுக்குள் எழுபிக்கொண்டே இருக்கும். அவன் அதை வார்த்தைகளாக்கி இரவிடமே சொல்லிக்கொண்டு இருப்பான்.

"வண்ணங்களை எடுத்து அவள் கோலம் போடுவாள் கோலத்தை விட வண்ணங்கள் படிந்த அவள் கைகள் அழகாக இருக்கும்"

"அவளுக்குள் ஒவ்வொரு உணர்வுக்கும் ஒரு  தேவதை வாழ்கிறது . வெக்கத்துக்கு ஒரு தேவதை, துக்கத்துக்கு ஒரு தேவதை, புன்னகைக்கு ஒரு தேவதை , சிணுங்களுக்கு ஒரு தேவதை என்று இதுவரை ஆயிரம் தேவதைகளை அவள் முகத்தில் பார்த்துவிட்டேன்"

"அவள் கால் விரல்களில் நட்டை உடைத்து அதை டேப்பில் பதிவு செய்து வைத்திருக்கிறேன்"

இப்படி அவன் பேசுவதை கேட்க கேட்க எனக்கு சிரிப்பு வரும் . இரவு ஒரு மனிதனை யதார்த்தமா சிந்திக்கவே விடாதா என்று தோன்றும்.

நான் வேலைக்கு சென்றவுடன் பல வருடங்கள் அவனிடம் தொடர்பில்லாமல் போனது.

வெகுநாள் கழித்து அவன் வீட்டுக்கு சென்றிருந்தேன். அம்மா பக்கத்துவீட்டு பெண்மணியிடம் சிரித்து பேசிக்கொண்டு இருந்தார். என்னை பார்த்ததும் அவர் முகம் மாறிவிட்டது. நான் வீட்டுக்கு வந்ததுமே அவர்களுக்கு தெரிந்துவிட்டது நடந்தது எதுவும்  எனக்கு தெரியாது என்று. வெளியிலிருந்து வந்த அப்பா எதுவும் பேசாமல் வீட்டுக்குள் சென்றுவிட்டார். எனக்கு லேசாக புரிந்துவிட்டது.

சங்கடத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் மெதுவாக திரும்பி நடக்கத்துவங்கினேன்.  பெட்டிக்கடைக்கு வந்து அந்த கிழவரிடம் கேட்டபோது நண்பன் பெண்ணை கூட்டிக்கொண்டு ஓடிவிட்டான் என்றும் அதனால் ஊரில் பெரிய சண்டை என்றும் கூரினார்.

அந்த நிகழ்வை அவரை தவிர வேறு யாரும் அவ்வளவு விவரமாக சொல்ல முடியாது. அப்பொழுது அவர் எனக்கு ஒரு இரவின் வடிவமாக தோன்றினார். 

அதன் பின் மறுபடியும் அவனை பார்க்கவே இல்லை.

சமிபத்தில் எஸ்.ரா வின் " யாமம்"  நாவலை படித்தேன். இதில் யாமம் என்ற வாசனை திரவியம் மையா சரடு. மூன்று வெவ்வேறு கதைகள். பழைய சென்னை பட்டினம். பலதரப்பட்ட மனிதர்கள் நிகழ்வுகள். இரவு அழகான படிமமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த நாவலை படித்த பின்னால் இரவை பற்றி இரண்டு நாட்கள் சிந்தித்துக்கொண்டே இருதேன். என் வாழ்வில் இரவில் நடந்த நிகழ்வுகள் எல்லாம் மனதில் எழுந்தவண்ணம் இருந்தது. அதில் எத்தனையோ துக்கங்கள் எத்தனையோ மகிழ்வுகள் . அவை அனைத்தையும் எழுத்துகளாக மாற்றிவிட வேண்டும் என நினைக்கும் போது ஒரு கோர்வையாக திரலவே இல்லை. 

நம் வாழ்வில் எத்தனையோ மறக்க முடியாத  நிகழ்வுகள்  பகலில் நடந்தாலும், இரவு மட்டுமே அந்த நிகழ்வை மனதில் மீண்டும் மீண்டும் நிகழ்திகாட்டுகிறது.
அது மகிழ்வான தருணமாக இருந்தாலும் துக்கமாக இருந்தாலும். 

வியாழன், ஆகஸ்ட் 14, 2014

தனுஷ்கோடி

தனுஷ்கோடி ஒரு அழிந்த சிறு நகரம். அந்த அழிவைபற்றி படித்த போது அந்த இடத்தை பார்க்க வேண்டுமென்று மனதில் ஏதோ ஒரு மௌனமான ஆவல் எழுந்தது. மேப்பில் பார்க்கும் போது இலங்கையையும் பாரதத்தையும் இனைத்த நிலப்பரப்பில் கடல் நீர் தயங்கி தயங்கி உட்புகுந்து பிரித்திருந்தது.



அங்கு போக இராமேஷ்வரத்தில் விசாரித்த போது ஒரு ஜீப் 2000 ரூபாய்க்கு வாடகைக்கு எடுக்க வேண்டும் என்று விடுதி காப்பாளன் சொன்னான். வேறு வழி இல்லை என்றான்.சற்று தூரம் சாலையில் நடந்து போனபோது  தனுஷ்கோடி என்ற பெயர் பலகையொடு பேருந்து ஒன்று வந்தது. கொஞ்சம் குழப்பமாகவே அதில் ஏறி அமர்ந்து கொண்டேன்.
என் அருகில் அமர்ந்தவர் உள்ளூர்காரர். அவரிடம் விசாரித்ததில் பேருந்து ஒரு எல்லை வரை செல்லும். அதன் பின் அங்கே வாடகை வண்டிகள் இருக்கும் அதில் போனால் தனுஷ்கோடியின் அழிந்த பகுதிகளை பார்க்கலாம் என்றார். அவர் பேசிய அந்த வட்டார தமிழ் எனக்கு பாதிக்கும் மேல் புரியவில்லை. புரிந்தது போல் அவர் முன் நடிக்க நடிக்க எனக்கு சிரிப்பு வந்தது.எப்படி பேசினாலும் அழகாய் இருப்பது தமிழ் மட்டுமே. 

இராமேஷ்வரம் பகுதியில் முக்கிய தொழில் மீன் பிடித்தல். கோவிலில்லிருந்து இரண்டு தெருக்கள் தள்ளி வந்தாலே மீனவர்களின் வீடுகள், மீன் பிடி சாதன கடைகள் என வர துவங்கிவிடுகிறது. இராமேஷ்வரத்திலிருந்து 20 கீ.மீ தூரத்தில் தனுஷ்கோடி உள்ளது. வழியில் சிறு சிறு மீனவகிராமங்கள் வந்துகொண்டே இருந்தன. பனவோலை குடிசைகள் அதை சுற்றி பனமட்டை சேர்த்து அடுக்கப்பட்ட சுற்றுச்சுவர், அந்த வீடுகளை சுற்றி சிறு சிறு மணல் மேடுகள் என புதிய நிலப்பரப்பாக இருந்தது. சில இடங்களில் சவுக்கு மர காடுகள் அடர்ந்து இருந்தது. தனுஷ்கோடி ஒரு பெரிய மீனவ கிராமமாக இருக்கும் என நினைத்தேன். ஆனால் பேருந்து ஒரு கடற்க்கரை ஒட்டிய பகுதியில் நின்றது. அந்த பகுதிக்கு மூன்றாம் சத்திரம் என்று பெயர். அதுவரை மட்டுமே பேருந்து செல்லும். அங்கு சிறிய சிறிய ஓலை குடிசைகள் மற்றும் கடைகள் இருந்தன. 








அதை ஒட்டி கடற்கரை. கடற்கரையில் மணல்வெளியில் கால்களை நீட்டி அமர்ந்துகொண்டேன். சற்று கண்களை மூடிய போது காற்றின் ஓசை, அலைகளின் ஓசை, பறவைகளின் ஓசை எல்லாம் கலந்து ஓசைகள் மட்டுமேயான ஒரு உலகை கேட்க முடிந்தது.

அங்கிருந்து தனுஷ்கோடியின் அழிந்த பகுதிகளுக்கு அழைத்து செல்ல வேன்கள் உள்ளன. வேன் ஒன்றுக்கு 2000 ரூபாய்.அது ஒரு குடும்பமாகவோ அல்லது குழுவாகவோ அல்லது தனி தனி நபர்களாகவோ சேர்ந்து அதை வாடகைக்கு அமர்திக்கொள்ளலாம்.அதை தவிர ஜீப்புகள் வாடகைக்கு கிடைக்கிறது. அங்கு வந்த சில பயனிகளோடு சேர்ந்துக்கொண்டு ஒரு வேனில் அழிந்த பகுதிக்கு பயனித்தேன். வண்டியை ஓட்டியவர் ஒரு மீனவரை போல இருந்தார். வேனையும் படகு போலவே ஓட்டினார். மணல் வழி தடத்திளும் , தேங்கிய நீர் வழியாகவும் வண்டி அசைந்து அசைந்து நகர்ந்து கொண்டே இருந்தது. 8 கீ. மீ ஒரு மணி நேர பயணத்துக்கு பின் அந்த இடம் வந்தது. 




















ஒரு காலத்தில் தனுஷ்கோடி இருந்த இடம்.அமைதியான வங்கக்கடலை ஆக்ரோஷமான அரபிக்கடல் தழுவி தழுவி களித்தது. கடல் முன் ஒரு சாமான்னிய மனிதன் என்ன செய்ய முடியும். நான் அதை வெருமனே பார்த்துக்கொண்டு இருந்தேன். கடலோடு பேசவும் பழகவும் அதன் மொழி தெரிந்திருக்க வேண்டும். நமக்கு புரிந்த அதன் ஒரே சொல் அலை மட்டுமே.
சில வடவர் கடல் நீரை எடுத்து தீர்த்தம் போல தலையில் தெளித்துக்கொண்டனர். சிறுவர்கள் புகைப்படம் எடுத்துகொண்டனர். சிலர் அந்த கடல் சூழ் மணல் வெளியில் என்ன செய்வது என்று தெரியாமல் வெருமனே நின்று கொண்டு இருந்தனர். மழையில் நனைந்தால் மழை நீர் நம்மீது வழிந்தோடுவது போல வெயில் என் மீது வழிந்தோடியது. தூரத்தில் மனபிரழ்வான ஒரு பெண்மனி கடலை நோக்கி எதோ பேசிக்கொண்டு இருந்தார். அங்கிருந்து அருகில் இருந்த தனுஷ்கோடியின் இடிபாடுகளை கான சென்றோம். அந்த பகுதி முழுவதும் முட்புதர்கள் மண்டிக்கிடகிறது. சிதிலமடைந்த கட்டிடங்கள் ஏன் நிற்கிறோம் என்று அறியாமல் பரிதாபமாக நிற்கின்றன. அழிவுக்கு முன் இந்த இடம் ஒரு முக்கிய நகரமாக முக்கிய போக்குவரத்து துரைமுகமாக விளங்கியது. 1964 டிசம்பர் 23 ஆம் தேதி ஏற்பட்ட புயலில் இந்த பகுதியில் இருந்த 2000 க்கும் மேற்பட்டோர் இறந்துபோயினர். அதன்பின் இந்த இடம் கைவிடப்பட்டது. 200 மீனவக்குடும்பங்கள் இப்போது இந்த பகுதியில் இருக்கிறது. அவர்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லை. சுற்றுலா பயனிகள் அதிகம் வந்தாளும் அவர்களுக்கு அந்த இடத்தை பற்றி அறிந்துகொள்ள ஒரு அருங்காட்சியகமோ அல்லது இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த ஒரு நினைவிடமோ இல்லை. அந்த வெருமையான நிலபரப்பு மனதிலும் வெருமையயும் ஆழ்ந்த மௌனத்தையும் ஏற்படுத்தியது.






















வியாழன், ஆகஸ்ட் 07, 2014

ராமேஸ்வரம்

இந்தியாவின் முக்கியாமான இடங்களை பற்றியும், ஊர்கள் நகரங்களை பற்றியும் இன்று புகைப்படங்களாக, கானொளியாக பார்க்கவும், கட்டுரைகளாக படிக்கவும்  இணையத்தில் கிடைக்கிறது. அதை பார்க்கும்போதும் படிக்கும்போதும் அந்த இடத்தை ஒரு காட்சி பொருளாகவே உள்வாங்க முடிகிறது. அவை அந்த இடத்தை பார்க்க தூண்டும் ஒரு கருவி மட்டுமே. நேரில் பார்க்காதவரை  எந்த ஒரு இடத்தின் ஆன்மாவையும் உணர முடியாது. இது மனிதர்களுக்கும் பொருந்தும்.




ஒரு தூண்டலில் ராமேஸ்வரம் பார்க்கும் ஆர்வம் எழுந்தது. இரவு பயணமாக ராமேஸ்வரம் அடைந்து கோயிலின்முன் ஒரு அரை எடுத்து தங்கினேன். தூங்கி விழித்த போது காலை 10 மணியாகியிருந்தது .

ராமேஸ்வரம் நடுத்தரமான பழமையான நகரம். பழமையின் மையமாக கோவில் உள்ளது. அதை சுற்றி எண்ணற்ற மடங்கள், சத்திரங்கள் தங்கும் விடுதிகள் நிறைந்துள்ளது.

 விடுதி காப்பாளரிடம் கோவிலை பற்றி கேட்டேன். இந்த கோவிலை சுற்றி 22 தீர்த்தங்கள் உள்ளது. அதில் குளித்துவிட்டு மூலக்கடவுளை  காணவேண்டும் என்றார். அதில் முதல் தீர்த்தம் கடல்.



கடலில் குளிப்பதை நினைக்கும் தருணத்தில் அனைத்து எண்ணங்களும் விலகி ஒரு உவகை எழும். அந்த உவகையோடு கடலை நோக்கி நடந்தேன்.
சற்றே ஒதுங்கி இருந்த கடல் நீரில் பெரும் பக்த்த மக்கள் மூழ்கி குளித்துக்கொண்டு இருந்தனர்.

இந்த கோவிலுக்கு வருபவர்கள் வடவர்களே அதிகம். இறந்தவர்களுக்கு பூசைகள் நடந்துகொண்டு இருந்தது. சிலர் இறந்தவர்களின் அஸ்த்தியை நீரில் கரைத்தனர். சிலர் பழைய துணிகளை தண்ணீரில் இடுவதுமாக அதை சிலர் எடுத்துக்கொள்வதுமாக நடந்துகொண்டிருந்தது.

மெதுவாக தண்ணீரில் இறங்கியதும் அதன் குளுமை மெதுமெதுவாக உடல் முழுவதும் பரவியது. சின்ன சிலிர்ப்போடு நீரில் முழ்கி எழுந்து கரை ஏறினேன்.





22 தீர்த்தத்தில் ஒன்று முடிந்தது. மீதி 21 தீர்த்தம் கோவிலை சுற்றி உள்ள சிறிய கிணறுகள், ஒரு பெரிய குளம், கங்கை நீரின் புனித தன்மைக்கு இணையான ஒரு நீருற்று. அதில் குளிக்க அரசு 25 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறது. கோவிலின் பிரகாரத்தை  சுற்றி சிறிய வட்டவட்டமான  கிணறுகள் இருக்கின்றன. ஒவ்வொரு கிணற்றுக்கும் ஒரு அரசு நியமித்த ஆள் நின்று சிறு வாளியில் நீரெடுத்து பக்த்தர்களின் தலையில் ஊற்ற வேண்டும் என்பது மரபாக இருக்கலாம். ஆனால் அங்கு நிலைமை வேறு.

அங்கே வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை கும்பல் ஒன்று உள்ளது. அந்த 21 தீர்த்த கிணறுகளை அரசிடமிருந்து குத்தகை எடுத்தவர்களாக இருக்கலாம்.
அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறது கோவில். கோவிலை காணவரும் குடும்பம் அல்லது குழுக்கள் அவர்களில் ஒருவரை நியமித்துக்கொள்ள வேண்டும். அவர் 21 தீர்த்தங்களில் நீர் இரைத்து உங்கள் ஒவ்வொரு தலையிளிலும் ஊற்றுவார். சாமி தரிசனம் அருகில் கிடைக்கும். சிறப்பு பூசைகள் ஏற்பாடு செய்து தருவார். கோவில் பனி முழுவதும் உங்கள் உடன் இருந்து வழி அனுப்பி வைப்பது அவர் பொறுப்பு. வடநாட்டு குழுக்கள் இவர்களின் முக்கிய இலக்கு.

இது தெரியாமல் நான் ஒவ்வொரு கிணற்று அருகில் போய் கையை கட்டிக்கொண்டு நின்றிருந்தேன். வெள்ளை வேட்டிகள் அவர்கள் அழைத்துவந்த ஆட்களுக்கு ஒவ்வொரு குடமாக ஊற்றிவிட்டு கடனே என்று நம்மீதும் கொஞ்சம் ஊற்றிவிட்டு செல்கிறார்கள். ஒவ்வொரு கிணற்றின் முன் நிற்கும் போதும் தர்ம சங்கடமாக இருந்தது. வெகு நேரம் நிற்க வேண்டி இருந்தது. 21 தீர்த்த குளியலை முடித்து மறுபடியும் அறைக்கு வந்து உடைகளை மாற்றிக்கொண்டு சன்னிதானத்துக்கு சென்றேன். இந்த முறை 50 ரூபாய் தரிசன சீட்டு வாங்கி சென்றேன். ஆனால் அங்கும் வெள்ளை வேட்டி ஆசாமிகளுக்கு முதலிடம்.

லிங்க வடிவான சிவனை வழிபட்டு விட்டு, அருகில் இருந்த அம்மனை தரிசித்துவிட்டு வெளியில் வந்தேன்.

பிரகாரம் முழுவதும் அழகிய தூன்கள் அதில் சிற்ப்பங்கள். நாம் தனியாக இதுபோல சிற்ப்பங்களை வெகு நேரம் ரசித்துக்கொண்டு இருந்தாள் நம்மை நான்கு பேர் பார்க்க துவங்கி விடுகிறார்கள். அதனால் பட்டும் பாடாமல் பார்த்துக்கொண்டே நகர்ந்தேன்.



இந்த கோவில் ராம காவியத்தில் முக்கிய இடமாக வருகிறது. அந்த காவியமே பாரதத்தின் பல்வேறு பகுதியிலிருந்து மக்களை இந்த கோவிலை நோக்கி அனுப்புகிறது.

இந்தியாவின் மிக சிறந்த சுற்றுலா தளங்களைவிட கோவில்களே நாடுமுழுக்க மக்களை ஈர்க்கிறது. குமரி முனையிலிருந்து இமயத்திற்கும் அங்கிருந்து குமரிக்கும் பயணம் செய்ய துண்டுகிறது.




கோவிலை விட்டு வெளியில் வந்து மீண்டும் கடல் பக்கம் சிறிது தூரம் நடந்து அங்கு நின்றிருந்த சுற்றுலா படகில் ஏறிக்கொண்டேன்.



படகு கடலினுள் செல்ல செல்ல கோவிலும்  அதன் சுற்றுப்பகுதியும் ஒரு ஓவியம் போல கண்முன் விரிந்தது. அது கடலில் அசைந்து மிதக்கும் நிலவெளி என ஆனது.

நான் மீண்டும் கரையேறி நடக்கும் போது கண்களில் நீல நிறம்  தலும்பிக்கொண்டே இருந்தது. நா முழுவதும் உப்பு படர்ந்தது  வறண்டு போனது.



 புகைப்படங்கள் 











( தொடரும்)