குழந்தைக்கு ஐந்து மாதங்கள் முடிந்து , அவன் அழைத்து செல்ல வந்ததுமே அவள் நிலையழிந்தாள்
துக்கம் துளிர்த்து கண்களில் முட்டி முட்டி நின்றது.
இரைச்சலும் வெம்மையும் நிரம்பி வழிந்த பேருந்து நிலையத்தில்
அவர்கள் ஊர் செல்லும் பேருந்துக்காக காத்து நின்றனர்.
பேருந்து நுழைந்ததும் மதகு திறந்த ஏரிநீர் போல காத்திருந்த மக்கள் அதை நோக்கி ஓடி திறந்திருந்த நுழைவுகளில்லெல்லாம் புகுந்து இடம்பிடித்தனர்.
ஜன்னல் வழியாக தாவியேறி இடம்பிடித்து குழந்தையை அவன் வாங்கிக்கொண்டான்.
உடல் தளர்ந்து, உளம் சோர்ந்து அவள் வந்து அமர்ந்தாள்.
தன்னுள் புகுந்த அத்தனை மனித உடல்களையும் வளைத்து நெளித்து ஒற்றை உடலாக மாற்றியது பேருந்து.
வேற்று ஆணின் மூச்சுக்காற்று தன் கழுத்தில் உணர்ந்த பெண்கள் நெளிந்து விலக முயன்றனர்.
பெண்ணின் தோள்கள் நெஞ்சில் உரசிய ஆண்கள் சற்று வளைய முயன்று தோற்றனர்.
குழந்தை வெம்மையில் உருகி அழத்துவங்கியது. பால் புட்டியை எடுக்க கையை பையில் துழாவியபோது துணியெல்லாம் நனைந்து இருந்தது.
மெல்லிய பயம் ஊறி கை நடுங்கியது. வெறும் புட்டியை கையில் வைத்து " பால் " என்று நடுங்கும் குரலில் அவனிடம் சொன்னாள்.
"சனியன் " என்று சொல்லிவிட்டு புட்டியை பிடிங்கிக்கொண்டு ஜன்னல் வழியாகவே இறங்கி வெளியில் சென்றான்.
நேரம் ஏற ஏற குழந்தையின் அழுயொலி மெலிதாகி விசும்பலாக மாறியது.
அவன் வரவே இல்லை. பேருந்து மெதுவாக நகரத்துவங்கியது. பயத்தில் அழும் குரலில் " ஏங்க பஸ்ஸ நிர்த்துங்க " அவர் பால் வாங்க போயிருக்காரு " என்றாள் .
" எவ்வளவு நேரம் இன்ன பண்ணிநிருந்திக " என்று வல்லேன்றார் நடத்துனர்.
அவள் ஜன்னல் வழியே அவனை தேடியபடியே தவித்து நடுங்கினாள், பேருந்து நகர்ந்து கொண்டே இருந்தது.
" ஏம்பா பஸ்ஸ நிறுத்துங்க பா " என்று நடுவயது பெண்மணி ஒருவர் பெருங்குரலெடுக்க, பேருந்து நின்றது.
சிறிது நேரம் கழிய " ஏம்மா இறங்குமா வேக்காடு தாங்கல " என்று ஒரு குரல் எழுந்தது.
அவள் இறங்க எழுந்ததும் , அந்த குரலுக்கு சொந்தக்காரன் அந்த இடத்தில் அமர்ந்துகொண்டான்.
குழந்தை விசும்பிக்கொண்டே இருந்தது. அவள் அருகிலிருந்த டீ கடைக்கு சென்று குழந்தைக்கு பால் வேண்டும் என்றாள்.
பாலை நன்றாக ஆறவைத்து டீ கிளாஸ் கழுவும் தண்ணீர்ல் மேலும் குளிரவைத்து டீ மாஸ்டர் அவளிடம் நீட்டினார்.
மூன்று விரல்களை அந்த பாலில் முக்கி குழந்தையின் வாயில் வைத்தாள்.
விரலை சப்பி சப்பி பாலை குடித்தது குழந்தை. கடைசியில் மீந்த பாலை அவள் வாயில் உற்றிகொண்டாள்.
குழந்தை தூங்கியபின் அவன் நினைவு வந்து அந்த மாஸ்டரிடம் கேட்டாள்.
ஒருவன் வந்து பால் வேண்டும் என்று ஐனூறு ரூபாய்யை நீட்டினான். சில்லறை இல்லை என்றதும் போய்விட்டான் என்றார்.
தலையை கைகளில் தங்கிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
முன்பொருநாள் பள்ளிவிட்டு அவள் வரும் வேளையில் அப்பா அவனை அறிமுகப்படுத்தினார். அவன் சைக்கிளில் ஒரு மட்டக்கோல் இருந்தது. தலை முழுக்க சிமன்ட் பரவி இருந்தது. குடிபோதை அவன் கண்களிலும் சிரிப்பிலும் வழிந்து கொண்டிருந்தது. நிக்க முடியாமல் சைக்கிளை பிடித்துக்கொண்டு இருந்தான். "பொண்ண நல்லா பாத்துக்கப்பா என்றார் அப்பா "
அன்று அழத்துவங்கியவள் இன்னும் அழுதுகொண்டு இருக்கிறாள்.
சாற்று தயங்கி அண்ணா இங்கு டாஸ்மார்க் ஏதாவது பக்கத்துல இருக்குதா என்று கலங்கிய விழிகளில் டீ மாஸ்டரை கேட்டாள்.
துக்கம் துளிர்த்து கண்களில் முட்டி முட்டி நின்றது.
இரைச்சலும் வெம்மையும் நிரம்பி வழிந்த பேருந்து நிலையத்தில்
அவர்கள் ஊர் செல்லும் பேருந்துக்காக காத்து நின்றனர்.
பேருந்து நுழைந்ததும் மதகு திறந்த ஏரிநீர் போல காத்திருந்த மக்கள் அதை நோக்கி ஓடி திறந்திருந்த நுழைவுகளில்லெல்லாம் புகுந்து இடம்பிடித்தனர்.
ஜன்னல் வழியாக தாவியேறி இடம்பிடித்து குழந்தையை அவன் வாங்கிக்கொண்டான்.
உடல் தளர்ந்து, உளம் சோர்ந்து அவள் வந்து அமர்ந்தாள்.
தன்னுள் புகுந்த அத்தனை மனித உடல்களையும் வளைத்து நெளித்து ஒற்றை உடலாக மாற்றியது பேருந்து.
வேற்று ஆணின் மூச்சுக்காற்று தன் கழுத்தில் உணர்ந்த பெண்கள் நெளிந்து விலக முயன்றனர்.
பெண்ணின் தோள்கள் நெஞ்சில் உரசிய ஆண்கள் சற்று வளைய முயன்று தோற்றனர்.
குழந்தை வெம்மையில் உருகி அழத்துவங்கியது. பால் புட்டியை எடுக்க கையை பையில் துழாவியபோது துணியெல்லாம் நனைந்து இருந்தது.
மெல்லிய பயம் ஊறி கை நடுங்கியது. வெறும் புட்டியை கையில் வைத்து " பால் " என்று நடுங்கும் குரலில் அவனிடம் சொன்னாள்.
"சனியன் " என்று சொல்லிவிட்டு புட்டியை பிடிங்கிக்கொண்டு ஜன்னல் வழியாகவே இறங்கி வெளியில் சென்றான்.
நேரம் ஏற ஏற குழந்தையின் அழுயொலி மெலிதாகி விசும்பலாக மாறியது.
அவன் வரவே இல்லை. பேருந்து மெதுவாக நகரத்துவங்கியது. பயத்தில் அழும் குரலில் " ஏங்க பஸ்ஸ நிர்த்துங்க " அவர் பால் வாங்க போயிருக்காரு " என்றாள் .
" எவ்வளவு நேரம் இன்ன பண்ணிநிருந்திக " என்று வல்லேன்றார் நடத்துனர்.
அவள் ஜன்னல் வழியே அவனை தேடியபடியே தவித்து நடுங்கினாள், பேருந்து நகர்ந்து கொண்டே இருந்தது.
" ஏம்பா பஸ்ஸ நிறுத்துங்க பா " என்று நடுவயது பெண்மணி ஒருவர் பெருங்குரலெடுக்க, பேருந்து நின்றது.
சிறிது நேரம் கழிய " ஏம்மா இறங்குமா வேக்காடு தாங்கல " என்று ஒரு குரல் எழுந்தது.
அவள் இறங்க எழுந்ததும் , அந்த குரலுக்கு சொந்தக்காரன் அந்த இடத்தில் அமர்ந்துகொண்டான்.
குழந்தை விசும்பிக்கொண்டே இருந்தது. அவள் அருகிலிருந்த டீ கடைக்கு சென்று குழந்தைக்கு பால் வேண்டும் என்றாள்.
பாலை நன்றாக ஆறவைத்து டீ கிளாஸ் கழுவும் தண்ணீர்ல் மேலும் குளிரவைத்து டீ மாஸ்டர் அவளிடம் நீட்டினார்.
மூன்று விரல்களை அந்த பாலில் முக்கி குழந்தையின் வாயில் வைத்தாள்.
விரலை சப்பி சப்பி பாலை குடித்தது குழந்தை. கடைசியில் மீந்த பாலை அவள் வாயில் உற்றிகொண்டாள்.
குழந்தை தூங்கியபின் அவன் நினைவு வந்து அந்த மாஸ்டரிடம் கேட்டாள்.
ஒருவன் வந்து பால் வேண்டும் என்று ஐனூறு ரூபாய்யை நீட்டினான். சில்லறை இல்லை என்றதும் போய்விட்டான் என்றார்.
தலையை கைகளில் தங்கிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
முன்பொருநாள் பள்ளிவிட்டு அவள் வரும் வேளையில் அப்பா அவனை அறிமுகப்படுத்தினார். அவன் சைக்கிளில் ஒரு மட்டக்கோல் இருந்தது. தலை முழுக்க சிமன்ட் பரவி இருந்தது. குடிபோதை அவன் கண்களிலும் சிரிப்பிலும் வழிந்து கொண்டிருந்தது. நிக்க முடியாமல் சைக்கிளை பிடித்துக்கொண்டு இருந்தான். "பொண்ண நல்லா பாத்துக்கப்பா என்றார் அப்பா "
அன்று அழத்துவங்கியவள் இன்னும் அழுதுகொண்டு இருக்கிறாள்.
சாற்று தயங்கி அண்ணா இங்கு டாஸ்மார்க் ஏதாவது பக்கத்துல இருக்குதா என்று கலங்கிய விழிகளில் டீ மாஸ்டரை கேட்டாள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக