"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

செவ்வாய், செப்டம்பர் 17, 2013

மொக்க சிவா - வெகுளி கோபாலு -1

மொக்க சிவா : டே கோபாலு அறிவாளிங்க இருண்டு வக உண்டு ஒன்னு பொறக்கும்போதே அறிவாளியா பொறக்கிறவங்க இனொன்னு கஷ்டப்பட்டு அறிவாளியா ஆரவங்க.

வெகுளி கோபாலு : ஓஹோ ....

மொக்க சிவா : அதே மாதிரி முட்டாளுங்க  இருண்டு வக உண்டு , ஒன்னு பொறக்கும்போதே  முட்டாளா  பொறக்கிறவங்க இனொன்னு கஷ்டப்பட்டு முட்டாளா ஆரவங்க. 

வெகுளி கோபாலு :    அது யாருண்ணே  கஷ்டப்பட்டு முட்டாளா ஆரவங்க. 

மொக்க சிவா:   நம்மள நாலுபேரு பாரட்டனுமுனு கஷ்ட படரானே அவன்தாட அது.

வெகுளி கோபாலு : நீங்களே அதானே பண்றீங்க 

மொக்க சிவா:  என்னடா பண்றது எனக்கும் கொஞ்சநேரம் முட்டாளா  இருக்கணுன்னு ஆச வருது.

வெகுளி கோபாலு: அட போங்கண்ணே நீங்க எப்ப அறிவாளியா இருந்திருகிங்க ........

மொக்க சிவா: .........

திங்கள், செப்டம்பர் 16, 2013

மங்களூர் -3

Kateel Durga Parameshwari Temple 


மங்களுரிளிருந்து 28km தொலைவில் உள்ளது இந்த கோவில். சாலை மலைக்காடு வழியே வளைந்து நெளிந்து சென்றுகொண்டே இருந்தது.

ஒரு மலை முகட்டில் நின்று பார்க்கும் போது தூரத்தில் ரயில் ஒன்று  வேலை முடிந்து வயலின் நடுவே வரப்பில் நடந்து போகும் பெண்களை போல நடந்து கொண்டிருந்தது. 












வழியெங்கும் சலசலத்து வழிந்தோடும் மழை நீர் ஓடைகள். தினசரி காடுகள் அழிப்பு, பூமி வெப்பம் ஆதல், காயிந்து கிடக்கும் ஆறுகள் , மழை இல்லாமல் வறட்சி என எதாவது ஒரு செய்தி கண்ணில் பட்டுக்கொண்டே இருக்கிறது. நாம் அழிவை நோக்கி போகிறோம் என்ற எண்ணம் மனதில் ஆழமாகிக்கொண்டே இருக்கிறது. இது போல மரங்களையும், மலையில் வழிந்தோடும் மழை நீரையும் காணும் போது மனம் நம்மமை அறியாமல் நம்பிக்கையில் லைக்கிறது. காடுகளின் வழியே நானும் வழிந்தொடிக்கொண்டு இருப்பது போல இருந்தது. வழியில் டீ கடை இருக்கிறதா என தேடினோம். ஆனால் வழியில் நிறைய BAR கள் இருந்தது. ஜெயமோகன், யானை டாக்டர்  கதையில், காடுகளில் இளஞர்கள் குடித்துவிட்டு உடைத்து எறியும் பாட்டில்களை யானைகள் மிதித்து அதன் கால்கள்  சேதம் அடைந்து உயிர் இழப்பதை  குறிப்பிட்டது ஞாபகம் வந்தது. 

"காடு, மரங்களின் வீடு , ஒவொரு மரமும் ஒரு வீடு."










Kattel என்றால் நதியின் இடை என்று பொருள். காட்டு நதி நந்தினி. அதன் இடையில் அமர்ந்துள்ளது போல கோவில் உள்ளது.

திடீர் என காட்டிலிருந்து பாய்ந்து வரும் மலை பாம்பு போல பாய்ந்து வருகிறது நந்தினி ஆறு. கோவிலின் இரு பக்கவாட்டிளும் ஆறு கடந்து செல்கிறது. முன்பு பார்த்த மழை நீர் ஓடைகள் இந்த நதியின் விழுதுகள் போலும்.

 கோவில் பழைய கேரளக்கோவில் வடிவில் உள்ளது. துர்கா பரமேஸ்வரி வீரிருக்கிறாள். 
கோவிலினுள் புதுப்புடவை, தேங்காய் மற்றும் சில பொருள்களை எரித்து யாகம் செய்துகொண்டு இருந்தார்கள். ஒரே புகை மூட்டம். 

"சாமிகள் நம்முன் எது நின்றாலும் நம் வேண்டுதல் ஒன்றே". வழக்கம் போல என் வேண்டுதல்களை முனுமுனுத்துக்கொண்டே கோவிலை சுற்றி வந்தேன். அதிகம் கிராமத்து மனிதர்கள் மற்றும் புதுமண தம்பதிகள் கோவிலில் இருந்தார்கள்.





















ஆற்றை கடக்க சிறிய பாலம் உள்ளது. அந்த பாலத்தில் நின்று கொண்டு ஆற்றின் வேகத்தை பார்த்துக்கொண்டு இருந்தேன். மழை நீரில் ஆறு நனைந்து கொண்டே இருந்தது. மழை அதிகமாக அதிகமாக ஆற்றில் நீரின் அளவும் வேகமும் அதிகரித்துக்கொண்டே இருந்தது. ஆனால் விதிகளின் படி கனம் கூட க்கூட நடையின் வேகம் குறைய வேண்டும் தானே, ஆனால் நதிக்கு அது செல்லாது போலும்.

மழை நின்றது. வீட்டுக்கு திரும்பினோம்.  

Udupi Srikrishna Temple

எல்லோரும் அறிந்த பெயர். உடுப்பி ஒரு வளர்ந்து வரும் சிறிய நகரம். 
மங்களுர்லிருந்து 60 km தூரத்தில் உள்ளது. மங்களுர்லிருந்து உடுப்பிக்கு நான்கு வழி சாலை. 
15 நிமிடத்துக்கு ஒரு  தனியார் பேருந்துகள் உள்ளது. ஒரு மணி 
நேரத்தில் உடுப்பி வந்தடைந்து விட்டது.

கோவிலை அடைந்ததும் சிறிய ஏமாற்றம் தான். சிறிய கோவில் கூட்டமும் அதிகம் இல்லை .
விசேஷ நாட்களில் சாமி பார்க்க மணிக்கணக்காக நிற்க வேண்டும் போல.
கிருஷ்ணர் சிறிய கரிய நிற சிலை. தங்கம், வைரம் , இன்னும் சில கற்கள் அவர் மேலே  ஜொலித்தது.
ஒரு வெள்ளியால் ஆன ஜன்னல் வழியே சாமியை பார்க்க வேண்டும்.
சில பெண்கள் குழு சாமி முன் அமர்ந்து பஜனை பாடிக்கொண்டு இருந்தனர். சன்னிதானத்தை 
விட்டு வெளியில் வந்ததும் 50 ரூபைக்கு பிரசாத பொருட்களை வாங்கினோம். அதில் 
லட்டு சுவையாக இருந்தது . 

மங்களூர் சுற்றி நான் பார்த்த இந்த கோவில்களுக்கு எல்லாம் என் அண்ணன் தான் 
அழைத்துச்சென்றார். அவருக்கு நன்றி.












புதன், செப்டம்பர் 04, 2013

மங்களூர் - 2

மங்களூர் வளர்ந்து வரும் நகரம். கடந்த 20 ஆண்டுகளில் புதிய கட்டிடங்கள் வானை நோக்கி  வளர்ந்து நிற்கிறது. இன்றைய சுழலில் பெரிய பெரிய Apartments கள், IT நிறுவங்கள் , சிட்டி சென்டர் போன்ற mallகள், இறக்குமதி செய்யப்பட்ட கார்கள், குளிருட்டப்பட்ட நகை கடைகள் இருந்தாள் வளர்ச்சி அடைந்த நகரமாக எடுத்துக்கொள்ளலாம். இவை அனைத்தும் மங்களூரில் உள்ளது. 
ஒவ்வொரு கட்டிடங்களும் மலை முகடுகளில் concrete மரங்களை போல நிற்கிறது. நில சரிவு ஏற்பட்டால் கட்டிடங்கள் சரியாத என அண்ணனிடம் கேட்டேன். இங்கு உள்ள மண் கெட்டியான மொரம்பு வகையை சார்ந்தது , இதுவரை பெரிய அளவில் மண் சரிவு ஏற்படவில்லை ஆனால் இந்நிலை நீடித்தால் ஏற்பட வாய்ப்புள்ளது என்றார்.கட்டிட வேலைக்கு வழக்கம் போல ஒரிசா, பீகார், அசாம் மாநில தொழிலாளிகள். ஒரு பிளாட்டின் விலை குறைந்தது 40 லட்சத்தில் துவங்குகிறது, வழக்கத்துக்கு மாறாக மேலே இருக்கும் பிளாட்டுகள் விலை அதிகம். ஏனெனில் நல்ல view கிடைக்கும் , மழைகாலங்களில் புழு பூச்சி தொல்லை இல்லை.




இங்கு தரமான கல்விநிலையங்கள் அதிகம் உள்ளதாள் மாநிலம் முழுவதிலிருந்தும் படிப்பதற்காக மாணவர்கள் அதிகம் வருகிறார்கள். 

Kadri Manjunatha temple

நகரத்தில் அமைந்துள்ள இரண்டு முக்கியமான கோவிலுக்கு சென்றோம். அதில் ஒன்று கத்திரி மஞ்சுநாத கோவில். இந்தியாவின் பழமையான சிவன் கோவில். முதலில் புத்த மத கோவிலாக இருந்து பின்பு பத்தாம் நூற்றாண்டில் சிவன் கோவிலாக மாற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் நான் பார்த்தவரை சிவன் கோவில்களில் மூலஸ்த்தானத்தில் லிங்கம் இருக்கும் ஆனால் இங்கு சிவனின் முகம் மட்டும் கழுத்துவரை உள்ளது. சாமியை நேருக்கு நேர் பார்த்து வணங்குவதை விட ஒருமுறை சாமியை பார்த்துவிட்டு கண்களை மூடி மனதுக்குள் நினைத்து வணக்குபவர்கள் அதிகம். அதிகமா பள்ளி சிறுவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் கோவிலுக்கு வந்திருந்தார்கள்.
























Padmanatha Lokeshwara என்ற சிலை இந்தியாவின் மிகச்சிறந்த வெண்கல சிலை என்று போர்ட் வைத்துள்ளார்கள். 





நந்தி வாயிலிருந்து தீராமல் ஊற்றும் நீரை ஒரு குவளையில் கொண்டுவந்து அருகில் இருக்கும் லிங்கத்தின் மேல் ஊற்றி வழிபடுகிறார்கள்.








கோவிலை தொடர்ந்து ஒரு மலையின் மேல் ஏறினால் பெரிய  அஹனுமான் சிலையும் அதன் அருகில் கோவிலும் உள்ளது. 






அதை தொடர்ந்து மேலே  ஏறினால் காடு போன்ற பகுதி உள்ளது . அங்கு பாண்டவ குகைகள் உள்ளது. இதன் பின் புலம் தெரியவில்லை. தொடர் மழையினால் அந்த இடம் பாசி படர்ந்து வண்ணம் தீட்டியது போல இருந்தது.  கண்ணுக் தெரியாத எண்ணற்ற பறவைகளின் ஒலியும் , மழையால் விழித்த வண்டுகளின் ரீங்காரமும்  மொத்தமாக சேர்ந்து  ஒரு இசை நிகழ்வு போல இருந்தது.  இங்கு தனியாக அமர்ந்து கொண்டாள்  சில்லென வீசும் காற்றும் , இந்த இசையும் உங்களோடு பேசிக்கொண்டே இருக்கும் . 















Gokarnanath Temple 

இந்த கோவில்  Kudrolli எனும் இடத்தில் உள்ளது .ஸ்ரீ நாராயண குரு என்பவரால் இந்த கோவில் கி.பி .1912 ல் கேரள முறைப்படி கட்டப்பட்டது. பின்பு கி.பி .1991 ல் புதுபித்து  சோழர் கால முறை படி கட்டி இருக்கிறார்கள். கோவில் எங்கும் தங்க முலாம் பூசப்பட்டது போல் வர்ணம் தீட்டப்பட்டுள்ளது. செயற்கையான ஒரு பகட்டுத்தன்மை இருந்தது. இதுவும் சிவன் கோவில்.