"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "
வியாழன், ஜூலை 31, 2014
செவ்வாய், ஜூலை 29, 2014
எஸ். ரா வுடன் இலக்கிய நிகழ்வு
ஜூன் 14 மற்றும் 15 தேதியில் திண்டுக்கல்லில் நடைபெற்ற எஸ் ரா வின் இலக்கிய முகாமில் மகிழ்வோடு கலந்துக்கொண்டேன்.
காலை ஆறுமணிக்கு திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இறங்கி ஒரு டீ அருந்திவிட்டு நத்தம் செல்லும் பேருந்தில் அமர்ந்தேன். நாற்பதை கடந்த ஒருவர் பதனிகடை க்கு இந்த பேருந்து செல்லுமா என்று கேட்டார்.
இலக்கிய முகாமுக்கா என்று வினவி ஏறுங்கள் என்று சொல்லிவிட்டு சற்று தள்ளி அமர்ந்தேன். மேற்கொண்ட கேள்வியில் அவர் முகம் மலர்ந்து பேச துவங்கினார்.
சிறு சிறு கேள்வி பதில் பரிமாற்றத்திற்கு பின் உளம் புரிந்து நட்ப்பானார்.
அவர் பெயர் ஷன்முகம் என்றும் பெங்கலுரிலிருந்து வருவதாக அறிமுகம்
செய்துகொண்டார். அவர் தூய தமிழில் இயல்பாக பேசுகிரார் என்று சிறிது நேரம் கழிதே
உணர்ந்தேன்.
கேட்பதற்கு இனிமையாக இருந்தது. கூட்டம் நடந்த இரு நாட்களும் அவரோடு நட்பு குறையாமள் நகர்ந்தது.
நிகழ்வு நடந்த LIFE CENTER
எஸ்.ரா என் மதிபிற்க்கூரிய எழுத்தாளர். விகடனில்
அவர் எழுதிய கட்டுரைகளை தொடர்ந்து வாசித்து வாசிப்பை பழக்கமாக்கிகொண்டேன்.
கடந்த 7 வருடங்களாக அவர் எழுத்தை வாசித்து அவரை பற்றிய ஒரு மதிப்பீடும் ஒரு
பிம்பமும் மனதில் உருவாகி இருந்தது.
அந்த பிம்பம் இந்த இரு நாட்களில் எந்த
விததிலும் குலயக்கூடாது என்று எண்ணிக்கொண்டேன். முதல் நாள் அவரை கண்டு
கைகுலிக்கினேன். அவரின் உருதியான பிடியும் இயல்பான சிரிப்பும் என் பயத்தை
போக்கியது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட 60 பேரில் ஐம்பதுக்கும் அதிகமாக
இளம் வயதினர். IT , திரை துறை, கல்லுரி மாணவர்கள் , பத்திரிக்கை என வெவ்வேறு துறையை சார்ந்தவர்கள் வந்திருந்தனர்.
டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் அனைவரையும் வரவேற்று உபசரித்து அனைத்து ஏற்பாடுகளையும் கவனித்துக்கொண்டார்.
டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் அனைவரையும் வரவேற்று உபசரித்து அனைத்து ஏற்பாடுகளையும் கவனித்துக்கொண்டார்.
முதல் நாள் துவக்கத்தில் எஸ். ரா ஒரு மேடையில் நின்று நாவலை பற்றி
ஒரு விரிவான விளக்கத்தை வசகர்களுக்கு அளித்தார்.
மதிய நேரத்தில் வாசகர்களோடு விறிவாக விவாதிக்க , மேடையை அகற்றிவிட்டு எங்களின் நடுவே அமர்ந்துகொண்டார். ஆறு முக்கிய நாவல் பற்றி வாசகர்கள் விவாதிதனர்.

மதிய நேரத்தில் வாசகர்களோடு விறிவாக விவாதிக்க , மேடையை அகற்றிவிட்டு எங்களின் நடுவே அமர்ந்துகொண்டார். ஆறு முக்கிய நாவல் பற்றி வாசகர்கள் விவாதிதனர்.

விவாதித்த அனைவரும் நாவலை ஒரு
கதையாக மட்டும் அனுகாமல் அதை சமுகம் மற்றும் மனித உணர்வுகளை பற்றி புரிந்துகொள்ள
உதவும் ஒரு வழியாக உள்வாங்கி இருந்தனர்.
மாலை சற்று
ஒய்வுக்கு பின் இரவு எந்த தலைப்பும் இல்லாமல் பொதுவாக பேச அனைவரும்
கூடினோம்.
ஒவ்வொருவரும் தான் படித்த நாவல்கள் பற்றி விவாதித்தனர்.
சில
கேள்வி பதில்கள்
கேள்வி: ஐ.டி துறையில் வேலை பார்க்கும் நபர்கள் இயந்திரம்
போல இருக்கிறார்கள். ஓய்வுக்கு கூட மதுவை தான் நாடுகிறார்கள். இது சமுதாயத்தை
வெகுவாக பாதிக்கிறது.
எஸ் .ரா பதில் : நீங்கள் கூரும் நபர்கள் சமுதாயத்தில் ஐந்து
சதவிகிதம் கூட இல்லை அதனால் சமுதாயத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை. அதிகம்
உழைப்பவர்கள் சிறந்த ஓய்வை தேர்ந்தெடுக்க வேண்டும்.
என் கேள்வி: குழந்தை
இலக்கியம் , சிறுவர் இலக்கியம் போல ஏன் இளஞ்சர் இலக்கியம் இல்லை?
எஸ் .ரா பதில்:
இளஞ்சர் உலகம் வேறு. அவர்களுக்கு நண்பர்கள் முக்கியம். தமிழகத்தில் மிக குறைந்த
எண்ணிக்கையில் புத்தகம் படிக்கிறார்கள். அவர்களுக்கான எழுத்துலகு இன்னும் தமிழில்
வளரவில்லை.
என் கேள்வி: குழந்தைகளை பாட புத்தகங்கள் தவிர வேறு புத்தகங்களை
படிக்க தூண்டளாமா அல்லது வர்புறுத்தளாமா ?
எஸ் .ரா பதில் : வற்புறுத்த வேண்டாம்.
ஆனால் தூண்டளாம். எனெனில் அவர்கள் வேறு துறையில் சாதிக்களாம். எல்லொருக்கும்
புத்தகம் பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை.
மூன்று மணி நேரம் இது போன்ற
விவாதம் தொடர்ந்தது. இடையில் எழும் தோய்வையும் மௌனத்தையும் எஸ்.ரா தன் அரிய
தகவல்கள் மூலமும் சுவாரசியமான கதைகள் மூலமும் நிரப்பிக்கொண்டே
இருந்தார்.
இரண்டாம் நாள் உலக இலக்கியங்களை பற்றி விவாதம் நடந்தது. உலகின்
சிறந்த இலக்கியங்களை பற்றி எஸ்.ரா உரையாற்றினார். மொழிபெயர்ப்பு நாவல்களை பற்றி
சா.தேவதாஸ் அவர்களும் ,எழுத்தாளர் முருகேசபாண்டியன் உரையாற்றினர். தோழர். எஸ். ஏ.
பெருமாள் ம்ற்றும் ஷஜகான் அவர்களும் உரையாற்றினர். மதிய வேளையில் தமிழின் முக்கிய
நாவல்களை பற்றி எஸ்.ரா உரையாற்றினார்.

படிக்க வேண்டிய முக்கியமான நாவல்களையும் பரிந்துரை செய்தார்.
மதிய வேளையில் சமுக ஆர்வலர் திரு. முத்துகிருஷ்ணன் நிகழ்வில் கலந்துகொண்டார்.

இந்த இரண்டு நாள் நிகழ்வில் இலக்கியம் பற்றிய ஒரு நல்ல அறிமுகம் கிடைத்தது. நல்ல புத்தகங்களும் நல்ல நன்பர்களும் கிடைத்தனர்.
படிக்க வேண்டிய முக்கியமான நாவல்களையும் பரிந்துரை செய்தார்.
மதிய வேளையில் சமுக ஆர்வலர் திரு. முத்துகிருஷ்ணன் நிகழ்வில் கலந்துகொண்டார்.
இந்த இரண்டு நாள் நிகழ்வில் இலக்கியம் பற்றிய ஒரு நல்ல அறிமுகம் கிடைத்தது. நல்ல புத்தகங்களும் நல்ல நன்பர்களும் கிடைத்தனர்.
இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தவர்கள் டிஸ்கவரி பதிப்பகத்தார். 1200
ரூபாய் கட்டனம் வசுலித்தனர். அவர்கள் அளித்த நல்ல உணவுக்கும் தங்கும் வசதிக்கும்
இது சிறிய தொகை.
இது போன்ற நிகழுவுகள் எந்த லாப நோக்கும் இல்லாமல் இலக்கியத்தின் மீதான ஆர்வமும் அக்கறையும் கொண்ட நல்ல மனங்களின் மூலம் நடத்தப்படுகிறது.
இது போன்ற நிகழுவுகள் எந்த லாப நோக்கும் இல்லாமல் இலக்கியத்தின் மீதான ஆர்வமும் அக்கறையும் கொண்ட நல்ல மனங்களின் மூலம் நடத்தப்படுகிறது.
அந்த நல்ல மனங்களுக்கு அவர்களுக்கு நன்றி.
இந்த நிகழ்வை பற்றிய எஸ் . ரா வின் பதிவு
http://www.sramakrishnan.com/?p=4014
இந்த நிகழ்வை பற்றிய எஸ் . ரா வின் பதிவு
http://www.sramakrishnan.com/?p=4014
திங்கள், ஜூலை 21, 2014
சாதிகள் உள்ளதடி பாபா
சாதிகள் என்ற அமைப்பு 3000 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியவையாக இருக்கலாம் என்று படித்திருக்கிறேன். இன்றும் மக்களின் மனங்களின் வழியாக தொடர்ந்து பயணித்துக்கொண்டே இருக்கிறது.
எங்கள் தோப்பிலும் வயல்களிலும் வேலை செய்யும் அனைவரும் கிழ் வகுப்பினர். வேலை முடித்து அவர்கள் வீட்டின் பின்புறம் சாப்பிட வருவார்கள். வரும்போது வாழை இலை அல்லது பூசனை இலை கொண்டுவருவார்கள். சாப்பிட்டு முடித்ததும் அம்மா அவர்கள் கையில் தண்ணிர் ஊற்றுவார். தவறி யாராவது சொம்போடு தண்ணிர் குடித்துவிட்டாள் அந்த சொம்பும் தீண்ட தகாதவை ஆகிவிடும். என் பெற்றோர் யாரும் அவர்களை தொட்டு பேச மாட்டார்கள்.
முதல் தலைமுறையாக நாங்கள் பள்ளிக்கு சென்றதும் அவர்களோடு அருகில் அமர்ந்து பேசவும் தொட்டு விளையாடவும் இயல்பாக பழகிகொண்டோம். எனக்கொரு நண்பன் இருந்தான். அவன் வீடு பாலாற்றங்கரையில் இருந்தது. அதன் பின்புறம் ஒருகொய்யா மரம் இருந்தது. அதில் ஏறி விளையாடவும் பழங்களை பறித்து தின்னவும் அங்கு நான் செல்வேன். பின் புறம் ஒரு ஒரு கினறு இருந்தது. அதில் அடர்கரு நிறத்தில் தண்ணீர் கைகெட்டும் நிலையில் இருக்கும். கரு நிற மீன்கள் நீரினுள் தவழ்வதை நெடுநேரம் பார்த்துகொண்டு கிணற்றின் திட்டில் நாங்கள் இருவரும் அமர்ந்திருப்போம்.
கல்லூரி நாட்களில் சாதிய எண்ணம் தேவைபடவே இல்லை. ஒருவரை ஒருவர் என்ன சாதி என்பதை தெரிந்துகொள்ள விருப்படவே இல்லை. ஒரே தட்டில் உணவருந்தி , ஒருவர் மடியில் ஒருவர் படுத்துரங்கினோம்.
ஆனாலும் சாத்திய எண்ணம் என் மனதின் அடிஆழத்தில் பூஞ்சைகள் போல வாழ்ந்துக்கொண்டே இருக்கிறது. முக்கியமான நிகழ்வுகளில் அது சிறு காளான் போல மேல் எழுகிறது. வீடு கட்ட நிலம் வாங்கினாலும் அருகில் யார் வாங்கி இருக்கிறார்கள் என்று கேட்க தோன்றுகிறது. எவ்வளவோ புத்தகங்கள் படித்தாலும் வேறுபட்ட மனிதர்களிடம் பழகினாலும் அவ்வப்போது எழும் சாத்தியம் சார்ந்த எண்ணங்களை தவிர்க்கவே முடியவில்லை.
ஆனால் என் மகன் முற்றிலுமாக வேறு சூழ்நிலையில் வளர்கிறான். அவனுக்கு சாதியம் பற்றி தெரியாமலே போகலாம். தெரிந்தாலும் அது அவனுக்கு முக்கியம் இல்லாமல் போகலாம்.
டாக்டர்கள் டாக்டர்களை திருமணம் செய்துகொள்கிறார்கள். எஞ்சினியர்கள் எஞ்சினியர்களை பெரும்பாலும் திருமணம் செய்துகொள்கிறார்கள். டாக்டர் சாதி எஞ்சினியர் சாதி என்று கூட உருவாகலாம்.
அவன் காலத்தில் சாதி வேறு பெயரில் வேறு அர்தத்தோடு உருவாகலாம்.
மனித மனதில் " வேற்றுமை " எப்போதும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது.
அதன் விளைவாக மனிதன் தன்னை மற்றவர்களை விட சற்று உயர்வாக காட்டிக்கொள்ளவும், வேறுபடுத்தி காட்டிக்கொள்ளவும் விழைகிறான்.
அதற்காகவே அவன் சாதி, மதம் , நிறம், அறிவு , புத்திசாலித்தனம், அதிகாரம் ,கல்வி, பணம் ..இன்னும் .., அனைத்தையும் பயன் படுத்திக்கொள்கிறான்.
அந்த எண்ணத்தை கொண்டே பண்பாடு ,கலாச்சாரம், பழக்க வழக்கம் அனைத்தையும் அவன் கட்டமைக்க முயற்சி செய்கிறான்.
அந்த அடிப்படை எண்ணம் மனதில் இருக்கும் வரை சாதியை நம் சமுகத்திலிருந்து அழித்து விட முடியாது. அப்படியே சாதியை ஒழித்தாலும் அந்த எண்ணம் ஏழை , பணக்காரன், படிச்சவன் படிக்காதவன் என்று எதோ ஒரு வடிவத்தில் வாழ்ந்துகொண்டே இருக்கும்.
இன்று "வேற்றுமையில் ஒற்றுமை" காணவே உலகம் முழுவதும் அமைதிக்கா போராடுபவர்கள் முயற்சிக்கிறார்கள்.
ஒரு கட்டத்தில் இந்த உலக மக்கள் அனைவரும் எல்லா விதத்திலும் சமம் என்ற நிலை வரும்போது, ஒட்டு மொத்த மக்கள் இயக்கமும் ஸ்தம்பிக்கும் என்பதே என் எண்ணம். அது மனித இன அழிவின் துவக்கமாக கூட இருக்கலாம்.
சமிபத்தில் நான் படித்த முக்கியமான நாவல் இந்திரா பார்த்தசாரதி அவர்கள் எழுதிய " குருதிபுனல் " . இது தென் தமிழகத்தில் நடந்த உண்மை சம்பவத்தை தழுவி எழுதியது.
டெல்லியில் வளர்ந்த இரண்டு தமிழ் இளம் நண்பர்கள் ஒருவர் பின் ஒருவராக தன் பூர்விக கிராமத்துக்கு வருகிறார்கள். அங்கு பெரும் நில பண்ணையார்களுக்கும், அவர்கள் நிலத்தில் கூலி வேலை செய்யும் தலித்துகளுக்கும் இடையில் நடக்கும் சிறு சிறு பிரச்சனைகளில் தலையிடுகிறார்கள். அந்த பிரச்சனை பெரியதாக மாறி போராட்டமாக உருவெடுக்கிறது. அந்த போராட்டத்தில் தலைமை ஏற்கும் அவர்களையும் அந்த போராட்டத்தையும் எப்படி ஆளும் வர்க்கம் நசிக்கி ஒடுக்குகிறது என்பது கதை.
அந்த இளைஞர்கள் மனதில் எழும் எண்ணவோட்டங்களையும் அந்த எண்ணங்களுக்கான காரணங்களையும் அது செயல் வடிவம் பெரும் முறையும் துள்ளியமா விளக்குவது நம்மை கதையோடு ஒன்றி விட செய்கிறது.
இதில் விவாதிக்கப்படும் தத்துவங்களும், கோட்பாடுகளும் இன்று போராட நினைக்கும் இளைஞர்களுக்கு ஒரு முக்கியமான பாடமாக அமையும்.
இந்த புத்தகத்தை பற்றிய விரிவான விமர்சனம் கீழ் உள்ள சுட்டியில்
http://puththakam.blogspot.com/2009/10/49_21.html

புத்தகம் : குருதிப்புனல்
ஆசிரியர் : இந்திரா பார்த்தசாரதி
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்
வெளியான ஆண்டு : 1975
கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட ஆண்டு : 2005
விலை : ரூ 200
பக்கங்கள் : 237
எங்கள் தோப்பிலும் வயல்களிலும் வேலை செய்யும் அனைவரும் கிழ் வகுப்பினர். வேலை முடித்து அவர்கள் வீட்டின் பின்புறம் சாப்பிட வருவார்கள். வரும்போது வாழை இலை அல்லது பூசனை இலை கொண்டுவருவார்கள். சாப்பிட்டு முடித்ததும் அம்மா அவர்கள் கையில் தண்ணிர் ஊற்றுவார். தவறி யாராவது சொம்போடு தண்ணிர் குடித்துவிட்டாள் அந்த சொம்பும் தீண்ட தகாதவை ஆகிவிடும். என் பெற்றோர் யாரும் அவர்களை தொட்டு பேச மாட்டார்கள்.
முதல் தலைமுறையாக நாங்கள் பள்ளிக்கு சென்றதும் அவர்களோடு அருகில் அமர்ந்து பேசவும் தொட்டு விளையாடவும் இயல்பாக பழகிகொண்டோம். எனக்கொரு நண்பன் இருந்தான். அவன் வீடு பாலாற்றங்கரையில் இருந்தது. அதன் பின்புறம் ஒருகொய்யா மரம் இருந்தது. அதில் ஏறி விளையாடவும் பழங்களை பறித்து தின்னவும் அங்கு நான் செல்வேன். பின் புறம் ஒரு ஒரு கினறு இருந்தது. அதில் அடர்கரு நிறத்தில் தண்ணீர் கைகெட்டும் நிலையில் இருக்கும். கரு நிற மீன்கள் நீரினுள் தவழ்வதை நெடுநேரம் பார்த்துகொண்டு கிணற்றின் திட்டில் நாங்கள் இருவரும் அமர்ந்திருப்போம்.
கல்லூரி நாட்களில் சாதிய எண்ணம் தேவைபடவே இல்லை. ஒருவரை ஒருவர் என்ன சாதி என்பதை தெரிந்துகொள்ள விருப்படவே இல்லை. ஒரே தட்டில் உணவருந்தி , ஒருவர் மடியில் ஒருவர் படுத்துரங்கினோம்.
ஆனாலும் சாத்திய எண்ணம் என் மனதின் அடிஆழத்தில் பூஞ்சைகள் போல வாழ்ந்துக்கொண்டே இருக்கிறது. முக்கியமான நிகழ்வுகளில் அது சிறு காளான் போல மேல் எழுகிறது. வீடு கட்ட நிலம் வாங்கினாலும் அருகில் யார் வாங்கி இருக்கிறார்கள் என்று கேட்க தோன்றுகிறது. எவ்வளவோ புத்தகங்கள் படித்தாலும் வேறுபட்ட மனிதர்களிடம் பழகினாலும் அவ்வப்போது எழும் சாத்தியம் சார்ந்த எண்ணங்களை தவிர்க்கவே முடியவில்லை.
ஆனால் என் மகன் முற்றிலுமாக வேறு சூழ்நிலையில் வளர்கிறான். அவனுக்கு சாதியம் பற்றி தெரியாமலே போகலாம். தெரிந்தாலும் அது அவனுக்கு முக்கியம் இல்லாமல் போகலாம்.
டாக்டர்கள் டாக்டர்களை திருமணம் செய்துகொள்கிறார்கள். எஞ்சினியர்கள் எஞ்சினியர்களை பெரும்பாலும் திருமணம் செய்துகொள்கிறார்கள். டாக்டர் சாதி எஞ்சினியர் சாதி என்று கூட உருவாகலாம்.
அவன் காலத்தில் சாதி வேறு பெயரில் வேறு அர்தத்தோடு உருவாகலாம்.
மனித மனதில் " வேற்றுமை " எப்போதும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது.
அதன் விளைவாக மனிதன் தன்னை மற்றவர்களை விட சற்று உயர்வாக காட்டிக்கொள்ளவும், வேறுபடுத்தி காட்டிக்கொள்ளவும் விழைகிறான்.
அதற்காகவே அவன் சாதி, மதம் , நிறம், அறிவு , புத்திசாலித்தனம், அதிகாரம் ,கல்வி, பணம் ..இன்னும் .., அனைத்தையும் பயன் படுத்திக்கொள்கிறான்.
அந்த எண்ணத்தை கொண்டே பண்பாடு ,கலாச்சாரம், பழக்க வழக்கம் அனைத்தையும் அவன் கட்டமைக்க முயற்சி செய்கிறான்.
அந்த அடிப்படை எண்ணம் மனதில் இருக்கும் வரை சாதியை நம் சமுகத்திலிருந்து அழித்து விட முடியாது. அப்படியே சாதியை ஒழித்தாலும் அந்த எண்ணம் ஏழை , பணக்காரன், படிச்சவன் படிக்காதவன் என்று எதோ ஒரு வடிவத்தில் வாழ்ந்துகொண்டே இருக்கும்.
இன்று "வேற்றுமையில் ஒற்றுமை" காணவே உலகம் முழுவதும் அமைதிக்கா போராடுபவர்கள் முயற்சிக்கிறார்கள்.
ஒரு கட்டத்தில் இந்த உலக மக்கள் அனைவரும் எல்லா விதத்திலும் சமம் என்ற நிலை வரும்போது, ஒட்டு மொத்த மக்கள் இயக்கமும் ஸ்தம்பிக்கும் என்பதே என் எண்ணம். அது மனித இன அழிவின் துவக்கமாக கூட இருக்கலாம்.
சமிபத்தில் நான் படித்த முக்கியமான நாவல் இந்திரா பார்த்தசாரதி அவர்கள் எழுதிய " குருதிபுனல் " . இது தென் தமிழகத்தில் நடந்த உண்மை சம்பவத்தை தழுவி எழுதியது.
டெல்லியில் வளர்ந்த இரண்டு தமிழ் இளம் நண்பர்கள் ஒருவர் பின் ஒருவராக தன் பூர்விக கிராமத்துக்கு வருகிறார்கள். அங்கு பெரும் நில பண்ணையார்களுக்கும், அவர்கள் நிலத்தில் கூலி வேலை செய்யும் தலித்துகளுக்கும் இடையில் நடக்கும் சிறு சிறு பிரச்சனைகளில் தலையிடுகிறார்கள். அந்த பிரச்சனை பெரியதாக மாறி போராட்டமாக உருவெடுக்கிறது. அந்த போராட்டத்தில் தலைமை ஏற்கும் அவர்களையும் அந்த போராட்டத்தையும் எப்படி ஆளும் வர்க்கம் நசிக்கி ஒடுக்குகிறது என்பது கதை.
அந்த இளைஞர்கள் மனதில் எழும் எண்ணவோட்டங்களையும் அந்த எண்ணங்களுக்கான காரணங்களையும் அது செயல் வடிவம் பெரும் முறையும் துள்ளியமா விளக்குவது நம்மை கதையோடு ஒன்றி விட செய்கிறது.
இதில் விவாதிக்கப்படும் தத்துவங்களும், கோட்பாடுகளும் இன்று போராட நினைக்கும் இளைஞர்களுக்கு ஒரு முக்கியமான பாடமாக அமையும்.
இந்த புத்தகத்தை பற்றிய விரிவான விமர்சனம் கீழ் உள்ள சுட்டியில்
http://puththakam.blogspot.com/2009/10/49_21.html

புத்தகம் : குருதிப்புனல்
ஆசிரியர் : இந்திரா பார்த்தசாரதி
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்
வெளியான ஆண்டு : 1975
கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட ஆண்டு : 2005
விலை : ரூ 200
பக்கங்கள் : 237
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)