"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

செவ்வாய், ஜூலை 29, 2014

எஸ். ரா வுடன் இலக்கிய நிகழ்வு

ஜூன் 14 மற்றும் 15 தேதியில் திண்டுக்கல்லில் நடைபெற்ற எஸ் ரா வின் இலக்கிய முகாமில் மகிழ்வோடு கலந்துக்கொண்டேன்.

காலை ஆறுமணிக்கு திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இறங்கி ஒரு டீ அருந்திவிட்டு நத்தம் செல்லும் பேருந்தில் அமர்ந்தேன். நாற்பதை கடந்த ஒருவர் பதனிகடை க்கு இந்த பேருந்து செல்லுமா என்று கேட்டார்.

இலக்கிய முகாமுக்கா என்று வினவி ஏறுங்கள் என்று சொல்லிவிட்டு சற்று தள்ளி அமர்ந்தேன். மேற்கொண்ட கேள்வியில் அவர் முகம் மலர்ந்து பேச துவங்கினார்.

சிறு சிறு கேள்வி பதில் பரிமாற்றத்திற்கு பின் உளம் புரிந்து நட்ப்பானார்.

அவர் பெயர் ஷன்முகம் என்றும் பெங்கலுரிலிருந்து வருவதாக அறிமுகம் செய்துகொண்டார். அவர் தூய தமிழில் இயல்பாக பேசுகிரார் என்று சிறிது நேரம் கழிதே உணர்ந்தேன்.

கேட்பதற்கு இனிமையாக இருந்தது. கூட்டம் நடந்த இரு நாட்களும் அவரோடு நட்பு குறையாமள் நகர்ந்தது.


நிகழ்வு நடந்த LIFE CENTER 


எஸ்.ரா என் மதிபிற்க்கூரிய எழுத்தாளர். விகடனில் அவர் எழுதிய கட்டுரைகளை தொடர்ந்து வாசித்து வாசிப்பை பழக்கமாக்கிகொண்டேன்.
கடந்த 7 வருடங்களாக அவர் எழுத்தை வாசித்து அவரை பற்றிய ஒரு மதிப்பீடும் ஒரு பிம்பமும் மனதில் உருவாகி இருந்தது.


அந்த பிம்பம் இந்த இரு நாட்களில் எந்த விததிலும் குலயக்கூடாது என்று எண்ணிக்கொண்டேன். முதல் நாள் அவரை கண்டு கைகுலிக்கினேன். அவரின் உருதியான பிடியும் இயல்பான சிரிப்பும் என் பயத்தை போக்கியது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட 60 பேரில் ஐம்பதுக்கும் அதிகமாக இளம் வயதினர். IT , திரை துறை, கல்லுரி மாணவர்கள் , பத்திரிக்கை என வெவ்வேறு துறையை சார்ந்தவர்கள் வந்திருந்தனர்.

டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் அனைவரையும் வரவேற்று உபசரித்து அனைத்து ஏற்பாடுகளையும் கவனித்துக்கொண்டார்.

முதல் நாள் துவக்கத்தில் எஸ். ரா ஒரு மேடையில் நின்று நாவலை பற்றி ஒரு விரிவான விளக்கத்தை வசகர்களுக்கு அளித்தார்.


மதிய நேரத்தில் வாசகர்களோடு விறிவாக விவாதிக்க , மேடையை அகற்றிவிட்டு எங்களின் நடுவே அமர்ந்துகொண்டார். ஆறு முக்கிய நாவல் பற்றி வாசகர்கள் விவாதிதனர்.



விவாதித்த அனைவரும் நாவலை ஒரு கதையாக மட்டும் அனுகாமல் அதை சமுகம் மற்றும் மனித உணர்வுகளை பற்றி புரிந்துகொள்ள உதவும் ஒரு வழியாக உள்வாங்கி இருந்தனர்.

ஒவ்வொரு நாவல் விவாதம் முடிவிலும் அந்த நாவலை பற்றி ஸ்.ரா அவர்கள் பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்.



மாலை சற்று ஒய்வுக்கு பின் இரவு எந்த தலைப்பும் இல்லாமல் பொதுவாக பேச அனைவரும் கூடினோம்.

ஒவ்வொருவரும் தான் படித்த நாவல்கள் பற்றி விவாதித்தனர்.

சில கேள்வி பதில்கள்

கேள்வி: ஐ.டி துறையில் வேலை பார்க்கும் நபர்கள் இயந்திரம் போல இருக்கிறார்கள். ஓய்வுக்கு கூட மதுவை தான் நாடுகிறார்கள். இது சமுதாயத்தை வெகுவாக பாதிக்கிறது.

எஸ் .ரா பதில் : நீங்கள் கூரும் நபர்கள் சமுதாயத்தில் ஐந்து சதவிகிதம் கூட இல்லை அதனால் சமுதாயத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை. அதிகம் உழைப்பவர்கள் சிறந்த ஓய்வை தேர்ந்தெடுக்க வேண்டும்.

என் கேள்வி: குழந்தை இலக்கியம் , சிறுவர் இலக்கியம் போல ஏன் இளஞ்சர் இலக்கியம் இல்லை?

எஸ் .ரா பதில்: இளஞ்சர் உலகம் வேறு. அவர்களுக்கு நண்பர்கள் முக்கியம். தமிழகத்தில் மிக குறைந்த எண்ணிக்கையில் புத்தகம் படிக்கிறார்கள். அவர்களுக்கான எழுத்துலகு இன்னும் தமிழில் வளரவில்லை.

என் கேள்வி: குழந்தைகளை பாட புத்தகங்கள் தவிர வேறு புத்தகங்களை படிக்க தூண்டளாமா அல்லது வர்புறுத்தளாமா ?

எஸ் .ரா பதில் : வற்புறுத்த வேண்டாம். ஆனால் தூண்டளாம். எனெனில் அவர்கள் வேறு துறையில் சாதிக்களாம். எல்லொருக்கும் புத்தகம் பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை.

மூன்று மணி நேரம் இது போன்ற விவாதம் தொடர்ந்தது. இடையில் எழும் தோய்வையும் மௌனத்தையும் எஸ்.ரா தன் அரிய தகவல்கள் மூலமும் சுவாரசியமான கதைகள் மூலமும் நிரப்பிக்கொண்டே இருந்தார்.

இரண்டாம் நாள் உலக இலக்கியங்களை பற்றி விவாதம் நடந்தது. உலகின் சிறந்த இலக்கியங்களை பற்றி எஸ்.ரா உரையாற்றினார். மொழிபெயர்ப்பு நாவல்களை பற்றி சா.தேவதாஸ் அவர்களும் ,எழுத்தாளர் முருகேசபாண்டியன் உரையாற்றினர். தோழர். எஸ். ஏ. பெருமாள் ம்ற்றும் ஷஜகான் அவர்களும் உரையாற்றினர். மதிய வேளையில் தமிழின் முக்கிய நாவல்களை பற்றி எஸ்.ரா உரையாற்றினார்.



படிக்க வேண்டிய முக்கியமான நாவல்களையும் பரிந்துரை செய்தார்.

மதிய வேளையில் சமுக ஆர்வலர் திரு. முத்துகிருஷ்ணன் நிகழ்வில் கலந்துகொண்டார்.



இந்த இரண்டு நாள் நிகழ்வில் இலக்கியம் பற்றிய ஒரு நல்ல அறிமுகம் கிடைத்தது. நல்ல புத்தகங்களும் நல்ல நன்பர்களும் கிடைத்தனர்.

இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தவர்கள் டிஸ்கவரி பதிப்பகத்தார். 1200 ரூபாய் கட்டனம் வசுலித்தனர். அவர்கள் அளித்த நல்ல உணவுக்கும் தங்கும் வசதிக்கும் இது சிறிய தொகை.

இது போன்ற நிகழுவுகள் எந்த லாப நோக்கும் இல்லாமல் இலக்கியத்தின் மீதான ஆர்வமும் அக்கறையும் கொண்ட நல்ல மனங்களின் மூலம் நடத்தப்படுகிறது. 

அந்த நல்ல மனங்களுக்கு அவர்களுக்கு நன்றி.

இந்த நிகழ்வை பற்றிய எஸ் . ரா வின் பதிவு
http://www.sramakrishnan.com/?p=4014


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக