"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

திங்கள், டிசம்பர் 29, 2014

2014

2014 ஆண்டு ஒரு இனிமையான வருடமாக கழிந்தது. இனிமையின், மகிழ்வின் ஊற்று  எங்கள் இரண்டரை வயது மகன் தான். கூடுதல் எடையோடு , இரண்டு தலைகளோடு இந்த வருடம் முழுக்க சுற்றினேன்.

நான் பார்க்கும் தொழிலில் இந்த வருடம் கொஞ்சம் மந்த நிலைதான்.

ஆனால் தனிப்பட்ட வாழ்வில் எனக்கு பிடித்ததெல்லாம் செய்துகொண்டு இருக்கிறேன்.

ஜுபைல் சொல்வேந்தர் மன்றத்தில் சேர்ந்து தமிழை தடை இல்லாமல் மேடையில் பேசும் திறனை வளர்த்துக்கொண்டு இருக்கிறேன்.

என் blogகிளும் facebook பக்கத்திலும் நான் பார்த்த படித்த விஷயங்களை எழுத முயன்றேன்.

புத்தகங்களை அதிகம் வாசித்தேன்

1. வென்முரசு - முதற்கனல் -ஜெயமோகன்
2.வென்முரசு - மழைபாடல் -ஜெயமோகன்
3.வென்முரசு - வண்ணக்கடல் -ஜெயமோகன்
4. வென்முரசு - நீலம் - ஜெயமோகன்
5. வென்கடல் - ஜெயமோகன்
6. யாமம் - எஸ். ரா
7. எனது இந்தியா - எஸ். ரா
8.ஆழிசூழ் உலகு - ஜோடி. குருஷ்
9. மிளிர் கல் - இரா. முருகவேல்
10. வனவாசம்  - கண்ணதாசன்
11. குருதிபுனல் - இந்திரா பார்த்தசாரதி
12. 20 க்கும் மேற்பட்ட சிறுகதைகள்

கடந்த வருடம் இனிதே அமையா உதவிய நண்பர்கள், உறவினர்கள், நலம்  விரும்பிகள் அனைவருக்கும் நன்றி.









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக