"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

திங்கள், பிப்ரவரி 06, 2017

அருவெறுப்பு

மலத்தில் அமர்ந்திருந்த ஒரு ஈ திடீர் என்று என்  வாயில் நுழைந்தது. அதை நான் மென்றும் விட்டிட்டேன்.

காலையிலிருந்து வாயை கழுவிக்கொண்டே  இருக்கிறேன். வாய் தன் இயல்புக்கு வந்தாலும் மனதில் அந்த அருவெறுப்பு போகவே இல்லை.

அது  ( வயதுக்கு கூட மரியாதை தர முடியாது ) அந்த இருக்கையில்  அமர்வது அவ்வளவு அருவெறுப்பாக இருக்கிறது.

வேலைக்காரி முதல்வராகிறார் என்கிறார்கள். தயவுசெய்து வீட்டில் வேலை செய்பவர்களை கேவலப்படுத்த வேண்டாம். வீட்டு வேலை செய்து உழைத்து தன் பிள்ளைகளை படிக்கவைத்து நல்லநிலைமைக்கு கொண்டுவரும் தாய்மார்கள்  இருக்கிறார்கள்.

ஜல்லிக்கட்டுக்கு கூடிய கூட்டம் நீங்கள் நடத்தும் இந்த நாடகத்துக்கு எதிராக கூடிய கூட்டம் என்று உங்களுக்கு புரியவே இல்லையா ?

அது எந்த தொகுதியில் நின்றாலும் அந்த மக்களை காலை தொட்டு கொஞ்சுகிறோம் தயவு செய்து தர்மத்தை நிலைநாட்டுங்கள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக