"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

புதன், மார்ச் 29, 2017

அனுபவம் இலவசம் !!!


சமீபத்தில் ஒரு DSLR கேமரா வாங்கினேன். அதை பற்றி இணையத்தில் படித்துக்கொண்டு இருக்கிறேன். படிக்க படிக்க தான் அதன் பிரமாண்டம் துலங்கி வருகிறது. தொழில் நுட்பமும் ரசனை சார்ந்த நுண்ணுரவும் இருந்தால் மட்டுமே புகைப்பட கலை நமக்கு கைகூடும்.
இணையத்தில் வினோத் என்பவற்றின் வீடியோ பதிவுகள் நன்றாக இருக்கின்றன.
https://www.youtube.com/channel/UCMMtgJ_Y92Xbr1ekvqG3IuA
அனுபவங்களை தன் நேரத்தையும் உழைப்பையும் செலவழித்து பதிவிட்டிருக்கிறார். அந்த பதிவுகள் ஒரு அடிப்படையான புரிதளை நமக்கு அளிக்கிறது. மேற்கொண்டு தொடர்ந்து புகைப்படங்களை எடுத்து எடுத்து பழகவேண்டும்.
ஒரு பறவையை புகைப்படம் எடுக்க முயற்சி செய்தேன். அமர்ந்த நிலையில் எடுத்துவிட்டேன் அது பறப்பதற்காக பட்டனில் கைவைத்து காத்திருந்தேன். சிறகு விரிக்கும் தருணத்திற்காக காத்திருந்த அந்த நொடிகள் சித்தம் அனைத்தும் விரலில் குவிந்திருந்த அந்த நொடிகள் என்னை பரவசத்தில் ஆழ்த்தியது. அந்த ருசிக்காகத்தான் புகைப்பட கலைஞசர்கள் கேமராவை தூக்கிக்கொண்டு காடுமலைகளில் அலைகிறார்கள் போலும்.
இணையம் வந்தது முதல் இத்தகைய அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்தல் அதிகமாகி உள்ளது. உலகில் ஏதோ ஒரு மூலையில் உள்ள ஏதோ ஒரு நபர் அதை பயன்படுத்திக்கொள்கிறார் பெரும்பாலும் இலவசமாக.
எனக்கும் அந்த அனுபவம் ஏற்பட்டுள்ளது.
ஒரு நாள் ஒரு சக என்ஜினியர் ஒருவர் கையில் ஒரு டாக்குமெண்ட் வைத்திருந்தார். என்னது என்று வாங்கி படித்துப்பார்த்தேன். அவர் நான் ஒரு prablam solve பண்ணமுடியாம இரண்டு நாள் திணறி கொண்டு இருந்தேன். யாரோ ஒரு புண்ணியவான் அதப்பத்தி நெட்ல எழுதி இருத்தான். அது தான் இது என்கிறார்.
நான் அந்த புண்ணியவான் நான் தான் இது என்னோட blogல நான் எழுத்தியது என்றேன். அவர் ஓ என்கிறார். நான் எழுத்தியது என் துறையில் சிறிய விஷயம் தான். ஆனால் எந்த புத்தகத்திலும் கிடைக்காத என் தனிப்பட்ட அனுபவம்.
என் துறையில் நான் சந்தித்த அனுபவங்களை blog ல் தொகுத்து வருகிறேன். அது எனக்கு பின்னும் நிற்கும்.
http://testingcommissioning.blogspot.com/
விளையாட்டாக துவங்கியது இன்று உலகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு 200 பேர்வரை பார்க்கிறார்கள். மொத்த பார்வையாளர்கள் ஒரு லட்சம் தாண்டி போய்க்கொண்டு இருக்கிறது.
மனதில் பகிர்தலின் சந்தோசம். யாரோ ஒருவரின் புண்ணியவான் என்ற வாழ்த்து. அது போதும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக