"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

சனி, பிப்ரவரி 13, 2010

கேட்டது கிடைக்கும்

ஒரு அற்புதமான ஓவியர் இருந்தார் ஆனால் அவருக்கு தாழ்வு மனப்பான்மை அதிகம்.
அவர் மீது அன்பு கொண்ட ஒரு நல்ல நண்பர் இருந்தார்.
அவர் வியரின் படைப்புகளை கண்காட்சிக்கு வைக்களாம் என அறிவுரை கூறினார்.



புதன், பிப்ரவரி 10, 2010



படித்ததில் பிடித்தது-1

"நாம முட்டையை உடைத்தா ஒரு உயிர் போச்சுன்னு அர்த்தம்
முட்டையே தான உடைந்தா ஒரு உயிர் உருவாகி வெளியே வருதுன்னு அர்த்தம்"

"மத்தவங்க நம்ம செதிக்கினா வலி அதிகமா தான் இருக்கும்
நம்மையே நாம செதுகினா வலி கூட சுகமாதான் இருக்கும்"


உங்களுக்கு யாரை அதிகமா பிடிக்கும்?
உங்க வாழ்கையில் மறக்க முடியாத உதவி பன்னது யார்?
நீங்க நண்பனா இருக்க விரும்பும் நபர் யார்?

இந்த கேள்விகளுக்கு நம்ம பதில் அளிப்பது எளிது
ஆனா இந்த கேள்விக்கு பதிலா இருப்பாது அழகு..

புதன், பிப்ரவரி 03, 2010

தோல்வியில் துவங்கும் காதல்-2



நான் முட்டாள் என்று நினைகின்றாயா என்றேன் நான்

நீ என்ன நினைகிறாய் என்றாய் நீ

கண்கவிழ்ந்து மௌனமாய் நின்றேன் நான்

முட்டாள் என்று உணர்கின்ற தருனம் வலியானது

ஆனால் அது வலிமையான வாழ்வின் முதல் புள்ளி என்றாய் நீ

நான் கண்களை உயர்த்தி உன்னை பார்த்தேன்

நீ என் கைகளை பற்றி கண்களை பார்த்தாய்....

செவ்வாய், பிப்ரவரி 02, 2010



நான் காஃபி அருந்தும் போது சுடுகிறது என்றேன்
இயல்பாய் அதை வாங்கி சூடு தனிய ஊதி கொடுத்தாய்
அப்பொழும் நான் உணரவில்லை
நாம் சாலையில் நடந்த பொழுது தூரத்தில் வரும் வாகனத்தை பார்து
இயல்பாய் என்னை சற்று உள்ணோக்கி இழுதுக்கொண்டாய்
அப்பொழும் நான் உணரவில்லை
ஒரு மழை இரவில் உன் இரண்டு உள்ளங்கைகளையும் தேய்து
வெதுவெதுப்பாய் என் கண்ணங்களிள் வைத்தாயே
அப்பொழும் நான் உணரவில்லை
கோவிலில் நாம் வணங்கும் போது உனக்கான என் வேண்டுதல் முடிந்தபின்னும் எனக்கான
உன் வேண்டுதல் முடிவதே இல்லை
இப்படி எத்தனையோ தருணங்களிள் நான் உணரவில்லை

உன்னை பிரிந்து இருக்கும் இப்போது உணர்கின்றேன்
என்னை இரண்டு உயிர்கள் இயக்குகிறது என்று.....