"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

ஞாயிறு, டிசம்பர் 08, 2013

கவனம்


 நானும் என்னோடு வேலை செயும் சவுதி நண்பரும்   காரில்   சென்றுகொண்டு இருந்தோம். நாங்கள் சென்றுகொண்டு இருந்த சாலையின் இருபுறமும் ஆடு மற்றும் ஒட்டகங்களை வளர்க்கும் பண்ணைகள் அதிகம் இருந்தது. பண்ணையை சார்ந்த மனிதர்கள் சவுதியின் பாமர மக்கள் என்று அழைக்கப்படும் பத்து இனமக்கள். அவர்கள் வாகனம் ஓட்டுவது வரையறை இல்லாமல் இருக்கும். அதனால் நான் மெதுவாக வாகனத்தை செலுத்திக்கொண்டு இருந்தேன். எங்களுக்கு இணையாக இன்னொரு வாகனம் வந்துகொண்டிருந்தது. திடீரென அது எங்களை முந்திக்கொண்டு எங்கள் பக்கம் வளைந்து குறுக்கு சாலையில் நுழைய முனைந்தது. நான்  நிலை இழந்து அந்த வண்டியின் பக்கவாட்டில் மோதி நிறுத்தினேன். எனக்கு ஆழ்ந்த பயமும் அதை தொடர்ந்து கடும் கோவமும் ஏற்ப்பட்டது. தமிழிலேயே திட்டி தீர்த்தேன். 

இந்த ஊரில் வண்டிகள் மோதிக்கொண்டால் யார் மீது தவறு என்று ஒருவரை ஒருவர் சண்டையிட்டு  பணம் கேட்க்க தேவையில்லை. போலீஸுக்கும் , இன்சூரன்ஸ் companyக்கும்  phone செய்தாள் போதும் அவர்களே வந்து யார் மீது தவறு என்று உறுதி செய்து    இன்சூரன்ஸ் பணத்துக்கு ரசிது தருவார்கள் அதை கொண்டு நாம் வண்டியை சரிசெய்து கொள்ளலாம். உயிர் சேதம் வந்தாள் தவறு செய்தவர் மீது கேஸ் போடுவர். அதனால் சிறியதாக மோதிகொண்டவர்கள் சண்டையிடாமல் கை கொடுத்து போலீஸ் வரும்வரை பேசிக்கொண்டு இருப்பர்.

நான் இடித்த வண்டியில் இருந்து ஒரு வயதான பெரியவர் இறங்கி வந்தார். அவரை பார்த்தவுடன் என் கோவம் சற்று தனிந்தது. அவர் மெல்லிய புன்னகையுடன் கை கொடுத்தார். நானும் கை கொடுத்தேன். அவர் ஏதோ அரபியில் பேசினார்  ஆனால் எனக்கு புரியவில்லை. ஆனால் அவர் புன்னகையை , மன்னித்துவிடு நான் தெரியாமல் வண்டியை வளைத்து விட்டேன் என்பதாக புரிந்து கொண்டேன். என் புன்னகையின் அர்த்தம் , பரவாயில்லை வண்டிக்கும் எனக்கும் எதுவும் ஆகவில்லை என்பதாக இருந்தது. 

அவரே போலீஸ்க்கும் , இன்சூரன்ஸ் companyக்கும் phone செய்தார். தொழுகை நேரம் என்பதால் அருகில் இருக்கும் மசுதிக்கு சென்று தொழுகை முடித்து திரும்பி வந்தார்.

போலீஸ் வந்ததும் முதலில் அவரிடம்  நடந்ததை பற்றி விசார்த்தனர். பின்பு என்னிடம் வந்தனர் நானும் நடந்ததை விளக்கினேன். அவர் மறுபடியும் போலீசிடம் பேசினார். நான் அருகில் இருந்த அரபிநண்பரிடம் அவர் என்ன சொல்கிறார் என்று கேட்டேன். நீ பொய் சொல்லுவதாகவும் நீயும் அதே வழியில் திரும்புவதாக சென்று திரும்பாமல் நேராக வந்து அவரை மோதியதாக அவர் சொல்கிறார் என்றார். எனக்கு மறுபடியும் கோவம் தலைக்கு ஏறியது. ஆனால் போலீஸ் அவர் மீது தான் தவறு என்று சிட்டு எழுதி கொடுத்துவிட்டு களைந்து செல்லுமாறு கூரினர். அவர் போலீசை திட்டிக்கொண்டே அங்கிருந்து சென்றார்.

ச்சே என்ன பெரிய மனுஷன் இவன் தப்பு பண்ணிட்டு இப்படி பொய் சொல்றான் என்று திட்டிக்கொண்டே நானும் வண்டியை எடுத்துக்கொண்டு officeக்கு கிளம்பினேன். அவர் முதலில் என்ன நினைத்து என்னிடம் கை கொடுத்திருப்பார் என்று யோசித்தேன் இன்னும் கோவம் அதிகமானது. 

இரவு படுக்கும்போது இதைபற்றி யோசித்துக்கொண்டு இருந்தேன். ஏன் எந்த ஊரிலும் தவறை ஒத்துக்கொள்ள மறுக்கிறார்கள், அறம் என்பது எல்லா மனிதருக்கும் நாடு, நிறம், மொழி , மதம் தாண்டி பொது தானே என்று மனம் அலை பாய்ந்து கொண்டே இருந்தது.  அப்போது ஒரு எண்ணம் தோன்றியது ஒருவேளை அவர் பார்வையில் அவர் சொல்வது உண்மையாக இருக்குமோ, அவரும் என்னை திட்டிக்கொண்டே தான் சென்றிருப்பார். நான் இன்னும் சற்று வேகமாக வந்திருந்தாலும் அவருக்கு பலத்த அடி பட்டிருக்கும். இப்படி மனம் மாற்றி யோசித்த பின்னே மனம் அமைதியானது , தூக்கம் வந்தது.

கவனக்குறைவு விபத்தின் முதற்முக்கிய காரணம். வேகம், வண்டியின் நிலை, சாலை, ஓட்டுனரின் உடல்நிலை அடுத்தடுத்த காரணங்களாகின்றன.   


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக