"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

புதன், ஏப்ரல் 30, 2014

கல்யாணம் ஆகி அஞ்சு வருஷம் ஆச்சி என்னத்த கண்டேன்

கோபாலு : கல்யாண நாள் வருது என்ன ஸ்பெசல் ன்னே ?

நான் : ஒண்ணுமில்ல கோபாலு நமக்கு தினமும் ஸ்பெசல் தான் ...

கோபாலு : பொண்ணு பாக்க போனபோது அண்ணி முதல்ல உன்ன பாத்தப்ப உங்க  மனசுல என்னனே தோனுச்சி ?

நான் : அத ஏன்டா கேக்ர ... அண்டாவ எரிர அடுப்புல வச்சிட்டு கொஞ்ச நேரம் தண்ணி ஊத்தாம இருந்தா அண்டா என்ன பாடுபடும் அந்த மாதிரி இருந்தது என் மனசும் உடம்பும் ... அப்படி ஒரு பார்வ பாத்தாங்க உங்க அண்ணி

வீட்டுக்கு வந்து ஓரம்ப நாள் கழிச்சி அஞ்சி நிமிஷம் என் முஞ்சிய கண்ணாடியில பார்த்துட்டு இருந்தேன்.

நம்ம அன்னம்மா கிழவி தான் என்னை "கருப்பு அழகு" கருப்பு அழகுன்னு கொஞ்சிகிட்டே இருக்கும். அந்த ஒரு வார்த்தைக்காகவே பாக்கெட் மனி ஐம்பது பைசாவுக்கு அதுக்கு பொடி வாங்கி கொடுப்பேன். அந்த வார்த்தைய அப்படியே develop பண்ணி ரொம்ப நாளா பறந்துகிட்டு இருந்தேன். அந்த நெனப்போட செரக வெட்டி சூப்பு வெச்சி குடிச்சிட்டு ஏப்பம் விட்டது அந்த பார்வ ...

சரி மொத முறையா போன் பண்ணலாமுன்னு try பண்ணேன் , ரெண்டு மூனு வாட்டி பண்ணியும் போன் அவங்க எடுக்கல ...., தீடீர்ன்னு வைத்த கலக்கும்போது போக எடம் கெடைக்கலினா நமக்கு ஒரு பயமும் தவிப்பும் வரும்பாரு அந்த மாதிரி இருந்ததுடா கோபாலு ....

கோபாலு : அண்ணே உங்க அகத்தின் அழகு முகத்தில தெரிஞ்சி இருக்கணுமே 

நான் : அட போடா நம்ம அகம் எப்பவும் அழகாவா இருக்கு , கொஞ்ச நாள் கழித்து கொஞ்சம் கொஞ்சம் பேசி அப்டீ தேரி வந்தோம்.

அதுக்கப்புறம்  நாலு மாசம் உடம்ப கொறச்சி 92 kg ல இருந்து 82 kg வந்தேன்.

நாலு மாசம் கழிச்சி அவங்க என்ன மறுபடியும் பார்த்தாங்க .....

நீ என்னோட ஆண் என்று உரிமை கொண்டாடியது அந்த பார்வ ..

அப்ப என்னோட மனசுல ஒரு கர்வம் தோணுச்சிடா கோபாலு , அது நா சாகர வரைக்கும் இருக்கும்முடா

அதுக்கப்புறம் தான் எனக்கே என்ன புடிச்சது

கோபாலு : கல்யாணம் ஆனா  இந்த அஞ்சு வருஷத்துல முக்கியமான தருனங்கள சொல்லுங்கண்ணே 

நான் :  பொண்ணுகள பத்தி  பெருசா ஒண்ணும் நம்ம தெரிஞ்சிகிறது இல்லடா கோபாலு, வெளிய இருந்து பழகுனா கூட பெருசா ஒண்ணும் வெளிபடுத்திக்க மாட்டாங்க , இந்த சினிமாவ  பாத்து பொண்ணுகள பத்தி மிகையா ஒரு பிம்பத்த மனசுல ஏத்திக்கிட்டு அத அவங்க கிட்ட எதிர் பார்த்து  சண்ட போட வேண்டியது , அப்புறம் பெண் மனசு ஆழம் அது இதுன்னு பெனாத்த வேண்டியது.

மொத ரெண்டு வருஷம் ஒருத்தர ஒருத்தர் தெரிஞ்சிக்கவே  சரியா போச்சு , எல்லார் மாதிரி நானும் அவங்கள அடிமையா வச்சுக்கணும் என்று ஆசைப்பட்டேன். அதுக்காக ஓவரா அவங்க மேல அன்பு காட்டறது இல்ல நா ஆம்பள , நா சம்பாதிறேன் என்று காலாவதி ஆகி போன மேட்டர வச்சி சண்ட போடுறது இப்படி லூசு தனமா பண்ணிக்கிட்டு இருந்தேன். தொடர்ந்து அஞ்சு நாள் கூட என்னோட பேசாம இருந்தாங்க  அப்பெல்லாம் என்ன பத்தி தான் நா நெறையா தெரிஞ்சிகிட்டேன்.

மூனாவது வருஷத்துல குட்டி பையன் உருவானா , அந்த ஒரு வருஷம் அவங்க பட்ட பாடு ஐயோ நாமெல்லாம் அதுக்கு முன்னாடி ஒன்னுமில்லடா கோபாலு, சும்மா அத பத்தி நம்ம ஆளுங்க பாட்டு எழுதுறானுங்க, கவித எழுதுராணுக .ஒன்னுத்துக்குள்ளேயும் அடங்காது அந்த வேதன..அந்த வலிக்கு முன்னாடி நம்ம மண்டியிட்டு தான் ஆகணும்

குட்டி பையன் பொறந்து கொஞ்ச நேரத்தில பிரசவ அறையில இருந்து அவங்க பேசினாங்க , எனக்கு பேச்சு வரல ஏதோ உளறுனே , ஆனா மனசில இருந்த மகிழ்வு எல்லா கட்டையும் அவிழ்த்துவிட்டு ஆதி மனிதனா மாறி நடு காட்டுல நெருப்ப மூட்டி பரவசமா ஆடனுன்னு தோனுச்சி.

அவனோட மொத Birthday க்கு ஒரு சின்ன function பண்ணினோம். நண்பர்கள் எல்லோரும் கலந்துக்கிட்டாங்க. எங்களுக்கு அவ்வளவு சந்தோஷம். எல்லோருமே சந்தோசமா இருந்தாங்க , ஒருவேள நண்பர்கள் மட்டுமே கலந்துகிட்டதால அந்த function அவ்வளவு சந்தோஷமா இருந்தது என்று நினைக்கிறேன். பையனுக்கு மொத Birthday, அவங்களுக்கும் அது  மறு ஜென்ம பிறந்த நாள். இதோ பையனுக்கு ரெண்டாவது  Birthday வருது, நானும் என் பையனும் வீட்டுல அட்டகாசம் பண்றோம். ரெண்டு பேரும் திட்டு வாங்குறோம் , கொட்டு வாங்குறோம், ரெண்டு பேருக்கும் அவங்க எல்லா வேலையும் செய்றாங்க. ரெண்டு பேரையும் அவங்க ஒன்னா பாத்துகிறாங்க.

கோபாலு: நம்ம ஒவ்வொருத்தரோட வெற்றிக்கு பின்னாடியும் ஒரு பொண்ணு இருக்கா அத கொர சொல்லிகிட்டே , அது கரெக்ட் தானே

நான்: ஆமாண்டா கோபாலு.. நா சின்ன வயசா இருக்கும் போது எங்க அப்பா எங்க அம்மாவெ அப்படி கிண்டல் பண்ணுவாரு, திட்டுவாரு ஆனா அம்மா எந்த விதத்திலும் எங்க கிட்ட அப்பாவெ விட்டே குடுக்க மாட்டாங்க. நம்ம எது சொன்னாலும் கேட்டுகிற எது சொன்னாலும் தாங்கிக்கிற ஜீவன் நமக்கு கீழ இருந்தா நமக்கு ஒரு கெத்து வருமில்ல , அந்த நெனப்பு தான் எங்க அப்பாவுக்கும், நல்லா வெள்ள சட்ட வேட்டி கட்டி வண்டியில ஊர ஒரு ரவுண்டு வருவார், இப்பவும் அப்படிதான்.

ஒரு நாள் வண்டியிலே இருந்து கிழ விழுந்து மூஞ்சி கையெல்லாம் பேத்துக்கிட்டு வந்தாரு , எனக்கு அவர ரத்தத்தோட பார்த்தப்ப நடுங்கி போச்சி. அவரு மெல்ல வந்து திண்ணைல உக்காந்துக்கிட்டு "அம்மா எங்கடா குட்டி" என்னு கேட்டார் , நா அம்மாவே கூட்டி வந்து விட்டதும் அம்மா அலறி பக்கத்தில இருந்த சொந்த காரரை கூப்பிட்டு வண்டியில ஏத்தி hospital க்கு அனுப்பி வச்சாங்க. இப்ப நினைக்கும் போது அப்பா , அம்மாவ எங்கன்னு கேட்ட அந்த வார்த்தையில எந்த அதிகாரமும் இல்ல, ரொம்ப நிதானமா மெதுவா கேட்டார். கஷ்டம் வரும் போது நமக்கான ஜீவனை தேடும் குரல் அது. அந்த ஜீவன் இருக்கும் வரை அப்பா ஜாலியா இருப்பார் கெத்தா இருப்பார்.

ஆனா இப்ப நிலம மாறிபோச்சு. வீட்டுகார அம்மாவுக்கு என்ன பத்தி personal லாவும் தெரியும், பொது வெளியில நா என்ன சீன போட்டு  கெத்து காமிக்கரனும் தெரியும். அதனால நாம என்ன வெட்டி முறிச்சி சாதித்தாலும் அவங்க கரெக்ட்டா  நம்ம எட போடுவாங்க. நமக்கு கரெக்டான விமர்சகர் அவங்க தான். உன்ன ஓவரா புகழ்ந்தா அப்புறம் உன்னோட சீன் அவங்களால தாங்க முடியாது.

நெறைய பேரு நா பொண்டாட்டி புளைங்களுக்காக தான் நாயா உழைக்கிறேன்னு பெனாத்துறாங்க. ஆனா அவங்க கிட்ட ஒரு கோடி ரூபா கொடுத்து வெளியில எங்கும் போகாம வீட்ல இருன்னு சொன்னா  பத்து நாள்ல பைத்தியம் புடிச்சிடும். நம்ம வேல செய்றது மொதல்ல நமக்காக, சாதிகறதும் சம்பாதிக்கிறதும் நம்ம சந்தோஷத்துக்காக , இதுல பொண்டாட்டி கொர சொல்லகூடாது, பாராட்டனும், கொஞ்சனுன்னு நெனைக்கிறது ஓவருடா கோபாலு.

கோபாலு : சரி அதெல்லாம் விடுங்கண்ணே ஆதர்சன தம்பதியா வாழ Idea குடுங்கண்ணே 

நான்: டே கோபாலு அப்படியெல்லாம் யாரும் இருக்க முடியாதுடா. ஒன்னு அவங்க சொல்றத்துக்கெல்லாம் நீ மண்டைய மண்டைய ஆட்டிகிட்டு அடிமையா இருக்கணும் இல்ல அவங்க அப்படி இருக்கணும். அப்படி இருந்தா ஆதர்சன தம்பதியா வெளில தெரிவோம். அப்படி இருப்பது நெறைய பேருக்கு comfortable லா இருக்கு.

ஆனா அதுல எந்த சுவாரசியமும் இருக்காது. இந்த விஷயத்தில யாருக்கும் யாரும் ஐடியாவோ Adviceசோ கொடுக்க முடியாது. ஏன்னா நம்ம ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி. மொதல்ல நம்ம பத்தி நம்ம தெரிஞ்சிக்கணும். அவங்கள பத்தி புரிஞ்சிக்கணும். அதுக்கு கொஞ்சமாவது முயற்சி அல்லது மெனகெடனும். காலையில எழுந்து சாப்பிட்டு வேலைக்கு போயிட்டு திரும்பி வந்து காபி குடிச்சிட்டு கால நீட்டி டிவி பார்த்துட்டு குப்புற படுத்து துங்குனா ஒன்னும் நடக்காது.

அவங்களுக்காக கொஞ்சமாவது நம்மள நம்ம மாத்திக்கணும், அவங்களும் நமக்காக அவங்கள கொஞ்சம் மாத்திக்கணும்.

அட ஒன்னும் வேலைக்கு ஆகல, ஒன்னும் புரியல, ஒன்னும் செட் ஆகலன்ன வுட்டு வேற வேலைய பாக்கறது தான் உத்தமம்.

சரி வா நாம டீ சாப்பிடுவோம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக