"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

திங்கள், ஏப்ரல் 07, 2014

எதிர் வினை

kaka thopu vantha kidaikuma illa namma oru ambur leather factory thantha madiri selfish irutnhudu ippo thanjavur dmk pota methane MOU kudukalama? where is nature I think you are a writer publish what you want for your son not what you had ....i will be standing next to you dont worry

வணக்கம் பிரபா , நல்லா இருக்கியா ?

இந்த கமெண்ட் என்னை யோசிக்க வைக்கிறது. என்னை பொறுத்த வரை சமுக அக்கறை உள்ள மனிதர்கள் இரண்டு வகை. 

முதல் வகை 

 நேரடியா களத்தில இறங்கி போராடுபவர்கள். இதில் அக விருப்பம், ஆர்வம் இரண்டும் முக்கியம். இந்த இரண்டும் ஒருவருக்கு சிறு வயது முதலே இயல்பாக இருக்கலாம்,  சிறந்த வழிகாட்டி அல்லது ஆசிரியர் மூலம் உருவாகி இருக்கலாம், ஒரு நல்ல புத்தகங்கள் மூலம்உருவாகி இருக்கலாம், வாழ்வில் நடந்த துர்சம்பவம் அல்லது  நல்ல நிகழ்வின் மூலம் உருவாகலாம். 

அக விருப்பமும், ஆர்வமும் ஒருவனை உந்தி தள்ளுகிறது. அதுவே அவனை போராட வைக்கிறது, சமூக அவலங்களை எழுத வைக்கிறது, சமூக அவலங்களை எதிர்த்து போராட வைக்கிறது. 

ஆனால் அக விருப்பம் இல்லாமல் ஏதோ ஒரு புத்தகத்தை பார்த்துவிட்டு, மேடை பேச்சுகளை கேட்டுவிட்டு, டீவியில் பிளாஷ் நியூஸ் பார்த்துவிட்டு உணர்சிகள் மேல் எழும்பி சேவையில் ஈடுபடும் நபர் விரைவில் நீர்த்து போய்விடுவார். ஒரு கட்டத்தில் தன் சொந்த விருப்பங்களையும், நலனையும் சேவை பாதிக்கும் போது சேவையை விடுத்து அவர் தன் அன்றாட வேலைக்கு திரும்பி விடக்கூடும்.

இரண்டாம் வகை 

மனிதனின் உண்ணுணர்வுகளை பேசுபவர்கள். இரண்டு மனிதர்குள் நடக்கும் உணர்வு வெளிப்பாடு அல்லது தனி மனிதனுக்கும் சமூகத்திற்குமான தொடர்பை பற்றி பேசுபவர்கள். எழுத்தாளர்களாக, கவிஞ்சர்களாக, கலை துறையில், இசைத்துறையில் நான் நிறைய மனிதர்களை அறிந்திருக்கிறேன்.

ஒரு சிறுகதையோ, கவிதையோ, நாவலோ எந்த சமூக கருத்தயும் நேரடியாக முன்வைப்பது இல்லை. படிப்பவரின் அகத்தைக்கொண்டு அவரே ஒரு வாழ்வியல் கருத்தை உருவாக்கிக்கொள்கிறார். அந்த கருத்து மெதுவாக அவரை சிந்திக்க வைக்கிறது. தனிப்பட்ட மனித மனதில் மகிழ்வை உண்டாக்குகிறது. 

இதுவே அவர்கள் சமுகத்திற்கு செய்யும் பணி.

முதல் வகை வேறு தளம், இரண்டாம் வகை வேறு தளம்.

ஆனால் என்னை பொருத்தவரை இந்த இரண்டு வகை மனிதர்களும் சமுகத்திற்கு தேவை.

நான் இரண்டாம் தளத்தில் இருக்கிறேன். சின்ன சின்ன  மனித உணர்வுகளை பதிவு செய்யவே எனக்கு விருப்பம். நமக்குள் இருக்கும் பொதுவான கருத்துகளை, பொது புத்தியை கேள்வி கேட்கவே விளைகிறேன்.

நீ நாட்டுக்காக என்ன செய்தாய் ?, இதுவரை யாருக்காவது உதவி இருக்கிறாயா ? சமுக பிரச்சனைகளில் போராடி இருக்கிறாயா ? அல்லது அதை பற்றி எழுதி இருக்கிறாயா என்று யாராவது என்னை  கேட்டால் எனக்கு குற்ற உணர்வே எழுகிறது.

எனக்கு இன்னும் அதில் ஆர்வம் வரவில்லை அது தான் உண்மை.


                                                                                                                                         -நன்றி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக