பகுதி -1 கண்டிப்பு
ஒரு குழந்தையை எந்த வயதிலிருந்து கண்டிக்கத்துவங்களாம் என்ற கேள்வி என்மனதில் நீண்ட நாள் இருந்து கொண்டே இருந்தது. என் கணக்கு மூன்று வயது. குழந்தைக்கு நீ செய்வது தவறு என்று சொன்னால் புரிந்துகொள்கின்ற பக்குவம் இருந்தால் நாம் கண்டிக்கத்துவங்கலாம்.
அதேபோல செய்யாத தப்புக்கு கண்டிப்பது அல்லது தண்டிப்பது குழந்தைகளின் ஆழ்மனதில் எதிர்மறையாக பதியும். அந்த தருணத்தில் நாம் குழந்தைகளிடம் மன்னிப்பு கேட்பது அவசியம் என்று நினைக்கிறேன் .
அதே போல அவன் தவறு செய்யும் போது கோவம் அனைத்தையும் அவன்மீது கொட்டாமல் முதலில் நம்மை நாம் கட்டுப்படுத்துவது அவசியம். இல்லையெனில் அவன் மீது மூர்கமான தாக்குதலாக அது அமைந்துவிடும்.
எங்கள் வீட்டில் என்னோடு பிறந்தவர்கள் நான்கு பேர். என் அம்மா என்னை அடித்திருக்கிறார். அப்பா அடித்ததில்லை ஆனால் ஒரு பார்வை பார்த்து அதட்டினாலே நாங்கள் பயந்து நடுங்கிவிட்டுவோம். என் பெரியப்பா வழி அண்ணன்கள் எங்களை அதட்டி அடித்து வழிக்கு கொண்டுவருவது உண்டு. பெரும்பாலான வீடுகளில் மாமா ,சித்தப்பா அந்த வேலையை செய்வார்கள்.
அதே போல குழந்தைகளும் அவர்கள் மீது பாசமாக இருப்பார்கள். பள்ளியில் ஏதாவது சிறுவர்களுக்குள் சண்டை வந்தாள் " இர்ரா மகனே என் சித்தப்பாவை கூட்டி வர்ரேன் " என்று ஓடுபவனை நான் பார்த்து இருக்கிறேன். என் அப்பா ஒரு முறை என் பள்ளிக்கு வந்து வழக்கமாக எல்லோரும் சொல்லும் வசனத்தை என் தமிழ் வாத்தியாரிடம் சொல்லிவிட்டு போனார் " கண்ணு ரெண்ட விட்டுட்டு மத்த எந்த எடத்தில வேண்ணா அடிங்க சார்".
ஆனால் இன்று ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் இருக்கும் வீடுகளில் , பெற்றவர்கள் தன் குழந்தைகளை மற்றவர்கள் கண்டிப்பதையும் அடிப்பதையும் விரும்புவது இல்லை. நேரடியாகவே அதை அவர்களிடம் சொல்லிவிடுகிறார்கள். அதே போல பள்ளியிலும் கண்டிப்பதும் அடிப்பதும் நிறுத்திவிட்டோம். ஆதலால் குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்தவேண்டி இருக்கிறது.
என் மகனுக்கு என் மீது அபார நம்பிக்கை இருக்கிறது. அவனுக்கு எது நடந்தாளும் நான் காப்பாற்றி விடுவேன் என்று நம்புகிறான். யாரவது அவனை கண்டித்தால் முகம் வெம்பி என்னை திரும்ப்பி பார்ப்பான். நான் அவனை கண்டுகொள்ளாமல் வேறு பக்கம் திரும்பிக்கொண்டால் வெடித்து அழுது விடுவான்.
நான் இப்போது தான் கண்டிக்கத்துவங்கி இருக்கிறேன்.கண்டிக்கும் போது அமைதியாக இருப்பான். அவன் அம்மா வந்ததும் "அம்மா அப்பா அடிச்சிட்டான் " என்று வெடித்து அழுவான். கண்டிப்பதை இன்னும் எப்படி எதிர்கொள்வது என்று அவனுக்கு தெரியவில்லை.
பகுதி -2 தைரியம்
பொதுவாக அவன் பயந்த சுபாவம். யாரவது புதியதாக வீட்டுக்கு வந்தாலே அழுவான். இந்த தொகுப்பு வீட்டில் எந்த ஆட்களை கண்டாலும் முகத்தை திருப்பிக்கொண்டு பயந்து ஒடுங்குவான். வீட்டு க்கு வெளியில் விளையாடிக்கொண்டு இருக்கும் போது ஏதாவது ஒரு வீட்டின் கதவு திறக்கும் ஒலி கேட்டால் போதும் வீட்டுக்குள் ஓடிவந்து விடுவான் , ஆனால் கடந்த இரண்டு வாரங்களாக தைரியம் வந்துவிட்டது . எல்லோரையும் இவனே கூப்பிட்டு பேசுகிறான்.
அவன் பக்கத்து வீட்டு குழந்தைகளோடு விளையாடும் போது நான் வீட்டில் இருந்தால் அவனுக்கு அளவற்ற தைரியம் வந்துவிடுகிறது . அவர்களிடம் சத்தமாக பேசுவான் சண்டையிடுவான்.
வெள்ளி கிழமை எனக்கு விடுமுறை நாள். வழக்கமாக நானும் கவிதாவும் ( மனைவி ) அவனை விளையாட பூங்காவுக்கு அழைத்து சென்றோம்.
நாங்கள் வழக்கமாக செல்லும் பூங்கா , வண்ண பூக்களால் நிறைந்து இருந்தது. அந்த பூக்களுக்கு என்ன உவமை கூரலாம் என்று யோசித்து பார்த்தேன் , அதற்க்கு நிகராக எதுவும் தோன்றவில்லை. கடற்கரை , புல்வெளி என்று மனதுக்கு இதமான இடம். குழந்தைகள் விளையாட மணல் வெளியும் அதில் உஞ்சலும் , சறுக்கு மேடைகளும் உண்டு.
அங்கே கார் ஸ்டேரிங் ஒன்று குழந்தைகள் விளையாட வைத்திருந்தனர். இவனுக்கு நான் கார் ஓட்டும் போது ஸ்டேரிங்கை சுற்றுவது வேடிக்கையாக இருக்கும். அதையே பார்த்துக்கொண்டு இருப்பான்.
அன்று அந்த பூங்காவில் இருந்த கார் ஸ்டேரிங்கை ஓடிப்போய் பிடித்துக்கொண்டான். பத்து நிமிடங்கள் அங்கிருந்து நகரவில்லை. அந்த பூங்காவில் சவூதி, பாகிஸ்தானி , பிலிப்பைனி, இந்தியா மற்றும் சுடானி குழந்தைகள் விளையாடிக்கொண்டு இருந்தனர். ஒரு எகிப்து பெண்குழந்தை இவன் வயதே இருக்கும். அவனிடம் வந்து அந்த ஸ்டேரிங்கை கேட்டது. இவன் தரவே இல்லை. கேட்டு கேட்டு இவனை அடிக்க ஆரம்பித்தது. நான் பஞ்சாயத்துக்கு போகலாம் என்று எழுந்தேன். கவிதா வேண்டாம் என்று தடுத்து அவன் என்ன தான் செய்கிறான் பார்ப்போம் என்றவுடன் நான் போகவில்லை. அந்த பெண் கொஞ்ச நேரம் நின்று விட்டு போய்விட்டது. அதன் பின் யார் அவனிடம் போனாலும் 'NO NO GO' என்று கையை காட்டி மிரட்டிக்கொண்டு இருந்தான். எங்களுக்கு சிரிப்பாக இருந்தது. பின் ஒரு வழியாக அந்த இடத்தை விட்டு நகர்ந்து வந்தான். இரவு துங்கிய பின் கூட " அக்கா சண்ட போட்டா " , " அக்கா சண்ட போடா " என்று உளறி கொண்டு இருந்தான்.
அண்ணன் தம்பிகள் சண்டையிட்டால் அம்மா அப்பா அதில் உள்ளே நுழையக்கூடாது என்பார்கள். ஏனெனில் அபோதுதான் தைரியமும் எதிர்த்து நிற்கும் தன்மையும் அவர்களுக்கு இயல்பாக கைகூடும். அந்த தைரியம் மூர்கமாக மாறாமல் பார்த்துக்கொள்வதே நம் கடமை.
பகுதி -3 யுத்தி
கடந்த வாரம் கவிதாவுக்கு உடல்நிலை சரியில்லை. படுக்கையில் போர்த்திக்கொண்டு படுத்திருக்கும் போது விழுந்து விழுந்து கவனித்துக்கொண்டான். கொஞ்சம் இரும்பினாலே அம்மா தண்ணி குடி , அம்மா மாத்திரை குடி என்று அன்பு மழை. பின் மருத்துவமனைக்கு சென்று வரும் வழியில் ஒரு கடைகயில் அவனுக்கு சாக்லெட் ( கிண்டர் ஜாய் ) வாங்கி கொடுத்தோம்.
இந்த வாரம் அதே உத்தியை அவன் பயன்படுத்தினான். காலில் லேசாக இடித்துக்கொண்டு கட்டிலில் போர்த்தி படுத்துக்கொண்டான் . "அம்மா வக்கிதே அம்மா வக்கிதே " மருந்து வேணும் , தண்ணி வேணும் , ஹோஸ்பெட் போகணும் , கக்கி ( கடைக்கு ) போனம் , கின்ஜா வாங்கணும் என்று கேட்டுக்கொண்டே இருந்தான். ஒரு வழியா சமாதானம் செய்து அவனை எழுப்ப வேண்டியதாகிவிட்டது.
அவனுக்கு வெளிவுலம் பார்க்க ஆசை. முடிந்த அளவுக்கு வெளியில் அழைத்து செல்கிறேன். உலகம் முழுவதும் பொது இடங்கள் அனைத்தும் வளர்ந்த பெரியவர்கள் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டது. நம் வீடும் அப்படித்தான். அவனே பயன்படுத்தும் வகையில் உள்ள பொது இடம் பூங்கா மற்றும் ஹைபர் மார்கெட்டில் சாக்லெட் வைத்திருக்கும் இடம் மட்டும் தான்.
ஒரு குழந்தையை எந்த வயதிலிருந்து கண்டிக்கத்துவங்களாம் என்ற கேள்வி என்மனதில் நீண்ட நாள் இருந்து கொண்டே இருந்தது. என் கணக்கு மூன்று வயது. குழந்தைக்கு நீ செய்வது தவறு என்று சொன்னால் புரிந்துகொள்கின்ற பக்குவம் இருந்தால் நாம் கண்டிக்கத்துவங்கலாம்.
அதேபோல செய்யாத தப்புக்கு கண்டிப்பது அல்லது தண்டிப்பது குழந்தைகளின் ஆழ்மனதில் எதிர்மறையாக பதியும். அந்த தருணத்தில் நாம் குழந்தைகளிடம் மன்னிப்பு கேட்பது அவசியம் என்று நினைக்கிறேன் .
அதே போல அவன் தவறு செய்யும் போது கோவம் அனைத்தையும் அவன்மீது கொட்டாமல் முதலில் நம்மை நாம் கட்டுப்படுத்துவது அவசியம். இல்லையெனில் அவன் மீது மூர்கமான தாக்குதலாக அது அமைந்துவிடும்.
எங்கள் வீட்டில் என்னோடு பிறந்தவர்கள் நான்கு பேர். என் அம்மா என்னை அடித்திருக்கிறார். அப்பா அடித்ததில்லை ஆனால் ஒரு பார்வை பார்த்து அதட்டினாலே நாங்கள் பயந்து நடுங்கிவிட்டுவோம். என் பெரியப்பா வழி அண்ணன்கள் எங்களை அதட்டி அடித்து வழிக்கு கொண்டுவருவது உண்டு. பெரும்பாலான வீடுகளில் மாமா ,சித்தப்பா அந்த வேலையை செய்வார்கள்.
அதே போல குழந்தைகளும் அவர்கள் மீது பாசமாக இருப்பார்கள். பள்ளியில் ஏதாவது சிறுவர்களுக்குள் சண்டை வந்தாள் " இர்ரா மகனே என் சித்தப்பாவை கூட்டி வர்ரேன் " என்று ஓடுபவனை நான் பார்த்து இருக்கிறேன். என் அப்பா ஒரு முறை என் பள்ளிக்கு வந்து வழக்கமாக எல்லோரும் சொல்லும் வசனத்தை என் தமிழ் வாத்தியாரிடம் சொல்லிவிட்டு போனார் " கண்ணு ரெண்ட விட்டுட்டு மத்த எந்த எடத்தில வேண்ணா அடிங்க சார்".
ஆனால் இன்று ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் இருக்கும் வீடுகளில் , பெற்றவர்கள் தன் குழந்தைகளை மற்றவர்கள் கண்டிப்பதையும் அடிப்பதையும் விரும்புவது இல்லை. நேரடியாகவே அதை அவர்களிடம் சொல்லிவிடுகிறார்கள். அதே போல பள்ளியிலும் கண்டிப்பதும் அடிப்பதும் நிறுத்திவிட்டோம். ஆதலால் குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்தவேண்டி இருக்கிறது.
என் மகனுக்கு என் மீது அபார நம்பிக்கை இருக்கிறது. அவனுக்கு எது நடந்தாளும் நான் காப்பாற்றி விடுவேன் என்று நம்புகிறான். யாரவது அவனை கண்டித்தால் முகம் வெம்பி என்னை திரும்ப்பி பார்ப்பான். நான் அவனை கண்டுகொள்ளாமல் வேறு பக்கம் திரும்பிக்கொண்டால் வெடித்து அழுது விடுவான்.
நான் இப்போது தான் கண்டிக்கத்துவங்கி இருக்கிறேன்.கண்டிக்கும் போது அமைதியாக இருப்பான். அவன் அம்மா வந்ததும் "அம்மா அப்பா அடிச்சிட்டான் " என்று வெடித்து அழுவான். கண்டிப்பதை இன்னும் எப்படி எதிர்கொள்வது என்று அவனுக்கு தெரியவில்லை.
பகுதி -2 தைரியம்
பொதுவாக அவன் பயந்த சுபாவம். யாரவது புதியதாக வீட்டுக்கு வந்தாலே அழுவான். இந்த தொகுப்பு வீட்டில் எந்த ஆட்களை கண்டாலும் முகத்தை திருப்பிக்கொண்டு பயந்து ஒடுங்குவான். வீட்டு க்கு வெளியில் விளையாடிக்கொண்டு இருக்கும் போது ஏதாவது ஒரு வீட்டின் கதவு திறக்கும் ஒலி கேட்டால் போதும் வீட்டுக்குள் ஓடிவந்து விடுவான் , ஆனால் கடந்த இரண்டு வாரங்களாக தைரியம் வந்துவிட்டது . எல்லோரையும் இவனே கூப்பிட்டு பேசுகிறான்.
அவன் பக்கத்து வீட்டு குழந்தைகளோடு விளையாடும் போது நான் வீட்டில் இருந்தால் அவனுக்கு அளவற்ற தைரியம் வந்துவிடுகிறது . அவர்களிடம் சத்தமாக பேசுவான் சண்டையிடுவான்.
வெள்ளி கிழமை எனக்கு விடுமுறை நாள். வழக்கமாக நானும் கவிதாவும் ( மனைவி ) அவனை விளையாட பூங்காவுக்கு அழைத்து சென்றோம்.
நாங்கள் வழக்கமாக செல்லும் பூங்கா , வண்ண பூக்களால் நிறைந்து இருந்தது. அந்த பூக்களுக்கு என்ன உவமை கூரலாம் என்று யோசித்து பார்த்தேன் , அதற்க்கு நிகராக எதுவும் தோன்றவில்லை. கடற்கரை , புல்வெளி என்று மனதுக்கு இதமான இடம். குழந்தைகள் விளையாட மணல் வெளியும் அதில் உஞ்சலும் , சறுக்கு மேடைகளும் உண்டு.
அங்கே கார் ஸ்டேரிங் ஒன்று குழந்தைகள் விளையாட வைத்திருந்தனர். இவனுக்கு நான் கார் ஓட்டும் போது ஸ்டேரிங்கை சுற்றுவது வேடிக்கையாக இருக்கும். அதையே பார்த்துக்கொண்டு இருப்பான்.
அன்று அந்த பூங்காவில் இருந்த கார் ஸ்டேரிங்கை ஓடிப்போய் பிடித்துக்கொண்டான். பத்து நிமிடங்கள் அங்கிருந்து நகரவில்லை. அந்த பூங்காவில் சவூதி, பாகிஸ்தானி , பிலிப்பைனி, இந்தியா மற்றும் சுடானி குழந்தைகள் விளையாடிக்கொண்டு இருந்தனர். ஒரு எகிப்து பெண்குழந்தை இவன் வயதே இருக்கும். அவனிடம் வந்து அந்த ஸ்டேரிங்கை கேட்டது. இவன் தரவே இல்லை. கேட்டு கேட்டு இவனை அடிக்க ஆரம்பித்தது. நான் பஞ்சாயத்துக்கு போகலாம் என்று எழுந்தேன். கவிதா வேண்டாம் என்று தடுத்து அவன் என்ன தான் செய்கிறான் பார்ப்போம் என்றவுடன் நான் போகவில்லை. அந்த பெண் கொஞ்ச நேரம் நின்று விட்டு போய்விட்டது. அதன் பின் யார் அவனிடம் போனாலும் 'NO NO GO' என்று கையை காட்டி மிரட்டிக்கொண்டு இருந்தான். எங்களுக்கு சிரிப்பாக இருந்தது. பின் ஒரு வழியாக அந்த இடத்தை விட்டு நகர்ந்து வந்தான். இரவு துங்கிய பின் கூட " அக்கா சண்ட போட்டா " , " அக்கா சண்ட போடா " என்று உளறி கொண்டு இருந்தான்.
அண்ணன் தம்பிகள் சண்டையிட்டால் அம்மா அப்பா அதில் உள்ளே நுழையக்கூடாது என்பார்கள். ஏனெனில் அபோதுதான் தைரியமும் எதிர்த்து நிற்கும் தன்மையும் அவர்களுக்கு இயல்பாக கைகூடும். அந்த தைரியம் மூர்கமாக மாறாமல் பார்த்துக்கொள்வதே நம் கடமை.
பகுதி -3 யுத்தி
கடந்த வாரம் கவிதாவுக்கு உடல்நிலை சரியில்லை. படுக்கையில் போர்த்திக்கொண்டு படுத்திருக்கும் போது விழுந்து விழுந்து கவனித்துக்கொண்டான். கொஞ்சம் இரும்பினாலே அம்மா தண்ணி குடி , அம்மா மாத்திரை குடி என்று அன்பு மழை. பின் மருத்துவமனைக்கு சென்று வரும் வழியில் ஒரு கடைகயில் அவனுக்கு சாக்லெட் ( கிண்டர் ஜாய் ) வாங்கி கொடுத்தோம்.
இந்த வாரம் அதே உத்தியை அவன் பயன்படுத்தினான். காலில் லேசாக இடித்துக்கொண்டு கட்டிலில் போர்த்தி படுத்துக்கொண்டான் . "அம்மா வக்கிதே அம்மா வக்கிதே " மருந்து வேணும் , தண்ணி வேணும் , ஹோஸ்பெட் போகணும் , கக்கி ( கடைக்கு ) போனம் , கின்ஜா வாங்கணும் என்று கேட்டுக்கொண்டே இருந்தான். ஒரு வழியா சமாதானம் செய்து அவனை எழுப்ப வேண்டியதாகிவிட்டது.
அவனுக்கு வெளிவுலம் பார்க்க ஆசை. முடிந்த அளவுக்கு வெளியில் அழைத்து செல்கிறேன். உலகம் முழுவதும் பொது இடங்கள் அனைத்தும் வளர்ந்த பெரியவர்கள் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டது. நம் வீடும் அப்படித்தான். அவனே பயன்படுத்தும் வகையில் உள்ள பொது இடம் பூங்கா மற்றும் ஹைபர் மார்கெட்டில் சாக்லெட் வைத்திருக்கும் இடம் மட்டும் தான்.