"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

செவ்வாய், மார்ச் 17, 2015

ஆங்கிலம் தெரியாத முட்டாள்

என்னை யாரவது திட்டினால்  அதிலிருந்து கடந்து வருவது எனக்கு ரொம்ப எளிது. திட்டுபவரை உடனே என் எதிரியாக  பாவித்து அவன்   மட்டும் யோக்கியமா ? அவனை பத்தி எனக்கு  தெரியாதா என்று திருப்பி திட்டினால் போதும் மனம் சாந்தி ஆகிவிடும்.

என்னை யாராவது  பாராட்டினால்   நான்  நெளியத் துவங்கிவிடுவேன். அதை எப்படி எதிர் கொள்ளவது என்று எனக்கு தெரிவது இல்லை.

அதே போல எனக்கு யாரவது அறிவுரை சொன்னா அதையும்  எப்படி கடந்து போவது என்று தெரியாது.

அட்வைஸ் பண்ணுபவர் பெரும்பாலும் நெருக்கமானவராக இருக்கலாம், உன் நல்லதுக்கு தான் சொல்றேன் என்று அவர் ஆரம்பிக்கும் போது சப்த நாடியும் அடங்கி சரிங்க சரிங்க என்று சொல்லத்துவங்கி விடுவேன்.

அட்வைஸ் பண்ணும் போது என் சுயம் ( ஈகோ ) உரசப்படும். முன்பெல்லாம் மனம் கொந்தளிக்கத்துவங்கிவிடும். ச்ச்சே  இப்படி பண்ணிட்டோமே என்று புலம்பி, குழம்பி, ததும்பி , வெம்பி இரண்டு நாள் பித்தொடு அலைந்து பின் மறந்து விடுவேன்.

ஆனால் இப்போது வேறு விதமாக முயன்று வருகிறேன். அப்படி அட்வைஸ் செய்து என் சுயம் அடிபடும்போது வழக்கம் போல மனம் கொந்தளிக்கத்துவங்கும். அவன் யாரு அதை சொல்வதற்கு எனக்கு தெரியாதா ? நா மட்டுமா இப்படி இருக்கேன் ? மத்தவங்களுக்கு நா மேல்  என்று துவங்கி பெனாத்த ஆரம்பிக்கும் , கொஞ்ச நேரம் கழித்து இல்ல இல்ல நா பண்ணது தப்பு , அப்படி இனி பன்னக்கூடாது என்று புலம்பும். கொஞ்ச நேரம் அதை கவனித்தால் செம காமடியா இருக்கும். அதிக பட்சம் அரை  மணி நேரம் மனதை கவனித்துக்கொண்டே இருந்தால் மனம் ஒரு முடிவுக்கு வரும். நான்  வேறு வேலை பார்க்க  சென்று விடுவேன்.

எனக்கு அதிகம் அட்வைஸ் பண்ணப்படுவது என்  ஆங்கில  அறிவை பற்றித்தான்.

எங்கள் கிராமத்து பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் போது A , B , C , D தடை இல்லாமல்  நான் மட்டுமே சொல்லி கைதட்டல் வாங்கினேன்.

அதன் பின் பொறியியல் படிப்பு முதலாண்டு முடியும் வரை ஆங்கில வாத்தியார் தான் என் முதல் எதிரி.

பொறியியல் படிக்கும் போது நண்பர்கள் அனைவரும் திட்டுவார்கள். ஏனோ அது மண்டையில் ஏறவே இல்லை. என்னோடு படித்த கிராமத்து நண்பர்கள் அனைவரும் ஆங்கிலத்தில் நல்ல தேர்ச்சி அடைந்தார்கள்.  நான் மட்டும் தேங்கிவிட்டேன்.

வேலைக்கு வந்தவுடன் ஆங்கிலம் பேச நன்றாக வந்துவிட்டது. ஆனால் எழுத ம்ம்ம்ம்ம் ...spell checking  கொஞ்சம் என்னை காத்துவருகிறது. மறந்தது spell check பண்ணாமல் மெயில் அனுப்பிவிட்டால் அதோ கதி தான். சில நேரம் அதுவும் என்னை காலை வாரி கழுத்தறுக்கிறது.

ஆங்கிலம் மட்டும்மில்லை தமிழும் எனக்கு இதே பிரச்சனைதான் 'ல' ள , 'ர' , ற , ன , ண  மாத்தி மாத்தி போட்டு " உன் தமிழில் கொள்ளிகட்டைய வைக்க " என்று திட்டு வாங்கினேன். " மாலை இட்ட மங்கை " என்று எழுதுவதற்கு            " மாலை இட்ட மாங்காய் " என்று எழுதி தொலைத்து பல நாள் கிண்டலுக்குள்ளானேன்.

ஆனால் தினமும் தமிழில் நல்ல கட்டுரைகள் , நாவல்கள் படித்துக்கொண்டே இருக்கிறேன். அவ்வபோது தொழில் சார்ந்து ஆங்கிலத்தில் படிக்கிறேன்.
மேடையில் தடையில்லாமல் தமிழில் பேச வருகிறது. தொழில் சார்ந்து ஆங்கிலத்தில் உரையாட முடிகிறது. ஆனால் எழுதும் போது சரியான எழுத்தை பயன் படுத்த மூளை  முட்டி முணங்குகிறது.

நம் மூளை  ஒரு வார்த்தையின் முதல் மற்றும் இறுதி எழுத்தை மட்டுமே படிக்கும். அதைகொண்டு அந்த வார்த்தையை அடையாளம் கண்டுவிடும்.
தொடர்ந்து படிப்பதனால் மட்டும் சரியான எழுத்துக்களோடு நம்மால் எழுத முடியாது. சிறு வயதிலிருந்தே பள்ளியில் அதற்கான பயிற்சி இருக்கவேண்டும். ஆழ்மனதில் துளி துளியாக படிந்து அது ஒரு அறிவாக வளர வேண்டும். அல்லது நாம் வளர்ந்த பின் ஒரு தனியான ஈடுப்பாட்டோடு அந்த பயிற்சியை எடுக்க வேண்டும். அப்போதுதான் எந்த தனிகவனமும்  இல்லாமல் எழுத்துப்பிழை இல்லாமல் சரளமாக எழுத முடியும். இன்றைய நகர மற்றும் சிறு நகர குழந்தைகளுக்கு இந்த அறிவு பள்ளிகளில் எளிமையாக கிடைக்கிறது.

தொழில் நுட்ப வளர்ச்சி  மனிதனின் சிறு சிறு அறிவு குறைகளை நிவர்த்தி செய்து கொண்டே இருக்கிறது. இப்போது voice to text converter சாப்ட்வேர்கள்  கிடைக்கிறது. இவை வளர்ச்சி அடைந்தால் இதை பற்றி அதிகம் யோசிக்கத்தேவை இல்லை. ஆனாலும் யாருக்கு என்ன எழுத வேண்டும் , எங்கு எப்படி எழுத வேண்டும் என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும்.
" kind request " என்பதற்கு பதில் " kind information " என்று போட்டால் Manager திட்டாமல் என்ன பண்ணுவார்.

இதோ நான் நூறாவது முறை உறுதி எடுக்கிறேன். ஆங்கிலம் பிழையில்லாமல் எழுத கற்றுக்கொள்வேன். என் மகனை இன்னும் இரண்டு மாதத்தில் LKG சேர்க்க இருக்கிறேன். அவனோடு சேர்ந்து படிக்க இருக்கிறேன். வாழ்க ஆங்கிலம் , வளர்க என் ஆங்கில அறிவு , வெற்றி வேல் , வீர வேல், வெற்றி வேல் , வீர வேல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக