"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

வியாழன், மார்ச் 05, 2015

பொது புத்தி



கிறுக்கு புத்தி கேள்வி பட்டு இருக்கிறோம் அது என்ன  பொது புத்தி.

பசி வயிரின்னுடையது , தேடல் மனதின்னுடயது.

அடிப்படையான தினவாழ்விற்கு தேவையான தவகவல்களை நாம் சேகரித்துக்கொண்டே இருக்கிறோம். ஆனால் நம் மனம் அதோடு நின்று விடுவதில்லை. உலகத்தில் உள்ள அனைத்து பெரிய விசயங்களிலும் தெரிந்துகொள்ள ஆசை மட்டும் படுகிறது.

அந்த விசயங்களை எளிமை படுத்தி , பொதுமை படுத்தி, ஒரு பொது புத்தியாக நாம் மாற்றிக்கொள்கிறோம்.

எடுத்துக்காட்டாக அரசியல் என்ற விஷயத்தை எடுத்துக்கொண்டால் அது வன்முறையாளனுக்கு உரியது என்று எளிமை படுத்துகின்றோம், நல்லவர்கள் அதில் ஈடுபட முடியாது என்று பொதுமை படுத்துகின்றோம், அது ஒரு சாக்கடை என்று பொது புத்தியாக மாற்றிக்கொள்கிறோம்.

இன்னும் எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் ஊசி போடுபவன் நல்ல டாக்டர் , போடாதவன் டாக்டரே இல்லை.

இப்படி பொதுவான விசயங்களை பற்றி , மனிதர்களை பற்றி , நாடு நிலங்களை பற்றி நமக்குள் ஒரு பொது புத்தி இருக்கிறது.

சற்று சிந்தித்து பாருங்கள் மலையாளிகள் பற்றி நம் பொது புத்தி என்ன , பாகிஸ்தானிகளை பற்றிய நமது பொது புத்தி என்ன என்று எல்லோருக்கும் தெரியும்.

பொது புத்தியை இரண்டாக பிரித்துப்பார்க்கலாம். ஒன்று நாமே உருவாக்கிகொள்கிற பொது புத்திகள். அது அதிக அளவு நம்மை பாதிப்பது இல்லை. ஆனால் திட்டமிட்டு வியாபார நோக்கில் நமக்குள் ஏற்றப்படும் பொது புத்திகள் நமக்கும் சமூகத்திற்கும் ஆபத்தானவை.

சமிபத்தில் ஒரு விவாத நிகழ்ச்சியில் ஒரு குழந்தையிடம் உன் அம்மாவிடம் ஒரு வேண்டுகோள் வைக்க வேண்டும் என்றால் என்ன கேட்பாய் என்று அதை நடுத்துபவர் கேட்கிறார். அந்த குழந்தை சொல்கிறது தினமும் என் அம்மா இரவு தூங்கும் போது ஒரு ஊட்ட சத்து பானம் ( health drink ) கொடுப்பார்கள். அது எனக்கு பிடிக்கவே பிடிக்காது. குடிக்கவில்லை என்றால் அடிப்பார்கள். அதை எனக்கு கொடுக்க வேண்டாம் என சொல்லுங்கள் என்றது. நிகழ்ச்சி நடத்துனர் அம்மாவிடம் திரும்பி ஏன் என்று வினவ அதை குடித்தால் தான் நன்றாக வளருவாள் என்றார். யார் அதை சொன்னது என்றால் டிவியில் சொன்னார்கள் என்றார்.

இது தான் திட்டமிட்டு நம் மனதில் ஏற்றுகின்ற பொது புத்தி. இதை பார்க்கும் வளர்ச்சி குறைவான குழந்தை தாழ்வு மனப்பான்மை கொள்ளும்.

ஒரு குழந்தை நன்றாக வளர்ந்தால் மட்டுமே இந்த சமுகத்தில் வாழமுடியுமா ? உயரம் குறைவாக இருந்தால் சாதிக்க முடியாதா ?

இன்னொரு விளம்பரம் சில குழந்தைகள் பழங்களை தட்டிவிட்டு செல்கின்றன. ஒரு அம்மா வந்து இந்த காலத்தில் யார் பழங்களை சாப்பிடுகிறார்கள். எங்கள் பழச்சாறை கொடுங்கள் என்று குழந்தைகள் குடிப்பார்கள் என்கிறார்.

வியாபாரிகள் மட்டும் இல்லை பெரும் தலைவருகளும் அதையே தன் செய்கிறார்கள்.

இணையம் வழியாக கொஞ்ச கொஞ்சமாக தன்னை பற்றி மிகையான செய்திகளை பரப்பி ஒரு பொது பிம்பத்தை உருவாக்கி வெற்றி பெறுகின்றார்கள்.

எந்த ஒரு பெரிய விசயத்தையும் பொது புத்தியாக மாற்றி விட்டால் மேற்கொண்டு அதை பற்றி சிந்திக்க தேவை இல்லை என்று நாம் நினைக்கிறோம்.

ஒரு நாட்டை பற்றி ஒரு சாதியை பற்றி அண்டை மாநில மக்களை பற்றி ஒரு பொது புத்தி நம் மனதில் படிந்து இருக்கிறது.

சற்றேனும் விழிப்போம்

நன்றி வணக்கம்.

- கிராமத்தான்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக