"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

வியாழன், ஜூலை 21, 2016

பியூஸ் மனுஷ்


திரு . பியூஸ் மனுஷ் பிணையில் வெளியே வந்தது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த பத்து நாட்களாக  அவர் கைது நிகழ்வு தான் மனதில் அலைக்கழிப்பாக  இருந்தது.

சமூகத்தின் மீது கவனம் கொண்ட பெரும்பாலானவர்கள் கைதை  பற்றி பதிவுகள் இட்டு இந்த கைது நிகழ்வை கண்டித்தது பெரும் நம்பிக்கையை கொடுத்திருக்கிறது.

இந்த கைது நிகழ்வாள் ஒரு நல்லதும் நிகழ்ந்திருக்கிறது. சேலத்தில் சிலருக்கு மட்டுமே தெரிந்த மனுஷ்  தமிழகத்தில் இன்று பரவலாக்கப்பட்டுள்ளார்.

அறத்தின் முகத்தை பலர் முதல் முறையாக நேரிலே பார்த்திருப்பார்கள்.

ஆனால் அந்த முகம் அழுவதை இந்த வீடியோ பதிவில் பார்க்கும் போது மனம் வேதனை அடைகின்றது.

அவர் மனமும் உடலும் பெரும் பாதிப்பு அடைந்திருக்கும். அதிலிருந்து அவர் மீண்டு வர வாழ்த்துகிறேன்.

மீண்டும் அறம் வெல்லும் என்றும் அதுவே வெல்லும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக