ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தபோது தென் தமிழகத்தில் சில கிராமங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டுக்கு தமிழ் நாடே எழவேண்டுமா என்ற விவாதம் எழுத்தது.
எங்கள் ஊர் வடதமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் அருகே உள்ள மோட்டூர் கிராமம்.
எங்களூரிலும் ஜல்லிக்கட்டு நடக்கும் ஆனால் அதற்க்கு பெயர் "மாடுவிடும் திருவிழா". ஜல்லிக்கட்டு மாட்டுக்கு "குமார் மாடு " என்று பெயர். தெருவின் ஒருமுனையிலிருந்து மாடுகளை அவிழ்த்து விடுவார்கள். அது எவ்வளவு குறைந்த நேரத்தில் தெருவின் அடுத்த முனையை அடைகிறது என்பது தான் வெற்றிக்கான கணக்கு.
பொதுவாக மாட்டு பொங்கல் அன்று அந்த பஞ்சாயத்தை சேர்ந்த மாடுகாளை மட்டும் கழுவி அலங்கரித்து தெருவில் விடுவார்கள். இளைஞசர்களும் பெரியவர்களும் தெருவின் இருபுறமும் நின்று மாட்டின் மீது கை போடுவார்கள் ( மாடு ஓடும்போது கையால் தட்டுவார்கள் ).
சிறுவர்கள் பெண்கள் அனைவரும் வீடுகளுக்கு மேல் அல்லது தட்டிகளுக்கு பின்னலிருந்து அதை உற்சாகமாக கண்டுகளிப்பார்கள்.
பெண்கள் சிறுமியரின் வண்ண உடைகள் தெருவின் இரு புறமும் கட்டிய தோரணம் போல இருக்கும்.
ஆண்கள் கபடி விளையாட்டில் நிற்பதுபோல இருவர் மூவர் என கைகோர்த்து மாடுகளை எதிர்கொள்வர்.
"மகுடி வீட்டு மாடு ", செவிடி ஊட்டு மாடு என்று , சொட்டி காலன் மாடு என்று ஊரில் ஒவ்வொரு மாட்டுக்கும் ஒவ்வொரு பெயர் இருக்கும். அந்த மாட்டுவைத்திருப்பவர்களுக்கு ஊரில் தனி மரியாதை உண்டு.
பெரும்பாலான மாடுகள் அவிழ்த்தவுடன் மின்னல் வேகத்தில் தெருவை கடக்கும். அதன் மீது கை போடவே முடியாது. சில நன்றாக மொத்து வாங்கும். மிகச்சில மட்டும் நின்று விளையாடும். தெருவில் நிற்கும் அத்தனை பெரும் வீட்டு திண்ணைகளில் ஏறி ஒடுங்கிக்கொள்வர்.
இந்த நிகழ்வு முடிந்ததும் ஊரில் உள்ள அனைத்து பசுமாடுகளை ஓரிடத்தில் குழுமச் செய்வார்கள். மாடுகளுக்கு நோய் வாராமல் இருக்க பூசை செய்வார்கள் . சிறுவர்களுக்கு அங்கு அனுமதி இல்லை. பெரிய இலையில் சோறு கொட்டி குங்குமம் சேர்த்து அதை பிசைந்து படைப்பார்கள், பூசை முடிந்ததும் அதை ஊர் முழுக்க வீடுகளில் உள்ள மாட்டு கொட்டகைகளில் "பொலியோ பொலி" "பொலியோ பொலி" என்று கத்திக்கொண்டே வீசுவார்கள். அப்படி வீசுபவரின் எதிரே ஊர்மக்கள் யாரும் வரக்கூடாது.
அதற்க்கு மறுநாள் காணும் பொங்கல் சிறுவர்களுக்கானது. அன்று சிறுவர்கள் கன்று குட்டி விடுவார்கள். நான் சிறுவனாக இருந்த போது எங்கள் பசுமாடு வெள்ளை கன்று குட்டி ஈன்றது. அதை எப்படியாவது குமார் மாடாக ஆக்குவது தான் என் அப்போதைய லட்சியமாக இருந்தது.
அதன் சின்ன திமிலில் சாக்கு பை போட்டு பல்லால் கடித்து இழுத்தால் அது பெரியதாக வளரும் என்று யாரோ சொன்னார்கள். தினமும் நான்கு முறை அதை செய்ய போக கன்றுக்குட்டி என்னை பார்த்தாலே மிரள ஆரமித்தது.
காணும் பொங்கல் அன்று கன்று குட்டியை குளிப்பாட்டி அதன் மொட்டு கொம்புகளில் வண்ணம் பூசி நான்கைந்து நண்பர்கள் கூடி நடுத்தெருவுக்கு அழைத்து சென்றோம். செல்லும் வழியெல்லாம் தகர டபாவில் நண்பர்கள் மேளம் அடித்துக்கொண்டே வந்தார்கள். பொங்கலுக்கு சேர்ந்த காசு பையில் இருந்தததால் துள்ளிக்கொண்டே வந்தோம். தெருவெல்லாம் சிறுவர்களின் கூட்டம் கன்று குட்டிகளின் கூட்டம். எங்கள் முறை வந்ததும் நாங்கள் அவிழ்த்துவிட்டோம். கன்று குட்டி ஓடவே இல்லை. கீழே குனிந்து மண்ணை மண்ணை முகர்ந்து பார்த்தது. மற்றவர்களுக்கும் கேலியாக இருந்தது. கூட வந்த நண்பர்களும் கழண்டு கொண்டனர். மறுபடியும் கன்று குட்டியை படாத பாடுபட்டு இழுத்து வந்து வீட்டில்கட்டுவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது.
காணும் பொங்கல் முடிந்து அடுத்த மாதத்தில் பரிசு வைத்து மாடுகளை விடும் போட்டி நடக்கும். போட்டிக்கு வெளியூரிலிருந்து மாடுகள் வரும். நிகழ்ச்சி திருவிழா போல நடக்கும்.
ஒவ்வொரு மாட்டுக்கு ஐந்து சுற்றுகள் அனுமதி. மாடு தெருவை கடக்கும் வேகத்தை ஐந்து முறையும் கணக்கிட்டு அதன் சராசரியை கணக்கிடுவார்கள். குறைந்த நேரத்தில் ஓடிய மாட்டுக்கு முதல் பரிசு.
பல வருடங்களுக்கு பிறகு " மாடுவிடும் திருவிழா " எங்களூரில் அறிவித்திருக்கிறார்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது.
முதல் பரிசு 25001 ரூபாய்.
இது போன்ற விழாக்கள் தான் கிராம வாழ்வை உயிர்ப்போடு வைக்கிறது.
ஜல்லிக்கட்டுக்காக போராடிய அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள்.
எங்கள் ஊர் வடதமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் அருகே உள்ள மோட்டூர் கிராமம்.
எங்களூரிலும் ஜல்லிக்கட்டு நடக்கும் ஆனால் அதற்க்கு பெயர் "மாடுவிடும் திருவிழா". ஜல்லிக்கட்டு மாட்டுக்கு "குமார் மாடு " என்று பெயர். தெருவின் ஒருமுனையிலிருந்து மாடுகளை அவிழ்த்து விடுவார்கள். அது எவ்வளவு குறைந்த நேரத்தில் தெருவின் அடுத்த முனையை அடைகிறது என்பது தான் வெற்றிக்கான கணக்கு.
பொதுவாக மாட்டு பொங்கல் அன்று அந்த பஞ்சாயத்தை சேர்ந்த மாடுகாளை மட்டும் கழுவி அலங்கரித்து தெருவில் விடுவார்கள். இளைஞசர்களும் பெரியவர்களும் தெருவின் இருபுறமும் நின்று மாட்டின் மீது கை போடுவார்கள் ( மாடு ஓடும்போது கையால் தட்டுவார்கள் ).
சிறுவர்கள் பெண்கள் அனைவரும் வீடுகளுக்கு மேல் அல்லது தட்டிகளுக்கு பின்னலிருந்து அதை உற்சாகமாக கண்டுகளிப்பார்கள்.
பெண்கள் சிறுமியரின் வண்ண உடைகள் தெருவின் இரு புறமும் கட்டிய தோரணம் போல இருக்கும்.
ஆண்கள் கபடி விளையாட்டில் நிற்பதுபோல இருவர் மூவர் என கைகோர்த்து மாடுகளை எதிர்கொள்வர்.
"மகுடி வீட்டு மாடு ", செவிடி ஊட்டு மாடு என்று , சொட்டி காலன் மாடு என்று ஊரில் ஒவ்வொரு மாட்டுக்கும் ஒவ்வொரு பெயர் இருக்கும். அந்த மாட்டுவைத்திருப்பவர்களுக்கு ஊரில் தனி மரியாதை உண்டு.
பெரும்பாலான மாடுகள் அவிழ்த்தவுடன் மின்னல் வேகத்தில் தெருவை கடக்கும். அதன் மீது கை போடவே முடியாது. சில நன்றாக மொத்து வாங்கும். மிகச்சில மட்டும் நின்று விளையாடும். தெருவில் நிற்கும் அத்தனை பெரும் வீட்டு திண்ணைகளில் ஏறி ஒடுங்கிக்கொள்வர்.
இந்த நிகழ்வு முடிந்ததும் ஊரில் உள்ள அனைத்து பசுமாடுகளை ஓரிடத்தில் குழுமச் செய்வார்கள். மாடுகளுக்கு நோய் வாராமல் இருக்க பூசை செய்வார்கள் . சிறுவர்களுக்கு அங்கு அனுமதி இல்லை. பெரிய இலையில் சோறு கொட்டி குங்குமம் சேர்த்து அதை பிசைந்து படைப்பார்கள், பூசை முடிந்ததும் அதை ஊர் முழுக்க வீடுகளில் உள்ள மாட்டு கொட்டகைகளில் "பொலியோ பொலி" "பொலியோ பொலி" என்று கத்திக்கொண்டே வீசுவார்கள். அப்படி வீசுபவரின் எதிரே ஊர்மக்கள் யாரும் வரக்கூடாது.
அதற்க்கு மறுநாள் காணும் பொங்கல் சிறுவர்களுக்கானது. அன்று சிறுவர்கள் கன்று குட்டி விடுவார்கள். நான் சிறுவனாக இருந்த போது எங்கள் பசுமாடு வெள்ளை கன்று குட்டி ஈன்றது. அதை எப்படியாவது குமார் மாடாக ஆக்குவது தான் என் அப்போதைய லட்சியமாக இருந்தது.
அதன் சின்ன திமிலில் சாக்கு பை போட்டு பல்லால் கடித்து இழுத்தால் அது பெரியதாக வளரும் என்று யாரோ சொன்னார்கள். தினமும் நான்கு முறை அதை செய்ய போக கன்றுக்குட்டி என்னை பார்த்தாலே மிரள ஆரமித்தது.
காணும் பொங்கல் அன்று கன்று குட்டியை குளிப்பாட்டி அதன் மொட்டு கொம்புகளில் வண்ணம் பூசி நான்கைந்து நண்பர்கள் கூடி நடுத்தெருவுக்கு அழைத்து சென்றோம். செல்லும் வழியெல்லாம் தகர டபாவில் நண்பர்கள் மேளம் அடித்துக்கொண்டே வந்தார்கள். பொங்கலுக்கு சேர்ந்த காசு பையில் இருந்தததால் துள்ளிக்கொண்டே வந்தோம். தெருவெல்லாம் சிறுவர்களின் கூட்டம் கன்று குட்டிகளின் கூட்டம். எங்கள் முறை வந்ததும் நாங்கள் அவிழ்த்துவிட்டோம். கன்று குட்டி ஓடவே இல்லை. கீழே குனிந்து மண்ணை மண்ணை முகர்ந்து பார்த்தது. மற்றவர்களுக்கும் கேலியாக இருந்தது. கூட வந்த நண்பர்களும் கழண்டு கொண்டனர். மறுபடியும் கன்று குட்டியை படாத பாடுபட்டு இழுத்து வந்து வீட்டில்கட்டுவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது.
காணும் பொங்கல் முடிந்து அடுத்த மாதத்தில் பரிசு வைத்து மாடுகளை விடும் போட்டி நடக்கும். போட்டிக்கு வெளியூரிலிருந்து மாடுகள் வரும். நிகழ்ச்சி திருவிழா போல நடக்கும்.
ஒவ்வொரு மாட்டுக்கு ஐந்து சுற்றுகள் அனுமதி. மாடு தெருவை கடக்கும் வேகத்தை ஐந்து முறையும் கணக்கிட்டு அதன் சராசரியை கணக்கிடுவார்கள். குறைந்த நேரத்தில் ஓடிய மாட்டுக்கு முதல் பரிசு.
பல வருடங்களுக்கு பிறகு " மாடுவிடும் திருவிழா " எங்களூரில் அறிவித்திருக்கிறார்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது.
முதல் பரிசு 25001 ரூபாய்.
இது போன்ற விழாக்கள் தான் கிராம வாழ்வை உயிர்ப்போடு வைக்கிறது.
ஜல்லிக்கட்டுக்காக போராடிய அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள்.